பெற்றோர்களே! உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? அப்ப நீங்களே உங்க குழந்தை வாழ்க்கைய வீணாக்கிடுவீங்க!

உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத பெற்றோர்களிடம் வளரும் குழந்தைகள் தனிமையாகவும் உணர்ச்சி ரீதியாக புறக்கணிக்கப்பட்டதாகவும் உணரலாம். அவர்கள் வளரும் பருவத்தில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

What Are Signs Of Immature Parents And How To Mange It In Tamil

நீங்கள் உங்கள் குழந்தைக்கு உணவு, உடைகள் மற்றும் அவர்களுக்கு பிடிப்பது அல்லது அவர்கள் கேட்பதை வாங்கிகொடுக்கலாம். ஆனால் ஒரு பெற்றோராக உங்கள் பொறுப்பு அதோடு முடிவடையவில்லை. சிலருக்கு ஆரோக்கியமற்ற பெற்றோருக்குரிய பழக்கவழக்கங்கள் மற்றும் அணுகுமுறைகள் உள்ளன. அவற்றில் உணர்ச்சி ரீதியில் முதிர்ச்சியடையாமல் இருப்பதும் ஒன்றாகும்.

உங்கள் குழந்தையுடன் பழகும்போது கோபம் அல்லது தேவையற்ற ஆதிக்கத்தைப் பயன்படுத்தினால், நீங்கள் தவறாக நடந்துகொள்கிறீர்கள் என்று அர்த்தம். உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத பெற்றோராக இருப்பது உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கும் ஆரோக்கியமற்றது. நீங்கள் உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத பெற்றோரா என்பதை அறிந்து கொள்ள இக்கட்டுரையை படியுங்கள்.

உணர்ச்சி முதிர்ச்சியின்மை என்றால் என்ன?

ஒருவரின் உணர்ச்சி நிலைகள் அவர்களின் வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியடைந்ததாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், அது உணர்ச்சி முதிர்ச்சியின்மை என்றழைக்கப்படும். இது ஒருவரின் நடத்தையை முற்றிலும் பாதிக்கிறது. முதிர்ச்சியடையாத உணர்ச்சிகளைக் கொண்டவர்கள் தங்கள் சொந்த உணர்ச்சி நிலைகளை துல்லியமாக அடையாளம் காணவும், மற்றவர்களின் உணர்ச்சி நிலைகளை தெரிந்துகொள்ளவும் போராடுகிறார்கள்.

விஷயங்களை சரியாக புரிந்துகொள்ளாததால், அதை அவர்கள் தவிர்க்க அல்லது நிராகரிக்க முனைகிறார்கள். உறவுகளில் அழுத்தத்தை ஏற்படுத்தும் இந்த நிலை, பெற்றோருக்கு என்று வரும்போது கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். எனவே, நீங்கள் ஆரோக்கியமான மகிழ்ச்சியான பெற்றோர்-குழந்தை உறவை விரும்பினால், உணர்ச்சி முதிர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.

அறிகுறிகள்

நீங்கள் உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாதவரா? என்பதைக் கண்டுபிடிப்பது உங்களுக்கு எளிதாக இருக்காது. உங்களிடம் தோன்றும் அறிகுறிகள் மூலம், நீங்கள் அதை தெரிந்துகொள்ளலாம். உங்கள் குழந்தைகள் உட்பட மற்றவர்களை விட உங்கள் சொந்த உணர்ச்சித் தேவைகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பதும் ஒரு அறிகுறி.

உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத பெற்றோர்கள் பெரும்பாலான நேரங்களில் மிகவும் கடினமானவர்களாகவும், பெரும்பாலான சூழ்நிலைகளில் வளைந்து கொடுக்காதவர்களாகவும் இருப்பார்கள். அன்றாட வாழ்க்கையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப அவர்களால் மாற்ற முடியாது. இது நீங்கள் ஒரு உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சி அடையாத பெற்றோராக இருப்பதை காட்டுகிறது.

உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாதவர்கள் மற்றவர்களின் எதிர்வினைகளைப் பற்றி அதிக உணர்திறன் உடையவர்களாக இருப்பார்கள். கருத்து வேறுபாடு, கோபம், சோகம் அல்லது துக்கம் ஆகியவற்றை உணர்ச்சி ரீதியாக முதிர்ச்சியடையாத நபர்கள் வெளிப்படுத்தும் வாய்ப்பு மிகக் குறைவு.

அதிகார பாணியை கொண்ட பெற்றோர்கள்

அதிகாரம் செலுத்தும் பெற்றோர்களிடம் இருக்கும் குழந்தைகளின் வாழ்க்கை மிகவும் கண்டிப்பான வகையில் கட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கும். ஆக்கப்பூர்வமாக இருப்பதற்கும் அல்லது வெவ்வேறு கண்ணோட்டங்களில் யோசிப்பதற்கும் சுயமாக சிந்திக்க் வேண்டிய செயல்திறனை கொண்டிருக்க வேண்டும். ஆர்வக்கோளாறில் முடிவெடுப்பது, மோசமான செயல்பாட்டு நிலை, ஆல்கஹால் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு ஆகியவற்றின் ஆபத்து காரணிகளால் கூட உணர்ச்சி முதிர்ச்சியின்மை நிகழலாம்.

குழப்பமான, அமைதியற்ற சூழலில் வளரும் குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கை, ஒவ்வொரு இடத்திலும் போராட வேண்டியதாக இருக்கலாம். குழந்தைகள் சுதந்திரமான நபர்களாக வளரும்போது இது நிலையற்ற உளவியல் கட்டமைப்பின் அபாயத்தை அதிகரிக்கிறது. அவர்கள் குறைந்த சுயமரியாதை, மனச்சோர்வு, பதட்டம், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு, குடும்ப வன்முறை மற்றும் பிந்தைய மனஉளைச்சல் ஆகியவற்றுடன் போராடலாம்.

உங்கள் சொந்த உணர்ச்சி நிலையை நீங்கள் அடையாளம் காண வேண்டும். வருத்தமும் கோபமும் இயல்பானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த செயல்முறை ஒரு குழந்தைக்கு எதிர்மறை உணர்ச்சிகளை இயல்பாக்க உதவுகிறது. மகிழ்ச்சியைப் போலவே சோகமும் ஒரு அனுபவம் என்பதை புரிந்துகொண்டு கடந்து செல்ல கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, உங்கள் குழந்தை மற்றும் அவர்களின் மகிழ்ச்சிக்காக சிறந்த பெற்றோராக இருக்க முயற்சி செய்யுங்கள்.

Story first published: Saturday, March 25, 2023, 20:04 [IST]
Desktop Bottom Promotion