Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
சப்பாத்தி, பூரிக்கு இந்த பாம்பே பூரி மசாலாவை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Bombay Poori Masala Recipe In Tamil: விடுமுறை நாளில் தான் உங்கள் வீட்டில் காலை டிபனாக பூரி, சப்பாத்தி என்று செய்வீர்களா? அப்படி பூரி, சப்பாத்தி செய்யும் போது, அதற்கு சைடு டிஷ்ஷாக எப்போதும் உருளைக்கிழங்கு மசாலாவைத் தான் செய்வீர்களா? அதுவும் அந்த உருளைக்கிழங்கு மசாலாயும் ஒரே சுவையில் தான் செய்வீர்களா? அப்படியானால் ஒருமுறை சற்று வித்தியாசமாக பாம்பே பூரி மசாலாவை செய்யுங்கள்.
இந்த மசாலாவிற்கு வெங்காயம், தக்காளி என்று எதுவுமே தேவையில்லை. உருளைக்கிழங்கு மட்டும் இருந்தாலே 10 நிமிடத்தில் சட்டென்று பூரி மசாலாவை செய்யலாம். இந்த ஸ்டைலில் மசாலா செய்தால் வழக்கமாக சாப்பிடுவதை விட இன்னும் அதிகமாக சாப்பிடுவார்கள். முக்கியமாக குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுக்கும் போது, விரும்பி சாப்பிடுவார்கள்.

உங்களுக்கு பாம்பே பூரி மசாலாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பாம்பே பூரி மசாலா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
வேக வைப்பதற்கு...
* உருளைக்கிழங்கு - 4
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* தண்ணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கசூரி மெத்தி - 1/2 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் உருளைக்கிழங்குகளை இரண்டு துண்டுகளாக்கி, குக்கரில் போட
வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, கிழங்கு
மூழ்கும் அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 3 விசில்
விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில்
எடுத்து வைத்து, அதன் தோலை நீக்கிவிட்டு, உருளைக்கிழங்கை நன்கு
மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கசூரி மெத்தியை கையால் நசுக்கி சேர்த்து கிளறி விட
வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து,
குறைவான தீயில் வைத்து பச்சை வாசனை போக கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, சிறிது
நீரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, அத்துடன் பெருங்காயத் தூள்
சேர்த்து கிளறி, மூடி வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க வைக்க
வேண்டும்.
* கிழங்கு நன்கு வெந்ததும், அதில் கொத்தமல்லியை சேர்த்து கிளறி
இறக்கினால், சுவையான பாம்பே பூரி மசாலா தயார்.



Click it and Unblock the Notifications











