Latest Updates
-
பட்டினப்பாக்கம் பீச் ஸ்டைல் இறால் தொக்கு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
செவ்வாய் மேஷ ராசியில் இருப்பதால் ஜூன் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வீட்டைச் சுற்றி புழுதிப் புயலா? இந்த வாஸ்து செடிகளை மட்டும் வைங்க… காற்று சுத்தமாகும், பணமும் தானாக வரும்! -
12 ஆண்டுகள் கழித்து நிகழும் குரு-சுக்கிர சேர்க்கை: இன்று முதல் இந்த 6 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
ஹைதராபாத் ஸ்டைல் ஈஸியான பருப்பு குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணுங்க, அட்டகாசமாக இருக்கும் -
உடல் எடையை வேகமா குறைக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 'டயட் சார்ட்' ஃபாலோ பண்ணுங்க..! -
மணி பிளாண்ட் செடியை இப்படி வைத்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! கோடைக்காலத்திற்கு ஏற்ற வாஸ்து ரகசியங்கள் இதோ! -
வாழ்க்கையில் ஒரேயொரு முறை குளிக்கும் பழக்கும் உள்ள பெண்கள் - ஆனாலும் இவங்க ரொம்ப அழகா இருப்பார்களாம் -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூன் 08 வரை 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹோட்டல் ரவா உப்புமா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க..
கர்ப்பிணிகள் எதுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யணும் தெரியுமா?
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வோம். இவ்வாறு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். எப்படியெனில், அல்ட்ராசவுண்ட் கருவியை வயிற்றில் தேய்க்கும் போது, அதிலிருந்து வரும் சப்த அலைகள், வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவுகளை அப்படியே திரையில் வெளிக்காட்டும். மேலும் என்ன தான், அது குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தாலும், அதன் மூலம் குழந்தையின் தற்போதைய நிலை மற்றும் ஆரோக்கியத்தை கண்டறிய முடியும்.
மேலும் இந்த ஸ்கேன் மூலம், பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய பிரச்சனையையும் முன்பே கண்டறியலாம். சரி, இப்போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
* அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், கருவில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதனைக் கொண்டு குழந்தையின் இதய ஆரோக்கியத்தை கண்டறியலாம்.
* கர்ப்பிணிகள் இந்த ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தையின் நிலையை அறிய முடியும். இதனால் குழந்தை இடம் மாறி இருந்தால், முன்பே நன்கு தெரிந்து கொள்ளலாம்.
* நஞ்சுக் கொடி எந்த பகுதியில் உள்ளது என்பதையும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் அறியலாம். பொதுவாக நஞ்சுக்கொடியானது கர்ப்ப காலத்தில் கருப்பையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் நஞ்சுக்கொடியானது 7 மாதத்திற்கு பின், கருப்பை வாயை மூடியவாறு இருந்தால், அதற்கு சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
* பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கானது 11-14 வாரத்திற்குள் செய்யப்படும். இவ்வாறு செய்தால், குழந்தைக்கு மனநலிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்பிணிகளுக்கு 18-20 வாரங்களில் அனாமலி ஸ்கேன் மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கேன் மூலம், குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும் 20-வது வாரத்தில் ஸ்கேன் செய்தால், குழந்தை ஒரு வடிவத்தில் வந்துவிடும். இதனால் தண்டுவடம், மூளை மற்றும் இதர உள்ளுறுப்புக்களை சோதனை செய்து, அதில் பிரச்சனைகள் இருந்தால், அதை தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications