Latest Updates
-
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்..
புது அம்மாவா? உணவில் கவனம் தேவை!

குழந்தை பெற்ற பெண்களுக்கு என்னதான் நேரமில்லை என்றாலும் தங்களின் நலனின் கொஞ்சமாவது அக்கறை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். அம்மாக்கள் சாப்பிடவேண்டியவைகளை பட்டியலிட்டுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள் படியுங்களேன்.
பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். அது தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கியத்தை தரும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் வரும் எனவே அதிகம் தண்ணீர் அருந்துங்கள். அவ்வப்போது வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஜீரணத்திற்கு நல்லது.
தாய்மார்கள் உண்ணும் உணவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு அது ஜீரணம் ஏற்படாமல் இருந்தால் அந்த உணவுக்களை தவிர்த்துவிடுங்கள். அப்பொழுது குழந்தைக்கு தாய்ப்பால் தரவேண்டாம் என்பது மருத்துவர்கள் அறிவுரை.
வைட்டமின் சத்து நிறைந்த காரட், பீட்ரூட், சேனைக்கிழங்கு போன்ற தாய்க்கு அவசியம். அதேபோல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெந்தயம், வெந்தையக்கீரையை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும். அதேபோல் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். முந்திரி, பாதாம் போன்ற உலர் பருப்புகளை உட்கொள்வது தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும். புரதச்சத்து நிறைந்த முட்டை, பீன்ஸ் ஆகியவைகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது பழுதடைந்த தசையை புதுப்பிக்கும். மாலை நேரத்தில் பசிக்கும் பொழுது எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதை தவிர்த்து பழங்களை கட் செய்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம் இதனால் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பெரிய வெள்ளைப்பூண்டு பத்துபல் உரித்து அதை நன்றாக நல்லெண்ணெயில் வதக்கி அத்துடன் நாட்டுவெல்லம் சேர்த்து சாப்பிட பச்சை உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கிடைக்கும்.
பிள்ளைப்பெற்றவர்கள் காரசார உணவை தவிர்த்துவிடுங்கள். அதற்குபதிலாக மிளகுத்தூள் போட்டு சமைக்கலாம். ஏனெனில் அதுதான் கருப்பைக்கு ஏற்றது. அதேபோல் காபி,டீ, போன்ற பானங்களை தவிர்த்துவிடுங்கள். அப்பொழுதுதான் பழைய உடம்பை திரும்ப பெறமுடியும்.
இரவில் சரியாக தூங்க முடியாதவர்கள் பகலில் நன்றாக தூங்கி ஓய்வு எடுக்கலாம். சரியான அளவிற்கு ஓய்வு எடுப்பதோடு கடுமையான வேலைகள் தவிர்க்க வேண்டும் சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.
பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும். இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.



Click it and Unblock the Notifications











