Latest Updates
-
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...! -
வார ராசிபலன் (01 March 2026-07 March 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும்! -
மட்டன் வாங்குனா இந்த மாதிரி நெல்லூர் ஸ்டைலில் குழம்பு வைச்சு பாருங்க... தோசை, சாதத்துக்கு சூப்பரா இருக்கும்... -
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன?
கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பது நல்லதா? கெட்டதா?
தாய்ப்பால் என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாத ஒன்று; கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இங்கு படித்து அறியலாம்.
தாய்ப்பால் என்பது எவ்வளவு விலை கொடுத்தாலும் வாங்க முடியாத ஒன்று; கடவுள் நிகழ்த்தும் கருவில் நிகழும் குழந்தை பிறப்பு அதிசயத்திற்கு இணையான அதிசயமாக பெண்ணின் உடலில் நிகழும் பிறிதொரு உன்னதமான அதிசயம் தாய்ப்பால் சுரப்பு என்பது ஆகும். குழந்தைகள் பிறந்து குறைந்தது ஆறு மாத காலம் ஆகும் வரை அவர்கள் கட்டாயமாக குடித்து வளர வேண்டியது அன்னை கொடுக்கும் தாய்ப்பாலை மட்டும் தான்.

அத்துணை முக்கியத்துவம் வாய்ந்த தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றியும், கணவருக்கு தாய்ப்பாலை கொடுப்பது நல்லதா? கெட்டதா? என்பது பற்றியும் இங்கு படித்து அறியலாம்.

கணவருக்கு கொடுக்கலாமா?
முதலில் தாய்ப்பாலை கணவருக்கு கொடுக்காலமா என்றால், நிச்சயம் கொடுக்கலாம்; ஆனால், குழந்தைக்கு போதுமான அளவு பால் இருக்கும் பட்சத்தில், குழந்தை ஆறு மாத வயதை தாண்டிய நிலையில், மேலும் பால் சுரப்பு நிகழ்ந்தால், கொஞ்சமாக எப்பொழுதாவது என கணவருக்கு அளிக்கலாம்; அதில் எந்த ஒரு தவறும் இல்லை. கணவருக்கு தாய்ப்பால் கொடுக்கும் முன் சில விஷயங்களை குறித்து சிந்தித்து பார்க்க வேண்டியது மிகவும் அவசியம்!

சிந்திக்க வேண்டியவை!
கணவரின் உடலில் எந்த விதமான நோய் நொடிகளும், HIV போன்ற நோய்த் தொற்றுகளும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனெனில் கணவருக்கு பாலூட்டுவதன் முலமாக பெண்ணின் உடலை அடையும் நோய்த் தொற்றுகள் குழந்தைக்கும் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புகள் உள்ளன.
மேலும் குழந்தைக்கு போதுமான அளவு பால் இருக்கிறதா என்று சிந்திக்க வேண்டும்; குழந்தையின் உடல் மற்றும் தாயின் உடல் நிலைகள் சரி இல்லை எனில், தாய்க்கும் குழந்தைக்கும் சரியான உறவு இன்னமும் ஏற்படவில்லை எனில் தாய்ப்பாலை கணவருக்கு கொடுக்காமல் இருப்பது நல்லது.

எதனால் தோன்றும்?
பெண்களுக்கு கணவருக்கு பால் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமோ, ஆணிற்கு மனைவியின் பால் நிரம்பிய மார்பகங்களை பிடித்து ருசி பார்த்து விட வேண்டும் என்ற எண்ணமோ மனிதர்களுக்கு - ஆண் மற்றும் பெண்களுக்கு எழுவது இயற்கை தான்.!
இந்த உணர்வுகள் தனது சொந்த வாழ்க்கை துணை அல்லது பிற பாலூட்டும் பெண்களை பார்க்கும் பொழுது கூட ஆண்களில் ஏற்படலாம். இந்த உணர்வு ஏற்படுவதில் தவறு இல்லை; அது இயற்கை தான். ஆனால் அதை அடக்கி ஆள வேண்டியது ஆண்மையின் அடையாளம்.

கலவி உணர்வு தான் காரணமா?
மேற்கூறியவாறு ஆணுக்கும் பெண்ணுக்கும் பால் கொடுக்க வேண்டும் என்றும், பால் குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற கலவி உணர்வு மட்டும் தான் முழுக்க காரணம் என்று கூற முடியாது. ஆனால், கலவி உணர்வு தான் முதன்மையான காரணம்; ஏனெனில் பால் சுரப்பு நிகழும் தருணத்தில் கலவி மேற்கொண்டால் கிடைக்கும் சுகம் எப்படி இருக்கும் என்று அறிய வேண்டும் என்ற விருப்பம் தம்பதியருக்கு இயற்கையாவே தோன்றும்.
மேலும் தாய்ப்பாலின் சுவையை இரசித்து, சுவைத்து பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் ஆண்களின் மனதில் இருக்கும்.

கணவரின் மனநிலை!
பொதுவாகவே கணவன்மார்களுக்கு மனைவி கர்ப்பம் அடைந்த பின் தொடங்கி, குழந்தை ஓரளவுக்கு வளரும் வரை மனைவி நம்மை கவனிப்பதே இல்லை; நம்மை மறந்து விடுகிறாள் என்ற உணர்வு இருக்கும். இந்த உணர்வை போக்க கணவருக்கு கொஞ்சமாக தாய்ப்பால் அளித்து, உடல் ரீதியாக அவரை மகிழ்ச்சிப்படுத்துவது கணவரின் மனநிலையை மாற்ற உதவும்; கணவர் தான் மனைவிக்கு முக்கியம் என்று தோன்ற செய்யும்.

தாய்மையின் மகத்துவம்!
பெண்கள், கணவருக்கு கொஞ்சம் மகிழ்ச்சியும், மனைவி உடலை இரசித்த சுகமும், தாய்ப்பாலை ருசி பார்த்த அனுபவமும் கிடைக்கும்; இது கணவன்மார்களை மனைவி என்பவள் இன்னொரு தாய் என்று உணர செய்யும். ஆண்களுக்கும் தாய்மையின் பெண்மையின் மகிமையை உணர்த்தும். மேலும் பெண்களை பார்க்கும் பொழுது அவர்களிடம் கண்டிப்பாக மரியாதையை ஏற்படுத்தும்; பெண்களின் வாழ்க்கையின் வலிகளை உணர்த்தும்.

தாய்ப்பால் சுரப்பு!
குழந்தைக்கு கொடுக்கும் தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பது தவறான விஷயமல்ல; ஆனால் அதிகம் கொடுப்பது தான் தவறு. கணவருக்கு தாய்ப்பால் கொடுப்பதால், கணவர் மகிழ்ச்சி அடைவார்; தம்பதியரின் உறவு மேம்படும். இதை தவிர்த்து, தாய்ப்பால் அதிகம் சுரக்க, மார்பகத்தில் உள்ள பால் தொடர்ந்து காலி ஆக வேண்டும்.

கொடுப்பது நல்லதா?
குழந்தை குடிக்காமல் இருந்தால் மார்பகத்தில் உள்ள பால் தேக்கத்தால் பால் சுரப்பு ஏற்படாது. எனவே கணவர்கள் குடித்து பாலை கொஞ்சம் காலி பண்ணுவது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க உதவும்; பால் கட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். மேலும் கணவரின் உடல் நலம் மேம்பட உதவும். ஆகையால், தாய்ப்பாலை கணவருக்கு கொஞ்சமாக கொடுப்பது கட்டாயம் நல்லது தான்.

கொடுப்பது கெடுதலா?
அதிகம் தாய்ப்பாலை கணவருக்கு கொடுப்பது கண்டிப்பாக கெடுதலை ஏற்படுத்தும்; அதிகம் பாலை கணவரே குடித்து விட்டால், குழந்தைக்கு உணவு பற்றாக்குறை ம் மற்றும் சத்துக்கள் பற்றாக்குறை ஏற்பட அதிகம் வாய்ப்புகள் உண்டு. மேலும் குழந்தை அதிகம் அழும் சமயம் மற்றும் குழந்தையின் உடல் நலம் சரி இல்லாத பொழுது கணவருக்கு பாலை கொடுப்பது நல்லது அல்ல.
மேலும் தாயின் உடல் நிலை மற்றும் தாய்க்கும் குழந்தைக்கும் உறவு சரி இல்லாத நிலையிலும் கணவரை பால் குடிக்க அனுமதிக்க வேண்டாம்.



Click it and Unblock the Notifications











