Just In
- 18 min ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 58 min ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
- 2 hrs ago இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- 4 hrs ago தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
Don't Miss
- Automobiles டாடாவின் இந்த கார் இவ்ளோ பாதுகாப்பானதா! ஷோரூம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுது! அதிர்ச்சியில் மாருதி சுஸுகி!
- News இந்த ஆண்டு UPSC தேர்வானவர்களில் 34.65% பெண்கள், 5.02% முஸ்லிம்கள்.. முழு டேட்டா இதோ!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Finance தங்கம் விலை பொசுக்கு குறைஞ்சிடுச்சு! கேட்கவே இனிமையா இருக்கு.. சென்னை, கோவை, மதுரையில் என்ன விலை?
- Sports கே எல் ராகுல் செய்த செயல்.. எச்சரித்த தோனி.. ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கிடைத்த தண்டனை
- Technology திடீர் பணம் தேவையா.. தனிநபர் கடன் வழங்கும் Google Pay.. எவ்வளவு கிடைக்கும்? எப்படி வாங்குவது?
- Movies கவினுடன் கிளாஷ் விடும் சந்தானம்.. யாரு கிங்குன்னு மே 10ம் தேதி தெரியும் என கலாய்க்கும் ரசிகர்கள்!
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
கேரட் எலுமிச்சை சாதம்
உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவாக சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கேரட் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுங்கள்.
உங்களுக்கு காலை வேளையில் இட்லி, தோசை சாப்பிட்டு அலுத்துவிட்டதா? வாய்க்கு ருசியாக அதே சமயம் சற்று வித்தியாசமான சுவையில் காலை உணவாக சாப்பிட வேண்டுமா? அப்படியானால் கேரட் எலுமிச்சை சாதம் செய்து சாப்பிடுங்கள். இது நிச்சயம் மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுமாறும் இருக்கும். அதோடு இது சத்தானதும் கூட.
உங்களுக்கு கேரட் எலுமிச்சை சாதம் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கேரட் எலுமிச்சை சாதத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* பாஸ்மதி அரிசி - 1 கப்
* எலுமிச்சை சாறு - 1/4 கப்
* பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
* கேரட் - 1 (துருவியது)
* வரமிளகாய் - 2
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன் (விருப்பமிருந்தால்)
* நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 1/2 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 1/2 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* வறுத்த வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் நன்கு கழுவி, குக்கரில் போட்டு 2 கப் நீரை ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து, 2 விசில் விட்டு இறக்கி, சாதத்தை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு குளிர வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, பெருங்காயத் தூள், முந்திரி மற்றும் வேர்க்கடலையைப் போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு பச்சை மிளகாய், துருவிய இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
* அதன் பின் துருவிய கேரட்டை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி விட்டு அடுப்பை அணைக்க வேண்டும்.
* பிறகு எலுமிச்சை சாற்றினை சேர்த்து கிளற வேண்டும்.
* அதன் பின் வதக்கியதை சாதத்துடன் சேர்த்து நன்கு கிளறிவிட்டால், சுவையான கேரட் எலுமிச்சை சாதம் தயார்.
Image Courtesy: naliniscooking