Latest Updates
-
ரவா அடையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 19 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூன் 30-ல் நடக்கும் ராகு நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
மதியம் லன்ச் பாக்ஸ்-க்கு இந்த ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
ஃபேஸ் பேக் Vs ஃபேஸ் மாஸ்க் - இவற்றில் சிறந்தது எது? -
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பாப்பா பார்த்து சிரிச்சா முடி கொட்டுமா?

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடுகள் இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிறகு ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும் எனவே கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பிக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். பழங்கள், காய்கறிகளில் ப்ளேவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன அவை கூந்தல் உதிர்வதை தடுக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கீரைகள், புளு பெர்ரீ, கிவி பழம், போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் பிரசவத்தின் போது உடல் இழந்த சத்துக்கு ஏற்ப பேலன்ஸ் ஆகும்.
பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தங்களின் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தாய்மார்கள் தங்களின் உடலில் வைட்டமின் பி காம்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் இ, பயோடின், துத்தநாகம் போன்றவை குறையாமல் பாதுகாக்க சரிவிகித ஊட்டச்சத்துணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு மைய அரைக்கவும். அதை தலையில் பூசி ஊறவைக்கவும். பின்னர் மைல்ட் ஷாம்பு, கன்டிசனர் போட்டு அலசவும். தலை பட்டுப்போல இருக்கும்.
விளக்கெண்ணெயை சூடாக்கி அதில் பாதாம் எண்ணெயை ஊற்றி கலக்கவும். இந்த கலவையை தலையில் அப்ளை செய்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வ்வாறு செய்து வர முடி உதிர்தல் கட்டுப்படும். அதேபோல் தேங்காய் பாலும், கற்றாழையும் கூந்தலுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றது. இவற்றை ஒன்றாக சேர்த்து கூந்தலின் வேர்களில் படுமாறு மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணிநேரம் ஊறியபின்னர் மசாஜ் செய்யவும்.



Click it and Unblock the Notifications