Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
கருவிலேயே பாட்டு கேட்கும் குழந்தைகள் புத்திசாலியாகும் – ஆய்வில் தகவல்

குழந்தைகள் கருவில் இருக்கும்போதே பல விஷயங்களை கற்றுக் கொள்கின்றன என்று ஆய்வுகள் கூறுகின்றன. கரு உண்டாகி நான்கே வாரங்களில் முதலாவது மூளை உயிரணுக்கள் - நியூரான்கள் - உருவாகின்றன.
அவை நிமிடத்துக்கு 2 லட்சத்து 50 ஆயிரம் உயிரணுக்கள் என்ற ரீதியில்! கோடிக்கணக்கில் நியூரான்கள் தோன்றி கோடான கோடி தொடுப்புகளை ஒன்றுடன் ஒன்று உண்டாக்குகின்றன என்கின்றனர் மருத்துவர்கள்.கேட்கும் திறனும், அறிவுத்திறனும் வேகமாக வளர்கிறது. கருவில் 17 வார வளர்ச்சி உடைய குழந்தை ஒரு செயலை எதிர்நோக்கு விளைவுடன் கவனிக்கத் தொடங்குகிறதாம்.
கருவிலேயே பயிற்சி
தன்னுடைய குழந்தைகள் எதிலும் முதன்மையானவராக வரவேண்டும், புத்திசாலிகளாக இருக்கவேண்டும் என்பதே ஒவ்வொரு பெற்றோரின் விருப்பம். எனவே குழந்தைகளை புத்திசாலிகளாக்க வேண்டுமெனில் கருவிலேயே பயிற்சி தரலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள்.இசையானது கருவில் இருக்கும் குழந்தையின் முளைத்திறனை அதிகரிப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. எனவே தாயும், குழந்தையும் இணைந்து இசை கேட்பதன் முலம் அறிவுள்ள குழந்தையை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.
இதற்காக அமெரிக்காவின் தெற்கு கரோலினா நகரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் கர்ப்பிணித் தாய்மார்கள் வயிறு - இடுப்பில் எளிதாக பொருத்திக் கொள்ளும் பெல்ட்' வடிவில் நவீன கருவி ஒன்றை வடிவமைத்துள்ளது. இதில் 2 வரிசைகளில் ஸ்பீக்கர் மற்றும் இயர்போன் இணைந்திருக்கும். குழந்தையின் தலைப்பகுதி எந்தப்பக்கம் இருந்தாலும் பாட்டு கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
கருவிலேயே இசையை கேட்கும் குழந்தைகள் பிறந்த உடன் இந்த உலகில் எதையுடம் நம்பிக்கையுடன் எதிர்நோக்குகின்றனராம். குழந்தையின் தன்னம்பிக்கை அதிகரிக்கிறதாம். அவர்களின் புத்திக்கூர்மை அதிகரிப்பதாகவும் ஆய்வாளார்கள் தெரிவித்துள்ளனர். குழந்தைகளின் வளர்ச்சியும், பெற்றோர்கள் மகிழத்தக்க வகையில் இருக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
தாயின் கருவில் வளரும் 5 மாத குழந்தைக்கு கேட்கும் திறன் நன்றாக இருக்குமாம். எனவே இந்த பெல்ட் இசையை அணிந்து கொண்டு மென்மையான பாடல்களை தாயும், கருக்குழந்தையும் கேட்பதன் மூலம் தன்னம்பிக்கை நிறைந்த புத்திசாலி குழந்தைகள் உருவாவது உறுதி என்கின்றனர் விஞ்ஞானிகள்.
1990 களில் இந்த கருவி கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், ஆதிகாலம் தொட்டே நம் முன்னோர்கள் பிறந்த குழந்தைகளுக்கு எந்தவித செலவும் இல்லாமல், தாலாட்டு பாடி உறங்க வைப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











