Latest Updates
-
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம்
புது அம்மாவிற்கு ஏற்ற மசாஜ்! உடம்பை ரிலாக்ஸ் ஆக்கும்!

ரிலாக்ஸ் செய்யுங்கள்
குழந்தை பிறந்த உடன் அவர்களை நன்றாக கவனிக்கவேண்டுமே என்ற கவலை பெண்களை பீடித்துக்கொள்ளும். இதுவே மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விடும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தளர்வடைந்து போயிருப்பவர்களுக்கு மசாஜ் சிறந்த நிவாரணியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடல் வலியை போக்குங்கள்
பிரசவத்தின் போது ஏகப்பட்ட உதிரப்போக்கு இருந்திருக்கும். இதனால் சத்துக்கள் குறைந்து உடல் வலி பின்னி எடுக்கும். பாதங்களிலும், தொடைகளிலும் வலி தெறிப்பதோடு தோள்களிலும் முதுகுப் பகுதிகளிலும் வலி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு மசாஜ் செய்வது உடல் வலியை சற்றே குறைக்கும். உடலில் ஆங்காங்கே மெதுவாக பிடித்து விட்டு மசாஜ் செய்துவிடுங்களேன். கணவர் இதை செய்து விடலாம். பெண்களுக்கு உடனடி ரிலீப் கிடைக்கும்.
ரத்தம் உடலில் பாயும்
பாடி மசாஜ் செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்தம் நன்றாக பாயும். இதனால் ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சப்ளை ஆவதால் உடல் வலி குறையும். அதோடு மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்குமாம். மார்புப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வதால் அதன் காம்புப் பகுதியில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்குவதோடு அதிக அளவில் பால் சுரக்கும்
உடல் அழகாகும்
பிரசவத்தினால் தசைகள் தளர்ந்து போயிருக்கும். அவர்களுக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்வதால் தசைகள் இருகும். உடலானது படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பும். அதோடு ஆங்காங்கே கொழுப்புகள் சேர்ந்துள்ள பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் அவை கரைந்து எடை குறைவதோடு உடல் சிக் என்று மாறிவிடும். மேலும் தழும்புகள் இருக்கும் பகுதிகளில் ஆயில் விட்டு மசாஜ் செய்வதன் மூலம் பிரசவ தழும்புகள் மறையும்.
பிரசவத்திற்குப் பின்னர் மசாஜ் செய்வதனால் உடலானது பழைய நிலைக்கு திரும்பும் என்றாலும் சிசேரியன் செய்தவர்கள் தையல் காய்ந்து பிரிக்கும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் மிதமான வெந்நீரில் குளிக்கவேண்டும். மசாஜ் செய்த பின்னரும் வெந்நீரில் சில துளி எலுமிச்சையை சேர்த்து குளிக்கலாம். உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.



Click it and Unblock the Notifications