Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
கருவிலேயே குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள்!!!
குழந்தையின் மூளையானது கருவிலேயே வளர ஆரம்பிக்கிறது. எனவே கர்ப்பமாக இருக்கும் போதே கர்ப்பிணிகள் குழந்தையின் அறிவுத்திறனை அதிகரிப்பதற்கான வழிகளில் ஈடுபட வேண்டும். கருவில் வளரும் குழந்தையின் மன வளர்ச்சி மற்றும் அறிவுத்திறனை அதிகரிக்க பல காரணிகள் உள்ளன.
தாய்மார்கள் அதனைத் தெரிந்து கொண்டு கர்ப்ப காலத்திலேயே அவற்றைப் பின்பற்றினால், நல்ல புத்திசாலியான குழந்தையைப் பெற்றெடுக்கலாம். இங்கு பிறக்கும் குழந்தை புத்திசாலியாக இருக்க கர்ப்பிணிகள் பின்பற்ற வேண்டியவைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது.

ஒமேகா-3 உணவுகள்
கர்ப்ப காலத்தில் பெண்கள் ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம், கருவில் வளரும் குழந்தையின் அறிவுத்திறன் மேம்படும்.

மன அழுத்தம் கூடாது
கர்ப்பணிகள் கர்ப்ப காலத்தில் மன அழுத்தமின்றி இருக்க வேண்டும். மன அழுத்தம் இருந்தால், அது குழந்தைகளின் மன வளர்ச்சி மற்றும் அறிவுத்திறன் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகள் மனதை அமைதியுடன் வைத்துக் கொள்ள தியானத்தில் ஈடுபடுவது நல்லது.

இசை
இசையும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் முக்கிய பங்கை வகிக்கிறது. தாய் எந்த ஒரு சப்தத்தைக் கேட்டாலும், அது குழந்தைக்கும் கேட்கும். எனவே நல்ல இனிமையான இசையை கர்ப்பிணிகள் கேட்பதால், மனம் அமைதியடைந்து, குழந்தையின் அறிவுத்திறன் வளர உதவியாக இருக்கும்.

இதமான தடவல்
கருவில் வளரும் குழந்தைக்கு தாயின் இதமான அரவணைப்பு அவசியம். அதிலும் கர்ப்பிணிகள் அடிக்கடி தங்களது வயிற்றை இதமாக தடவி விடுவதன் மூலம், குழந்தை சௌகரியத்தை உணர்வதோடு, குழந்தையின் மூளை வளர்ச்சியும் ஆரோக்கியமாக தூண்டிவிடப்படும்.

நல்ல புத்தகம்
முக்கியமாக கர்ப்பிணிகள் கர்ப்ப காலத்தில் நல்ல புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தைக் கொள்வது, குழந்தையின் அறிவுத்திறனை மேன்மேலும் அதிகரிக்கும்.

ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்கள் வேண்டாம்
ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களான புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்றவை குழந்தையின் உடல்நலம் மற்றும் மூளை வளர்ச்சிக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இத்தகைய பழக்கங்களை கர்ப்ப காலத்தில் பெண்கள் அறவே தவிர்க்க வேண்டும்.



Click it and Unblock the Notifications











