Latest Updates
-
பால் இல்லாமல் ஒருவாட்டி இப்படி டீ போடுங்க.. அப்புறம் பாருங்க.. அடிக்கடி இந்த டீ போடுவீங்க.. -
இந்த 5 ராசிக்காரர்கள் 30 வயதிற்குள்ளேயே வாழ்வில் நல்ல உயரத்தை அடைவார்களாம்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சிக்கனையும், பூண்டையும் வெச்சு.. ஒருடைம் இந்த வறுவல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
மாதுளம் பழ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பட்டியலிட்ட டாக்டர்.பிரகாஷ்! -
ஜூன் 18-ல் நடக்கும் குரு நட்சத்திர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு பணம் மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். -
அடுத்தமுறை சிக்கன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு குழம்பு வையுங்க.. இட்லிக்கு டக்கரா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 14 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டப்போகுதாம் -
ஜூன் 15-ல் உருவாகும் புதாதித்ய யோகத்தால் ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
நாட்டுக்கோழி வாங்குனா கர்நாடகா ஸ்டைலில் இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - சுருக்குனு வேற லெவலில் இருக்கும் -
இந்த வாரம் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் காத்திருக்காம்
புது அம்மாவா? உணவில் கவனம் தேவை!

குழந்தை பெற்ற பெண்களுக்கு என்னதான் நேரமில்லை என்றாலும் தங்களின் நலனின் கொஞ்சமாவது அக்கறை செலுத்தினால்தான் தொடர்ந்து ஆரோக்கியமாக நடமாடமுடியும் என்று என்று அறிவுறுத்துகின்றனர் நிபுணர்கள். அம்மாக்கள் சாப்பிடவேண்டியவைகளை பட்டியலிட்டுள்ளனர் மகப்பேறு மருத்துவர்கள் படியுங்களேன்.
பிரசவத்தின் போது ஏற்படும் ரத்த இழப்பை ஈடுசெய்வதற்கும் தாய்ப்பால் சுரப்பதற்கும் நல்ல சத்தான உணவுகளை அதிக அளவில் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். புரதம், இரும்பு சத்து மற்றும் வைட்டமின் நிறைந்த உணவுப் பொருள்களை உண்ண வேண்டும். அது தாய்க்கும் சேய்க்கும் ஆரோக்கியத்தை தரும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால் தாய்ப்பால் சுரப்பதில் சிக்கல் வரும் எனவே அதிகம் தண்ணீர் அருந்துங்கள். அவ்வப்போது வெதுவெதுப்பான நீர் அருந்துவது ஜீரணத்திற்கு நல்லது.
தாய்மார்கள் உண்ணும் உணவில் ஏதாவது மாற்றம் ஏற்பட்டு அது ஜீரணம் ஏற்படாமல் இருந்தால் அந்த உணவுக்களை தவிர்த்துவிடுங்கள். அப்பொழுது குழந்தைக்கு தாய்ப்பால் தரவேண்டாம் என்பது மருத்துவர்கள் அறிவுரை.
வைட்டமின் சத்து நிறைந்த காரட், பீட்ரூட், சேனைக்கிழங்கு போன்ற தாய்க்கு அவசியம். அதேபோல் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.
வெந்தயம், வெந்தையக்கீரையை உணவில் எடுத்துக்கொள்ளுங்கள். இது தாய்ப்பால் உற்பத்தியை அதிகரிக்கும். அதேபோல் கால்சியம் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவேண்டும். முந்திரி, பாதாம் போன்ற உலர் பருப்புகளை உட்கொள்வது தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும். புரதச்சத்து நிறைந்த முட்டை, பீன்ஸ் ஆகியவைகளை தினசரி உணவில் கட்டாயம் சேர்த்துக்கொள்ளவேண்டும்.
உணவில் சிறிதளவு நெய் சேர்த்துக்கொள்வது பழுதடைந்த தசையை புதுப்பிக்கும். மாலை நேரத்தில் பசிக்கும் பொழுது எண்ணெய் பலகாரங்களை சாப்பிடுவதை தவிர்த்து பழங்களை கட் செய்து வைத்துக்கொண்டு சாப்பிடலாம் இதனால் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.
பெரிய வெள்ளைப்பூண்டு பத்துபல் உரித்து அதை நன்றாக நல்லெண்ணெயில் வதக்கி அத்துடன் நாட்டுவெல்லம் சேர்த்து சாப்பிட பச்சை உடம்புக்குத் தேவையான இரும்புச்சத்து கிடைக்கும். குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் கிடைக்கும்.
பிள்ளைப்பெற்றவர்கள் காரசார உணவை தவிர்த்துவிடுங்கள். அதற்குபதிலாக மிளகுத்தூள் போட்டு சமைக்கலாம். ஏனெனில் அதுதான் கருப்பைக்கு ஏற்றது. அதேபோல் காபி,டீ, போன்ற பானங்களை தவிர்த்துவிடுங்கள். அப்பொழுதுதான் பழைய உடம்பை திரும்ப பெறமுடியும்.
இரவில் சரியாக தூங்க முடியாதவர்கள் பகலில் நன்றாக தூங்கி ஓய்வு எடுக்கலாம். சரியான அளவிற்கு ஓய்வு எடுப்பதோடு கடுமையான வேலைகள் தவிர்க்க வேண்டும் சில மாதங்களுக்கு தவிர்க்க வேண்டும்.
பிரசவத்திற்கு பின் உடலை சரியாக பராமரிப்பதில்லை. இதனால் அவர்களின் உடல் பல உபாதைகளை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு பின் அடிவயிற்றில் துணி சுற்றி கட்டாதவர்களுக்கும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றவர்களும் பெல்ட் போடாதவர்களுக்கும் வயிற்றில் சதை அதிகமாக காணப்படும். இவர்கள் சின்ன வெங்காயத்தை பசுநெய்யில் வதக்கி நன்கு மெழுகு போல் அரைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை என தினமும் இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வந்தால் அடிவயிறு சதை குறைந்து உடல் அழகாகும்.



Click it and Unblock the Notifications