Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
1 கப் பூண்டு, 10 வர மிளகாய் இருந்தா இந்த ஆந்திரா சட்னியை அரைங்க... இட்லி, தோசைக்கு சுருக்குனு இருக்கும்...!
Andhra Style Garlic Chilli Chutney Recipe in Tamil: காலையில் இட்லி, தோசைக்கு என்ன சட்னி செய்வதென்று முடிவெடுப்பது கடினமாக உள்ளதா? சற்று காரமான அதே சமயம் சுவையான சட்னியை செய்ய விரும்புகிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் சட்னியை முயற்சி செய்து பாருங்கள். இந்த சட்னி வழக்கமாக செய்யும் கார சட்னியை விட சற்று வித்தியாமான சுவையில் சூப்பராக இருக்கும்.
ஒருமுறை இந்த சட்னியை அரைத்து விட்டால் அதன் பிறகு இட்லி, தோசை என்றாலே உங்களுக்கு இந்த சட்னிதான் நியாபகத்திற்கு வரும். முக்கியமாக இந்த சட்னி செய்வதற்கு ஒரு சில பொருட்களே போதுமானது. இந்த சட்னி செய்வதற்கு மிகவும் எளிதாகவும் அதேசமயம், சுவையாகவும் இருக்கும். பெரும்பாலான ஆந்திர ஹோட்டல்களில் இந்த சட்னி நிச்சயம் பரிமாறப்படும்.

உங்களுக்கு ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆந்திரா ஸ்டைல் பூண்டு மிளகாய் சட்னியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- 20 பூண்டு பல்
- 10 காஷ்மீரி மிளகாய்
- 2 வர மிளகாய்
- 1 டீஸ்பூன் புளி
- ½ டீஸ்பூன் வெல்லம்
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- தேவையான அளவு உப்பு
தாளிக்க:
- 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- ஒரு கொத்து கறிவேப்பிலை
செய்முறை:
- முதலில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும்.
- அந்த சூடான நீரில் காஷ்மீரி மிளகாய் மற்றும் வர மிளகாயை போட்டு 10 நிமிடம் ஊற விடவும்.
- முழுமையாக ஆறிய பிறகு, சிவப்பு மிளகாய்களை மட்டும் வடிகட்டி எடுக்கவும். இந்த ஊறவைத்த தண்ணீரை வீணாக்காமல் தனியாக எடுத்து வைக்கவும்.
- ஒரு மிக்சி ஜாரில் வடிகட்டிய வர மிளகாய், காஷ்மீரி மிளகாய், 20 பல் பூண்டு மற்றும் 1 டீஸ்பூன் புளி சேர்க்கவும்.
- பின்னர் ஊறவைத்த தண்ணீரில் இருந்து சிறிதளவு சேர்க்கவும்.
- இதை நன்றாக மென்மையான விழுதாக அரைக்கவும்.
- ஒரு கடாயில் ½ டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெயைக் காயவைத்து, அதில் அரைத்த மிளகாய் பூண்டு விழுதைச் சேர்க்கவும்.
- மிக்ஸி ஜாரை ¼ கப் தண்ணீர் விட்டு அலசி, அந்த தண்ணீரையும் சேர்க்கவும்.
- கொதிக்கத் தொடங்கும் போது ஒரு மூடியை வைத்து மூடி வைக்கவும்.
- பூண்டின் பச்சை வாசனை போகும் வரை அடிக்கடி கிளறி விடவும்.
- சட்னி நன்கு கொதித்து கெட்டியாகத் தொடங்கும் போது தேவையான அளவு உப்பு மற்றும் வெல்லம் சேர்க்கவும்.
- நன்றாக கிளறி விட்டு அரை ஸ்பூன் நல்லெண்ணெயை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
- சட்னியை தாளிக்க ஒரு சிறிய கடாயில் ல்லெண்ணெயைக் காயவைத்து, ஒரு டீஸ்பூன் கடுகு மற்றும் சில கறிவேப்பிலைகளைச் சேர்த்து தாளிக்கவும்.
- கடுகு வெடிக்கத் தொடங்கியதும் அதை சட்னி மீது நன்கு கிளறினால் கலர்புல்லான சுவையான ஆந்திரா ஸ்டைல் பூண்டு வர மிளகாய் சட்னி ரெடி!



Click it and Unblock the Notifications