Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
பாப்பா பார்த்து சிரிச்சா முடி கொட்டுமா?

கர்ப்ப காலத்தில் பெண்களின் ஹார்மோன் சுரப்பில் மாறுபாடுகள் இருக்கும். இதனால் கூந்தல் வளர்ச்சி அதிகரிக்கும். பிரசவத்திற்குப் பிறகு ஹார்மோன் சுரப்பு குறைந்துவிடும் எனவே கூந்தல் கொஞ்சம் கொஞ்சமாக உதிர ஆரம்பிக்கிறது. அதனால்தான் மருத்துவர்கள் பிரசவத்திற்குப் பின்னரும் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர். பழங்கள், காய்கறிகளில் ப்ளேவனாய்டுகள், ஆன்டிஆக்ஸிடென்ட்கள் உள்ளன அவை கூந்தல் உதிர்வதை தடுக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர். கீரைகள், புளு பெர்ரீ, கிவி பழம், போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் பிரசவத்தின் போது உடல் இழந்த சத்துக்கு ஏற்ப பேலன்ஸ் ஆகும்.
பிரசவத்திற்குப் பின்னர் பெண்கள் தங்களின் உடல் மீது அக்கறை செலுத்துவதில்லை. இதன் காரணமாகவே அவர்களுக்கு நாளடைவில் உடலில் கோளாறுகள் ஏற்படுகின்றன. எனவே தாய்மார்கள் தங்களின் உடலில் வைட்டமின் பி காம்ளக்ஸ், வைட்டமின் சி, வைட்டமின் இ, பயோடின், துத்தநாகம் போன்றவை குறையாமல் பாதுகாக்க சரிவிகித ஊட்டச்சத்துணவை உட்கொள்ள வேண்டும்.
மேலும் வீட்டில் உள்ள பொருட்களை உபயோகப்படுத்தி முடி உதிர்தலை தடுக்கலாம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் தண்ணீரை வடித்து விட்டு மைய அரைக்கவும். அதை தலையில் பூசி ஊறவைக்கவும். பின்னர் மைல்ட் ஷாம்பு, கன்டிசனர் போட்டு அலசவும். தலை பட்டுப்போல இருக்கும்.
விளக்கெண்ணெயை சூடாக்கி அதில் பாதாம் எண்ணெயை ஊற்றி கலக்கவும். இந்த கலவையை தலையில் அப்ளை செய்து குளிக்கவும். வாரம் ஒருமுறை இவ்வ்வாறு செய்து வர முடி உதிர்தல் கட்டுப்படும். அதேபோல் தேங்காய் பாலும், கற்றாழையும் கூந்தலுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்றது. இவற்றை ஒன்றாக சேர்த்து கூந்தலின் வேர்களில் படுமாறு மசாஜ் செய்யவும். பின்னர் அரை மணிநேரம் ஊறியபின்னர் மசாஜ் செய்யவும்.



Click it and Unblock the Notifications











