Latest Updates
-
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது
பாப்பா பார்த்து சிரிச்சா முடி கொட்டுமா?

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடுகள் இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிறகு ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும் எனவே கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பிக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். பழங்கள், காய்கறிகளில் ப்ளேவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன அவை கூந்தல் உதிர்வதை தடுக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கீரைகள், புளு பெர்ரீ, கிவி பழம், போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் பிரசவத்தின் போது உடல் இழந்த சத்துக்கு ஏற்ப பேலன்ஸ் ஆகும்.
பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தங்களின் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தாய்மார்கள் தங்களின் உடலில் வைட்டமின் பி காம்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் இ, பயோடின், துத்தநாகம் போன்றவை குறையாமல் பாதுகாக்க சரிவிகித ஊட்டச்சத்துணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு மைய அரைக்கவும். அதை தலையில் பூசி ஊறவைக்கவும். பின்னர் மைல்ட் ஷாம்பு, கன்டிசனர் போட்டு அலசவும். தலை பட்டுப்போல இருக்கும்.
விளக்கெண்ணெயை சூடாக்கி அதில் பாதாம் எண்ணெயை ஊற்றி கலக்கவும். இந்த கலவையை தலையில் அப்ளை செய்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வ்வாறு செய்து வர முடி உதிர்தல் கட்டுப்படும். அதேபோல் தேங்காய் பாலும், கற்றாழையும் கூந்தலுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றது. இவற்றை ஒன்றாக சேர்த்து கூந்தலின் வேர்களில் படுமாறு மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணிநேரம் ஊறியபின்னர் மசாஜ் செய்யவும்.



Click it and Unblock the Notifications