நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி 2026-ன் இரண்டாம் பாதியில் இந்த நாடு பெரிய ஆபத்தில் சிக்கப்போகுதாம் - ஷாக் ஆகாதீங்க

உலகின் புகழ் பெற்ற தீர்க்கதரிசிகள் என்று வரும் போது அதில் முதலிடத்தில் இருப்பது நோஸ்ட்ரடாமஸ்தான். ஏனெனில் உலக வரலாற்றை மாற்றிய பல நிகழ்வுகளை அவை நடப்பதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அவர் சரியாக கணித்திருந்தார். 1555-ல் எழுதப்பட்ட அவரது புத்தகமான "லெஸ் ப்ராஃபெட்டீஸ்" 900 க்கும் மேற்பட்ட வசனங்களைக் கொண்டுள்ளது, அவற்றில் பல நெப்போலியனின் எழுச்சி, உலகப் போர்கள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் போன்ற வரலாற்று நிகழ்வுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன.

Nostradamus 2026 Shocking Predictions War Lightning Strike and Blood in Switzerland

2026 ஆம் ஆண்டில் அவர் நடக்கப்போவதாக கணித்துள்ள சில கணிப்புகள் உலகம் முழுவதும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதில் சில கணிப்புகள் ஏற்கனவே பலித்துள்ள நிலையில் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் நடக்கப்போவதாக கணித்துள்ள சில கணிப்புகள் மக்களின் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்த பதிவில் 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடக்கப்போவதாக நோஸ்ட்ரடாமஸ் கணித்துள்ள விஷயங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

யார் இந்த நோஸ்ட்ரடாமஸ்?

1503-ல் மைக்கேல் டி நொஸ்ட்ரடேம் என்ற பெயரில் பிறந்த நோஸ்ட்ராடமஸ், ஒரு மருத்துவராகவும் இருந்தார். அவர் ஜோதிடம் மற்றும் மறைஞானத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டிருந்தார். அவர் வாழ்ந்த காலத்தில், புகழ்பெற்ற தீர்க்கதரிசியாக விளங்கினார். கேத்தரின் டி மெடிசியின் அரசவை உட்பட, ஐரோப்பிய அரச குடும்பத்தினருக்குக் கூட ஜாதகங்களை வழங்கினார். நோஸ்ட்ராடமஸ், 1555-ல் 'லெஸ் ப்ரோஃபெட்டீஸ்' என்ற நூலை வெளியிட்டார். இது, எதிர்கால நிகழ்வுகளை வியக்கத்தக்க துல்லியத்துடன் கணிப்பதாகப் பலரும் நம்பும் நாலடி கவிதைப் பாடல்களின் தொகுப்பாகும்.

நோஸ்ட்ராடமஸின் கணிப்புகள்

பிரெஞ்சுப் புரட்சி முதல் ஹிட்லரின் எழுச்சி, கென்னடியின் படுகொலை வரை அனைத்தையும் அவரது கவிதைகள் முன்னறிவித்தன என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அந்த வரிகள் மிகவும் தெளிவற்றவையாக இருப்பதால், அவற்றை எதற்கும் பயன்படுத்தலாம் என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். இருப்பினும், அவரது கணிப்புகள், தீர்க்கதரிசனப் பார்வை மூலமாக பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கோடிக்கணக்கான மக்களை ஈர்த்து வருகின்றன. 2026-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக நோஸ்ட்ரடாமஸ் கணித்துள்ள நிகழ்வுகள் என்னென்ன என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

மின்னல் தாக்குதல்

உலகப்புகழ் பெற்ற பெரிய மனிதர் ஒருவர் பகல் பொழுதில் இடிதாக்கலால் வீழ்த்தப்படுவார் என்று நோஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளார். இது ஒரு பிரபல நடிகரையோ, மதத் தலைவரையோ அல்லது அரச குடும்பத்தைச் சேர்ந்தவரையோ குறிப்பதாகப் பலர் நம்புகின்றனர். ஒரு முக்கியப் பிரமுகருக்கு மட்டுமல்ல, யாருக்குமே இத்தகைய மரணம் ஒரு விசித்திரமானதாகவே அமையும். இருப்பினும், சிலர் இதில் குறிப்பிடப்பட்டுள்ள மின்னல் தாக்குதல் என்பது, துப்பாக்கிச் சூடு மூலம் நடத்தப்படும் படுகொலையையும் குறிக்கக்கூடும் என்று கூறுகின்றனர்.

தேனீக்கள் கூட்டம்

2026-ன் இரண்டாம் பாதியில் தேனீக்களின் கூட்டம் ஒன்று தோன்றும் என்று நாஸ்ட்ராடாமஸ் கணித்துள்ளார். "இரவு நேரத் திடீர்த் தாக்குதலின் மூலம் தேனீக்களின் பெரும் கூட்டம் ஒன்று உருவாகும்" என்று அவர் எழுதியுள்ளார். இது தேனீக்களால் அலர்ஜி உள்ளவர்களை எப்போதும் ஒருவித அச்சத்திலேயே வைத்திருக்கும். கடவுளால் அனுப்பப்பட்ட புதிய கொள்ளைநோயோ? அல்லது கொடிய வகை தேனீக்களின் மறுவருகையோ? என்று மக்கள் குழம்பியிருக்கும் சூழலில், சிலர் இது ஒரு புரட்சிக் கூட்டத்தின் எழுச்சியாக இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.

சுவிட்சர்லாந்தில் இரத்தம்

நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் பொதுவாக தெளிவற்றவையாக இருக்கும், ஆனால் அவர் சிலசமயங்களில் நேரடியான கணிப்புகளையும் கூறியுள்ளார். 2026 ஆம் ஆண்டில், "டிசினோ இரத்தத்தால் நிரம்பி வழியும்" மற்றும் "நீண்ட முனைகள் கொண்ட அடியால் மூழ்கடிக்கப்பட்ட மரணங்கள்" ஏற்படும் என்று நோஸ்ட்ராடாமஸ் கூறுகிறார். டிசினோ என்பது சுவிட்சர்லாந்தின் இத்தாலிய மொழி பேசும் பகுதியாகும், இதனால் 2026-ல் சுவிட்சர்லாந்தில் பெரிய பேரழிவு ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புதிய சிலை

2026-ல் தோன்றவிருக்கும் போலிச் சிலைகள் குறித்து நோஸ்ட்ராடமஸ் எச்சரித்துள்ளார், "அவர்கள் அரசர்கள் மற்றும் இளவரசர்களின் சிலைகளை உருவாக்குவார்கள்" என்று அவர் எழுதியுள்ளார். இந்தச் சிலைகளை யார் உருவாக்குவார்கள் அல்லது யாருடைய சிலைகள் அவை என்பது தெளிவாக இல்லை. இருப்பினும், "அரசர்கள் வேண்டாம்" என்ற முழக்கத்துடன் நடைபெற்ற பேரணிகளுக்குப் பிறகு, சிலர் இதனை அதிபர் ட்ரம்ப்பைக் குறிப்பதாகப் பொருள் கொள்கின்றனர். பொருட்களின் மீது தனது பெயரைப் பொறிப்பதில் ட்ரம்ப்பிற்கு உள்ள ஆர்வம் மற்றும் அமெரிக்கக் கருவூலம் ட்ரம்ப்பின் முகம் பொறிக்கப்பட்ட சிறப்பு ஒரு-டாலர் நாணயத்தை வெளியிடவிருப்பது ஆகியவையும் இந்த கணிப்பிற்கு வலுசேர்க்கின்றன. அந்த போலி சிலையை வழிபட வேண்டாம் என்று நோஸ்ட்ரடாமஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாக அவரை பின்பற்றுபவர்கள் கூறுகிறார்கள்.

Story first published: Wednesday, June 10, 2026, 12:51 [IST]
Desktop Bottom Promotion