Latest Updates
-
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
கனவில் பணத்தை பார்ப்பது அதிர்ஷ்டமா? துரதிர்ஷ்டமா? அதன் உண்மையான அர்த்தம் என்ன தெரியுமா? -
July Born Personality: ஜூலை மாதம் பிறந்தவங்களோட குணாதிசயம் உண்மையில் எப்படி இருக்கும் தெரியுமா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த கர்நாடகா ஸ்டைல் சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு நச்சுனு இருக்கும் -
சனிபகவானின் கோபத்தால் ஜூலை மாதத்தில் இந்த 3 ராசிக்காரங்க படாதபாடு படப்போறாங்களாம் - ஜாக்கிரதை -
2 கப் ராகி மாவும், 1/2 கப் ரவையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல 10 நிமிடத்தில் இந்த ஸ்நாக்ஸை செஞ்சு குடுங்க..
கர்ப்பிணிகள் எதுக்கு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்யணும் தெரியுமா?
பொதுவாக கர்ப்பமாக இருக்கும் போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வோம். இவ்வாறு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் பல நன்மைகள் கிடைக்கும். எப்படியெனில், அல்ட்ராசவுண்ட் கருவியை வயிற்றில் தேய்க்கும் போது, அதிலிருந்து வரும் சப்த அலைகள், வயிற்றில் உள்ள குழந்தையின் அசைவுகளை அப்படியே திரையில் வெளிக்காட்டும். மேலும் என்ன தான், அது குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் இருந்தாலும், அதன் மூலம் குழந்தையின் தற்போதைய நிலை மற்றும் ஆரோக்கியத்தை கண்டறிய முடியும்.
மேலும் இந்த ஸ்கேன் மூலம், பிரசவத்தின் போது ஏற்படக்கூடிய பிரச்சனையையும் முன்பே கண்டறியலாம். சரி, இப்போது அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!

அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்:
* அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்தால், கருவில் உள்ள சிசுவின் இதயத்துடிப்பை பரிசோதிக்க முடியும். அதிலும் ஒரு நிமிடத்திற்கு எத்தனை முறை துடிக்கிறது என்பதையும் தெரிந்து கொள்ளலாம். இதனைக் கொண்டு குழந்தையின் இதய ஆரோக்கியத்தை கண்டறியலாம்.
* கர்ப்பிணிகள் இந்த ஸ்கேன் செய்வதன் மூலம், குழந்தையின் நிலையை அறிய முடியும். இதனால் குழந்தை இடம் மாறி இருந்தால், முன்பே நன்கு தெரிந்து கொள்ளலாம்.
* நஞ்சுக் கொடி எந்த பகுதியில் உள்ளது என்பதையும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம் அறியலாம். பொதுவாக நஞ்சுக்கொடியானது கர்ப்ப காலத்தில் கருப்பையின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் இருக்கும். ஆனால் நஞ்சுக்கொடியானது 7 மாதத்திற்கு பின், கருப்பை வாயை மூடியவாறு இருந்தால், அதற்கு சரியான பராமரிப்பு கொடுக்க வேண்டும்.
* பொதுவாக அல்ட்ராசவுண்ட் ஸ்கேனிங்கானது 11-14 வாரத்திற்குள் செய்யப்படும். இவ்வாறு செய்தால், குழந்தைக்கு மனநலிவு நோய் இருக்கிறதா, இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
* கர்ப்பிணிகளுக்கு 18-20 வாரங்களில் அனாமலி ஸ்கேன் மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கேன் மூலம், குழந்தைக்கு ஏதேனும் பிறப்பு குறைபாடு உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும். மேலும் 20-வது வாரத்தில் ஸ்கேன் செய்தால், குழந்தை ஒரு வடிவத்தில் வந்துவிடும். இதனால் தண்டுவடம், மூளை மற்றும் இதர உள்ளுறுப்புக்களை சோதனை செய்து, அதில் பிரச்சனைகள் இருந்தால், அதை தெரிந்து கொள்ளலாம்.



Click it and Unblock the Notifications