Just In
- 13 min ago போலந்து மக்களால் கடவுளாக கொண்டாடப்படும் இந்திய அரசர்... அப்படி அந்த மக்களுக்கு அவர் என்ன செய்தார் தெரியுமா?
- 38 min ago Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- 1 hr ago கோடை காலத்தில் முட்டை சாப்பிடலாமா? கூடாதா? நிபுணர்கள் சொல்லுவது என்ன?
- 2 hrs ago திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
Don't Miss
- Automobiles சும்மா ஓட்டி பாக்கலாம்னு ஜீப் விராங்களர் காருல ஏறிட்டீங்க திரும்பி இறங்க மனசே வராது! ஆஃப்-ரோடு அரக்கன்! வீடியோ
- Finance வீடு கட்டணுமா..அரசின் இந்த திட்டம் இருக்கே..நீங்களும் லிஸ்ட்ல இருக்கீங்களானு பாருங்க!
- Technology இதுதான் புதிய Infinix போன்.. 108MP கேமரா.. JBL சவுண்ட்.. 45W சார்ஜிங்.. எந்த மாடல்? எப்போது அறிமுகம்?
- News தாலி சர்ச்சை.. மோடிக்கு காங்கிரஸ் பதிலடி.. தங்கத்தை நாட்டுக்கு தந்த இந்திராவின் போட்டோ ட்ரெண்ட்!
- Sports தோனியே சரி.. முஸ்தஃபிசுர்-க்கு பதிலாக வரும் ஸ்பின்னர்.. சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் மாற்றம்!
- Movies மாட்டிக்கினாரு ஒருத்தரு.. சமந்தாவின் மாஜி கணவர் அந்த நடிகையுடன் டேட்டிங்கா?.. தீயாய் பரவும் பிக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
நஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள்!
நஞ்சுக்கொடி என்பது பிளாஸ்டோசிஸ்ட் என்பதால் உருவாக்கப்படுகிறது; நஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
நஞ்சுக்கொடி என்பது பிளாஸ்டோசிஸ்ட் என்பதால் உருவாக்கப்படுகிறது; இந்த பிளாஸ்டோசிஸ்ட் என்னும் முட்டை தான் குழந்தையை உருவாக்கும். குழந்தையை உருவாக்கும் அதே முட்டையில் இருந்து தான் நஞ்சுக்கொடியும் உருவாகிறது; இதில் இருந்து தான் தொப்புள் கொடி தோன்றி தாயை குழந்தையுடன் இணைக்கிறது.
பலருக்கும் தொப்புள் கொடி எப்படி தாயோடு குழந்தையை இணைக்கிறது, நஞ்சுக்கொடி என்றால் என்ன, இந்த கொடிகள் எப்படி உருவாகும், இதை வெட்டினால் பெண்களின் குடல்கள் பாதிக்குமா என்று பல கேள்விகள் - சந்தேகங்கள் இருக்கும். நஞ்சுக்கொடி முந்து பிரசவம் பற்றி அறிய வேண்டிய தகவல்கள் பற்றி இந்த பதிப்பில் படித்து அறியலாம்.
நஞ்சுக்கொடி - தொப்புள் கொடி
பெண்கள் கர்ப்பம் அடைந்தவுடன், அவர்களின் வயிற்றில் குழந்தை உருவாக தொடங்கும் நேரத்தில், குழந்தையுடன் சேர்ந்து அதே கருமுட்டையில் இருந்து, கருமுட்டையின் ஒரு பாகத்தில் இருந்து உருவாகும் விஷயம் தான் இந்த நஞ்சுக்கொடி. நஞ்சுக்கொடியில் இருந்து உருவாகி நீளும் தொப்புள் கொடி கருவறையில் உருவாகும் சிசுவுடன் இணைகிறது.
நஞ்சுக்கொடி தாயின் உடலில் இருந்து சத்துக்களை உறிஞ்சி அதை தொப்புள் கொடி வாயிலாக குழந்தையிடம் சேர்க்கிறது.
கொடிகளின் சரியான நிலை!
நஞ்சுக்கொடி எப்பொழுதும் கருவறையின் மேற்பாகத்தில் இருப்பது நல்லது. இந்த நஞ்சுக்கொடியை பற்றி சரியான புரிதல் மற்றும் இதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்னென்ன என்று கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்தம் கணவன்மார்கள் நன்கு தெரிந்திருக்க வேண்டியது அவசியம். இந்த நஞ்சுக்கொடியின் நிலை மாற்றம் அடைந்தால் கர்ப்பிணி பெண்களின் பிரசவத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.
கொடி சுற்றி இருத்தல் என்று கூறக்கேட்டிருப்போம்; அது போன்று பல வித பிரச்சனைகளை இந்த கொடிகளின் நிலை மாற்றம் ஏற்படுத்தும்.
நஞ்சுக்கொடியின் வேலை!
நஞ்சுக்கொடியின் மூலமாக தான் கருவறையில் வளரும் கருவிற்கு தேவையான உணவு, ஆக்சிஜன் போன்ற முக்கிய விஷயங்கள் அனுப்பப்படுகின்றன. குழந்தைகள் கருவறையில் எப்படி சுவாசிக்கும் என்ற கேள்வி பலரின் மனதில் இருக்கும் அல்லவா - அந்த கேள்விக்கான விடை நஞ்சுக்கொடி என்பது தான். ஆம் நண்பர்களே நஞ்சுக்கொடி தான் கருவறையில் குழந்தைகள் உயிர்வாழ ஆக்சிஜன் அளிக்கிறது.
நஞ்சுக்கொடி வெட்டப்படுதல்
பிரசவ சமயத்தில் குழந்தைகள் பிறக்கும் பொழுது, அவர்கள் மூச்சு விட்டு உயிர் வாழ நஞ்சுக்கொடி திரவம் குழந்தையின் நுரையீரலில் சிறிதளவு இருக்கும்; அதன் உதவியால் குழந்தைகள் பிரசவ சமயத்தில் சுவாசித்து, கருவறையில் இருந்து வெளிவந்த பின், சாதாரண மனிதர்களை போல சுவாசிக்க தொடங்கி விடுவர்.
குழந்தைகள் பிறந்த பின் தொப்புள் கொடி வெட்டப்படும் அல்லவா, அப்பொழுது தான் நஞ்சுக்கொடியும் குழந்தையின் உடலின் இணைப்பில் இருந்து அகற்றப்படுகிறது.
மேலும் படிக்க: இரத்தம் கலந்து வெளிவரும் தாய்ப்பாலை குடித்தால் குழந்தைகள் இறந்து விடுமா?
நஞ்சுக்கொடி முந்து பிரசவம்
நஞ்சுக்கொடி முந்து பிரசவம் என்பது நஞ்சுக்கொடியின் நிலை மாறி, அது தாயின் பிறப்புறுப்பை முழுமையாக மறைத்தல் அல்லது பாதி அளவு மறைத்தல் என்பது தான். பொதுவாக நஞ்சுக்கொடி கருவறையின் மேற்புறத்தில் இருக்கும் என்று கூறி உள்ளோம்; அந்த நிலை மாற்றம் அடைந்து கீழாக வந்து விட்டால், அதனால் பிரசவத்தில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படலாம்.
தாமரை பிரசவம் - லோட்டஸ் பர்த்
தாமரை பிரசவம் என்பது என்ன என்று பலருக்கும் தெரியாது; குழந்தைகளை பிரசவிக்கும் பொழுது தொப்புள் கொடி வெட்டப்படும் அல்லவா, இந்த தாமரை பிரசவத்தில் குழந்தைகள் பிறக்கும் பொழுது அவர்களின் தொப்புள் கொடி வெட்டப்பட மாட்டாது. தொப்புள் கொடி வெட்டப்பட வில்லை எனில், குழந்தைகளின் வயிற்றில் இணைந்து இருக்கும் தொப்புள் கொடி மற்றும் நஞ்சுக்கொடி இரண்டும் அப்படியே குழந்தை பிறந்த பிறகும் கூட இணைந்து இருக்கும்.
விழிப்புணர்வு தேவை!
நம் பகுதிகளில் கர்ப்பம் மற்றும் பிரசவம் என்பது பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லை என்று தான் கூற வேண்டும்; ஏனெனில் கர்ப்பத்தில் குழந்தை வளரும் என்ற விஷயத்தை விட வேறு எதுவும் நமக்கு தெரிந்து இருப்பதில்லை.
குழந்தைகள் கருவில் வளரும் பொழுது அவர்களுக்கு நடக்கும் விஷயங்கள், அவர்களுடன் சேர்ந்து உருவாகி வளரும் விஷயங்கள் மற்றும் குழந்தைகள் வளர்ந்து வெளிப்படும் தருணமான பிரசவ சாமயத்தில் என்னென்ன பிரச்சனைகள் நேரிட வாய்ப்பு உள்ளது போன்ற தகவல்களை நாம் அறிந்து இருந்தால், பிரசவத்தை பற்றிய புரிதல் இருந்தால் பிரசவ சமயத்தில் தாயையும், சேயையும் எளிதில் காத்து விடலாம்.
மேலும் படிக்க: உங்களின் எதிர்ப்பு சக்தியை இரு மண்டங்காக்கணுமா..? அப்போ இத கொஞ்ச செஞ்சு பாருங்க..