Latest Updates
-
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா?
5 அப்பளம் இருந்தா.. மதியம் இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் சும்மா வேற லெவல்-ல இருக்கும்...
Appala Kootu Recipe In Tamil: மதிய வேளையில் சாதத்திற்கு ஒரு அருமையான சைடு டிஷ் செய்ய நினைக்கிறீர்களா? ஆனால் வீட்டில் காய்கறி எதுவும் இல்லையா? உங்கள் வீட்டில் அப்பளம் உள்ளதா? அப்படியானால் அந்த அப்பளத்தைக் கொண்டு குறைவான நேரத்தில் அட்டகாசமான சுவையைக் கொண்ட கூட்டு செய்யுங்கள். இந்த அப்பள கூட்டு புளிக்குழம்புடன் சாப்பிட அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
உங்களுக்கு அப்பள கூட்டு எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே அப்பள கூட்டு ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* கடலைப்பருப்பு - 1/4 கப்
* தண்ணீர் - 1 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)
* சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
கூட்டு செய்வதற்கு...
* எண்ணெய் - 1 1/2 டீஸ்பூன்
* கடுகு - 1/2
* உளுத்தம் பருப்பு - 1/2
* சீரகம் - 1/2
* வரமிளகாய் - 3
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (தட்டிக் கொள்ளவும்)
* கறிவேப்பிலை - 1 கொத்து
* உப்பு - சிறிது
* சுடுதண்ணீர் - 3/4 கப்
* பொரித்த அப்பளம் - 5-7
செய்முறை:
* முதலில் கடலைப் பருப்பை நீரில் 2 முறை கழுவிவிட்டு, பின் அதில்
நீரை ஊற்றி 1/2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் குக்கரில் ஊற வைத்த கடலைப்பருப்பில் உள்ள நீரை
வடிகட்டிவிட்டு, பருப்பை மட்டும் சேர்த்து, அதில் 1 கப் நீரை ஊற்றி,
மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, மிதமான தீயில்
வைத்து 2 விசில் விட்டு இறக்க வேண்டும்.
* விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை லேசாக மசித்து விட
வேண்டும்.
* பின் அதில் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து, அத்துடன்
சாம்பார் தூள் மற்றும் சிறிது உப்பு சேர்த்து, குக்கரை மூடி அடுப்பில்
வைத்து, 1 விசில் விட்டு இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
விசில் போனதும் குக்கரைத் திறந்து தனியாக வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், வரமிளகாய் சேர்த்து
தாளிக்க வேண்டும்.
* பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தட்டி வைத்துள்ள பூண்டு
பற்கள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து நன்கு வெங்காயம்
மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் குக்கரில் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அத்துடன்
3/4 கப் சுடுநீரை ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.
* கூட்டு கொதிக்க ஆரம்பித்ததும், அதில் பொரித்து வைத்துள்ள அப்பளத்தை
நொறுக்கி சேர்த்து கிளறி, அடுப்பை அணைத்துவிட்டு, மேலே கொத்தமல்லியைத்
தூவி கிளறினால், சுவையான அப்பள கூட்டு தயார்.



Click it and Unblock the Notifications











