Latest Updates
-
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா? -
4 பிரெட், 1 கப் தயிர் இருந்தா 10 நிமிஷத்துல இந்த மாதிரி வடை சுடுங்க... மொறுமொறுனு டேஸ்ட் பிரமாதமா இருக்கும்... -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப பொஸசிவான கணவர்களாக இருப்பார்களாம்...இவங்க மனைவிகள்தான் பாவம்..உங்க ராசி இதுல இருக்கா? -
LPG Gas: தலைவிரித்தாடும் சிலிண்டர் தட்டுப்பாடு... சிலிண்டர் சீக்கிரம் தீராம இருக்க இப்படி சமையல் பண்ணுங்க...! -
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது...
கேரட் எலுமிச்சை சாதம்
உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவாக சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கேரட் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவாக சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கேரட் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். அதோடு இது சத்தானதும் கூட.

உங்களுக்கு கேரட் எலுமிச்சை சாதம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் எலுமிச்சை சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்மதி அரிசி - 1 கப்
* எலுமிச்சை சாறு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், முந்திரி மற்றும் வேர்க்கடலையைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய கேரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
* பிறகு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளற வேண்டும்.
* அதன் பின் வதக்கியதை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறிவிட்டால், சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications











