Just In
- 7 min ago 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- 1 hr ago Garlic Peels: பூண்டின் தோலில் இவ்வளவு நன்மைகளா? என்னென்ன-ன்னு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க..
- 1 hr ago Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- 2 hrs ago 3 முள்ளங்கியும், 1 தக்காளியும் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு செமயா இருக்கும்..
Don't Miss
- Sports எத்தனை விக்கெட் போனாலும் சரி.. கதறவிட்ட குஜராத் டைட்டன்ஸ்.. கதிகலங்கிப் போன டெல்லி கேபிடல்ஸ்
- News சமூக வலைதள பதிவிற்காக பாஜக மீது எப்ஐஆர் போட்ட இந்திய தேர்தல் ஆணையம்.. அதிர வைத்த காங்கிரஸ்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Movies வருஷத்துக்கு ஒரு படமாவது பண்ணுங்க.. விஜய்யை சந்தித்து அதிரடியாக கோரிக்கை வைத்த பிரபலம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மன அழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும் தெரியுமா?
மனஅழுத்தம் தாய்ப்பால் சுரப்பை பாதிக்கும்
மனஅழுத்தம் பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கிறது. குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்கள் மனஅழுத்தத்துடன் காணப்படுவது, குழந்தைகளுக்கு ஆபத்தை அளிக்கும். தாய்ப்பால் என்பது குழந்தைகளுக்கு மிக முக்கியமானது, பால் கொடுக்கும் தாய்மார்கள் மனஅழுத்தத்துடன் இருப்பதால், தாய்ப்பால் கொடுப்பதில் பிரச்சனை ஏற்படும். அதுபற்றி இந்த பகுதியில் காணலாம்.
தாய்ப்பால் :
தாய்ப்பால் கொடுப்பது குழந்தை மற்றும் தாயின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். தாய்ப்பாலில் தான் குழந்தைக்கு தேவையான அத்தனை சத்துக்களும் உள்ளன. தாய் மனது அல்லது உடல் அளவில் பாதிக்கப்பட்டால், அது அவளது குழந்தையையும் தான் பாதிக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் குழந்தையின் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. மேலும் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான சத்துக்கள் உள்ளது.
தாமதம்
தாய் மிக மன அழுத்தத்துடன் இருந்தால், தாய்ப்பால் சுரக்க தாமதமாகும். ஒரு சில பெண்களுக்கு மன அழுத்தம் காரணமாக, குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பால் சுரக்க 2-3 நாட்கள் கூட ஆகலாம்.
ஒரு மணிநேரத்திற்குள்..
குழந்தை பிறந்த ஒரு மணிநேரத்திற்குள் சுரக்கும் தாய்ப்பாலில் அனைத்து சத்துக்களும் உள்ளன. அதனால் தான் குழந்தை பிறந்த ஒருமணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுப்பது அவசியமாகிறது.
வேண்டாம்!
எனவே கர்ப்ப காலத்திலும் சரி, குழந்தை பிறந்த பிறகும் சரி, மனதை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். மன வளம் தான் ஆரோக்கியத்தின் அடிப்படையாகும்.