Latest Updates
-
52000 கோடி ரூபாய் இழப்பீடு செலுத்தப்போகும் பிரபல நிறுவனம் - அதிர்ச்சியளிக்கும் காரணம் என்ன தெரியுமா? -
பொட்டுக்கடலை பூர்ண பணியாரம் - ஈவ்னிங் டைம்-ல பிள்ளைகளுக்கு செஞ்சு குடுங்க, விரும்பி சாப்பிடுவாங்க.. -
கஜலக்ஷ்மி யோகம் ஆகஸ்ட் 05-ல் உருவாவதால் புது சொத்துக்களை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 5 அறிகுறிகள் தெரியுதா? அப்ப வைட்டமின் சி குறைபாடு இருக்குன்னு அர்த்தம்.. -
கேரளா ஸ்டைல் மசாலா ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
வக்கீல்களும், நீதிபதிகளும் ஏன் கருப்பு நிற கோட் மட்டுமே அணிகிறார்கள் தெரியுமா? -
ஆகஸ்ட் மாத செவ்வாய் பெயர்ச்சி: இந்த 5 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
கார கொழுக்கட்டையும், ஆந்திரா மிளகாய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
சுக்கிரன் உத்திர நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளை துரதிர்ஷ்டம் விடாமல் துரத்தப்போகுதாம்
புது அம்மாவிற்கு ஏற்ற மசாஜ்! உடம்பை ரிலாக்ஸ் ஆக்கும்!

ரிலாக்ஸ் செய்யுங்கள்
குழந்தை பிறந்த உடன் அவர்களை நன்றாக கவனிக்கவேண்டுமே என்ற கவலை பெண்களை பீடித்துக்கொள்ளும். இதுவே மனஅழுத்தத்தில் கொண்டுபோய் விடும். உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் தளர்வடைந்து போயிருப்பவர்களுக்கு மசாஜ் சிறந்த நிவாரணியாக இருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
உடல் வலியை போக்குங்கள்
பிரசவத்தின் போது ஏகப்பட்ட உதிரப்போக்கு இருந்திருக்கும். இதனால் சத்துக்கள் குறைந்து உடல் வலி பின்னி எடுக்கும். பாதங்களிலும், தொடைகளிலும் வலி தெறிப்பதோடு தோள்களிலும் முதுகுப் பகுதிகளிலும் வலி அதிகமாக இருக்கும். அவர்களுக்கு மசாஜ் செய்வது உடல் வலியை சற்றே குறைக்கும். உடலில் ஆங்காங்கே மெதுவாக பிடித்து விட்டு மசாஜ் செய்துவிடுங்களேன். கணவர் இதை செய்து விடலாம். பெண்களுக்கு உடனடி ரிலீப் கிடைக்கும்.
ரத்தம் உடலில் பாயும்
பாடி மசாஜ் செய்வதன் மூலம் உடல் முழுவதும் ரத்தம் நன்றாக பாயும். இதனால் ரத்தம் மூலம் ஆக்ஸிஜன் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சப்ளை ஆவதால் உடல் வலி குறையும். அதோடு மசாஜ் செய்வதன் மூலம் தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்குமாம். மார்புப் பகுதியில் மென்மையாக மசாஜ் செய்வதால் அதன் காம்புப் பகுதியில் அடைந்துள்ள அழுக்குகள் நீங்குவதோடு அதிக அளவில் பால் சுரக்கும்
உடல் அழகாகும்
பிரசவத்தினால் தசைகள் தளர்ந்து போயிருக்கும். அவர்களுக்கு உடல் முழுவதும் மசாஜ் செய்வதால் தசைகள் இருகும். உடலானது படிப்படியாக பழைய நிலைக்கு திரும்பும். அதோடு ஆங்காங்கே கொழுப்புகள் சேர்ந்துள்ள பகுதிகளில் நன்றாக மசாஜ் செய்வதன் மூலம் அவை கரைந்து எடை குறைவதோடு உடல் சிக் என்று மாறிவிடும். மேலும் தழும்புகள் இருக்கும் பகுதிகளில் ஆயில் விட்டு மசாஜ் செய்வதன் மூலம் பிரசவ தழும்புகள் மறையும்.
பிரசவத்திற்குப் பின்னர் மசாஜ் செய்வதனால் உடலானது பழைய நிலைக்கு திரும்பும் என்றாலும் சிசேரியன் செய்தவர்கள் தையல் காய்ந்து பிரிக்கும் வரை காத்திருக்கவேண்டும். பின்னர் மிதமான வெந்நீரில் குளிக்கவேண்டும். மசாஜ் செய்த பின்னரும் வெந்நீரில் சில துளி எலுமிச்சையை சேர்த்து குளிக்கலாம். உடலும் மனமும் ரிலாக்ஸ் ஆக இருக்கும்.



Click it and Unblock the Notifications