Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு நாலாபக்கமும் ஆபத்து சூழ்ந்திருக்குமாம் -
புதன் நட்சத்திர மாற்றத்தால் இன்னும் 2 நாட்களில் சிம்மம் உள்ளிட்ட 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
இந்த 4 தேதிகளில் பிறந்த பெண்கள் முதலாளியாக இருக்க பிறந்தவர்களாம் - இவங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
இதுல உங்க காது எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்.. -
11,000 ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதலில் தோன்றிய பழம் எது தெரியுமா? இப்பவும் நாம இந்த பழத்தை சாப்பிடுறோமாம் -
திருமணத்திற்கு முந்தைய உறவு குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு உங்கள் உரிமையை மாற்றும்! -
சத்தான எள்ளுப்பொடி சாதம் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - உடம்பு இரும்பு மாதிரி மாறிடும் -
பரோட்டா கடை வெஜ் சால்னா ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. என்னன்னு தெரிஞ்சு ட்ரை பண்ணுங்க.. -
திருமண சீசனில் தங்கம் விலை திடீர் உயர்வு: பட்ஜெட்டை சமாளிக்க முடியாமல் திணறும் குடும்பங்கள்! -
ஜூன் 15-ல் உருவாகும் அரிய புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்
பிரசவத்திற்கு பிறகு உடலுக்கு மசாஜ் செய்யுங்க!!!

பிரசவத்திற்கு பின் மசாஜ் செய்தால்...
* பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சற்று மன அழுத்தத்துடன் காணப்படுவர். பிறந்த குழந்தையை கவனமாக பார்ப்பதில் புதிதாக தாயானவர்களுக்கு மனஅளவிலும், உடலளவிலும் சற்று கடினமாக இருக்கும். ஆகவே அப்போது மிசாஜ் செய்தால், உடல் சற்று ரிலாக்ஸ் ஆக இருப்பதோடு, மனமும் சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும்.
* பிரசவத்திற்கு பிறகு கால்கள், தொடை, தோள்பட்டை, கழுத்து, முதுகு போன்றவை மிகவும் வலியுடன் இருக்கும். அப்போது மசாஜ் செய்தால் உடல் வலி நீங்கிவிடும். அதிலும் அந்த மசாஜை இரவில் படுக்கும் போது செய்தால் நன்றாக இருக்கும். ஆகவே படுக்கும் முன் கணவரை அழைத்து சற்று மசாஜ் செய்து விடுமாறு சொல்லுங்கள்.
* மசாஜ் செய்வதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதுமட்டுமல்லாமல், உடல் வலி குறைவதோடு, உடலில் ஆக்ஸிஜன் சரியான அளவில் கிடைத்து, இரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
* ஒவ்வொரு பெண்ணும் பிரசவத்திற்கு பின் தாய்ப்பாலை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும். அதிலும் மார்பகத்தில் சற்று மசாஜ் செய்தால், உடலில் தாய்ப்பாலின் உற்பத்தி அதிகரிப்பதோடு, புரோலாக்டின் உற்பத்தியும் அதிகரிக்கும். அதிலும் இந்த வகையான மசாஜ் தாய்ப்பால் சுரப்பியில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும் அதனை நீக்கிவிடும்.
* பிரசவத்திற்கு பின் உடலில் தசைகள் சுருங்கியிருக்கும். ஆகவே அப்போது உடலுக்கு மசாஜ் செய்தால், உடலில் இருக்கும் தசைகள் வலுவடைவதோடு, உடல் நன்கு பிட்டாகவும் இருக்கும்.
* கர்ப்பமாக இருக்கும் போது எடை அதிகமாக இருக்கும். ஆனால் பிரசவத்திற்கு பின்னும் சில சமயங்களில் எடை கூட ஆரம்பிக்கும். மேலும் தொப்பை கூட வந்துவிடும். ஆகவே அந்த நேரத்தில் உடல் எடையை குறைக்க, தொப்பையை குறைக்க மசாஜ் செய்தால், உடல் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும்.
* சிசேரியன் பிரசவத்தில் தையல்களின் குறிகள் சருமத்தில் இருக்கும். இதனை முற்றிலும் போக்குவது என்பது மிகவும் கடினம். ஆனால் அந்த குறியினை மசாஜ் செய்வதன் மூலம் மெதுவாக குறைக்கலாம். முக்கியமாக, மசாஜ் செய்யும் போது சரியான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும்.
* அதுமட்டுமல்லாமல், மசாஜ் செய்வதால் உடலில் இருக்கும் இறந்த செல்கள் போய்விடும். அதிலும் புதிதாக தாயானவர்கள், சருமத்தின் மீது சரியான கவனிப்பை, பராமரிப்பை செய்வதில்லை. ஆகவே மறக்காமல் மசாஜ் செய்ய வேண்டும்.
முக்கியமாக சிசேரியன் மூலம் பிரசவம்த ஆனவர்கள், உடனே மசாஜ் செய்ய வேண்டாம். ஏனெனில் தையல்கள் நன்கு காய சற்று நாட்கள் ஆகும். ஆகவே தையல்களை காய்ந்து சரியானதும், பின்னர் மசாஜ் செய்ய தொடங்குங்கள். அதிலும் மசாஜ் செய்யும் போது சூடான அல்லது வெதுவெதுப்பான எண்ணெயை பயன்படுத்த வேண்டும். வேண்டுமென்றால் அந்த எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு மசாஜ் செய்தால் மிகவும் நல்லது. ஆகவே மசாஜை வீட்டில் செய்து உடலை ஆரோக்கியமாக, பிட்டாக வைத்துக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications