Aloo Paneer Recipe : ஆலு பன்னீர் கிரேவி

பன்னீர் பிரியர்களே! இன்று உங்களுக்காக ஒரு அற்புதமான பன்னீர் ரெசிபியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது தான் ஆலு பன்னீர் கிரேவி. இந்த ஆலு பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரியுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

Posted By:

பன்னீர் பிரியர்களே! இன்று உங்களுக்காக ஒரு அற்புதமான பன்னீர் ரெசிபியைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். அது தான் ஆலு பன்னீர் கிரேவி. இந்த ஆலு பன்னீர் கிரேவி சப்பாத்தி, பூரி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும்.

Aloo Paneer Gravy Recipe In Tamil

உங்களுக்கு ஆலு பன்னீர் கிரேவி எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே ஆலு பன்னீர் கிரேவியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

* சீரகம் - 1 டீஸ்பூன்

* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)

* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்

* மல்லித் தூள் - 1 டேபிள் ஸ்பூன்

* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

* தக்காளி - 2 (நறுக்கியது)

* கசகசா - 1 1/2 டேபிள் ஸ்பூன்

* உருளைக்கிழங்கு - 2 (தோலுரித்து துண்டுகளாக்கப்பட்டது)

* பன்னீர் - 200 கிராம்

* உப்பு - சுவைக்கேற்ப

* சர்க்கரை - 1 டீஸ்பூன்

* தண்ணீர் - தேவையான அளவு

* கரம் மசாலா - 1 1/2 டீஸ்பூன்

* கொத்தமல்லி - ஒரு கையளவு (நறுக்கியது)

செய்முறை:

* முதலில் ஒரு வாணலியில் தக்காளி மற்றும் கசகசாவை போட்டு, நீரை ஊற்றி அடுப்பில் வைத்து, மூடி வைத்து 10-15 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் அதை இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகத்தை சேர்த்து தாளிக்க வேண்டும்.

* பின் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* பின்பு அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கிளறி, உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

* பிறகு சிறிது நீரை ஊற்றி மிதமான தீயில் 15 நிமிடம் மூடி வைத்து உருளைக்கிழங்கை வேக வைக்க வேண்டும்.

* உருளைக்கிழங்கு நன்கு வெந்ததும், அரைத்த தக்காளியை ஊற்றி கிளறி, வேண்டுமானால் இன்னும் சிறிது நீரை ஊற்றி, சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

* கிரேவியில் இருந்து பச்சை வாசனை போனதும், பன்னீர் துண்டுகளை சேர்த்து கிளறி, குறைவான தீயில் எண்ணெய் பிரியும் வரை கொதிக்க வைத்து, கரம் மசாலா மற்றும் கொத்தமல்லியைத் தூவி கிளறி இறக்கினால், ஆலு பன்னீர் கிரேவி தயார்.

Image Courtesy: yummytummyaarthi

[ of 5 - Users]
Desktop Bottom Promotion