Latest Updates
-
கோடை வெயிலால் உங்க முகம் டல்லடிக்குதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
வெளிநாட்டில் விவாகரத்தா? குழந்தைகளை பார்க்க முடியாமல் தவிக்கும் தாய்மார்கள் - செலினா ஜெயிட்லியின் உருக்கமான பதிவு! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்காரங்க உஷாரா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
வீட்டில் பணவரவு அதிகரிக்கணுமா? அமேசான் சேலில் இந்த வாஸ்து பொருட்களை மிஸ் பண்ணாதீங்க! -
செஃப் வாணி அவர்களின் முருங்கைக்காய் பொரியல் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... செமயா இருக்கும்.. -
Hanta Virus: கோவிட்-19 விட அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் ஹன்டா வைரஸ் - இதன் அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? -
இன்றைய அபிஜித் முகூர்த்தத்தில் இந்த வாஸ்து மாற்றங்களைச் செய்யுங்க… பணவரவு தானாக அதிகரிக்கும்! -
செவ்வாய் உருவாக்கும் விபரீத ராஜயோகம்: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
வெள்ளை குழி பணியாரமும், கார சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 மே 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுதாம்
கருவிலேயே குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!
குழந்தையின் மூளையானது கருவிலேயே வளர ஆரம்பிக்கிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதே கர்ப்பிணிகள் குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிப்பதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும். கருவில் வளரும் குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன.
தாய்மார்கள் அதனைத் தெரிந்து கொண்டு கர்ப்ப காலத்திலேயே அவற்றைப் பின்பற்றினால், நல்ல புத்திசாலியான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். இங்கு பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒமேகா-3 உணவுகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், கருவில் வளரும் குழந்தையின் அறிவுத்திறன் மேம்படும்.

மன அழுத்தம் கூடாது
கர்ப்பணிகள் கர்ப்ப காலத்தில் மன அழுத்தமின்றி இருக்க வேண்டும். மன அழுத்தம் இருந்தால், அது குழந்தைகளின் மன வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

இசை
இசையும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. தாய் எந்த ஒரு சப்தத்தைக் கேட்டாலும், அது குழந்தைக்கும் கேட்கும். எனவே நல்ல இனிமையான இசையை கர்ப்பிணிகள் கேட்பதால், மனம் அமைதியடைந்து, குழந்தையின் அறிவுத்திறன் வளர உதவியாக இருக்கும்.

இதமான தடவல்
கருவில் வளரும் குழந்தைக்கு தாயின் இதமான அரவணைப்பு அவசியம். அதிலும் கர்ப்பிணிகள் அடிக்கடி தங்களது வயிற்றை இதமாக தடவி விடுவதன் மூலம், குழந்தை சௌகரியத்தை உணர்வதோடு, குழந்தையின் மூளை வளர்ச்சியும் ஆரோக்கியமாக தூண்டிவிடப்படும்.

நல்ல புத்தகம்
முக்கியமாக கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தைக் கொள்வது, குழந்தையின் அறிவுத்திறனை மேன்மேலும் அதிகரிக்கும்.

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் வேண்டாம்
ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை குழந்தையின் உடல்நலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இத்தகைய பழக்கங்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications