Latest Updates
-
பச்சை பயறு தோசையும், இஞ்சி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
கும்ப ராசியில் நிகழும் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமா இருக்கும்.. உஷார்.. -
செவ்வாய்-குருபகவானின் அரிய சேர்க்கை இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழப்போகுதாம் -
வெண்டைக்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செய்யுங்க - டேஸ்ட் தரமா இருக்கும் -
1 வாரமானாலும் கொத்தமல்லி கெட்டுபோகக் கூடாதா? அப்ப இந்த ட்ரிக்ஸை ஃபாலோ பண்ணுங்க.. -
குழந்தை பெற்றுக்கொள்ள 52 லட்சம் போனஸ் கொடுக்கும் நாடு - எந்த நாடு? ஏன் கொடுக்கிறது தெரியுமா? -
மகம் நட்சத்திரத்தில் 3 கிரகங்களின் சேர்க்கை: இந்த 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
பாவக்காயை இப்படி பொரியல் செய்யுங்க.. கசப்பே இருக்காது.. பிடிக்காதவங்களும் விரும்பி சாப்பிடுவாங்க.. -
புதன் கன்னி ராசிக்கு செல்வதால் சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
சுவையான... கேரட் சட்னி
கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.
உங்களுக்கு இட்லி, தோசைக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, பூண்டு சட்னி செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் இன்று சற்று வித்தியாசமாக கேரட் சட்னியை செய்து பாருங்கள். கேரட் சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, அடையுடன் சேர்த்து சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது என்பதால், அடிக்கடி கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. உங்களுக்கு கேரட்டை பொரியல் செய்து சாப்பிட்டு போரடித்திருந்தால், இனிமேல் கேரட் சட்னி செய்து சுவையுங்கள்.

கேரட் சட்னியை இரண்டு முறையில் தயாரிக்கலாம். ஒன்று தேங்காய் சேர்த்து செய்யலாம். மற்றொன்று வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து செய்யலாம். உங்களுக்கு கேரட் சட்னி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே தேங்காய் சேர்த்து தயாரிக்கப்படும் கேரட் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துருவிய கேரட் - 1 கப்
* தேங்காய் - 1/4 கப்
* சின்ன வெங்காயம் - 4
* பச்சை மிளகாய் - 7-8
* உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* புளி - 1 இன்ச்
* உப்பு - சுவைக்கேற்ப
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
தாளிப்பதற்கு...
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
* கறிவேப்பிலை - சிறிது
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* பின் அதே வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பின் சின்ன வெங்காயம், கேரட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* இறுதியாக தேங்காயை சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்ததும், அதை மிக்சர் ஜாரில் போட்டு, புளி மற்றும் உப்பு சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு கொடுத்துள்ள எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் சேர்த்து கிளறினால், சுவையான கேரட் சட்னி தயார்.
குறிப்பு:
* கேரட் சட்னியில் இனிப்பு அதிகம் தெரியக்கூடாது என்றால், பச்சை மிளகாயை சற்று அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
* சின்ன வெங்காயம் இல்லாவிட்டால், பாதி பெரிய வெங்காயத்தை பயன்படுத்துங்கள்.
Image Courtesy: naliniscooking



Click it and Unblock the Notifications