Latest Updates
-
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. எல்லாரும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 28 பிப்ரவரி 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு வீண்செலவுகள் தேடிவரப்போகுதாம்...! -
30 ஆண்டு கழித்து மீனத்தில் உருவாகும் சக்திவாய்ந்த யோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது.. -
2026-ன் முதல் சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டமும், துன்பமும் துரத்தப்போகுதாம்..உங்க ராசி என்ன -
கர்நாடகா ஸ்பெஷல் கெம்பு சட்னி ரெசிபி... ஒரு தடவை செஞ்சு பாருங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்...! -
உங்களுக்கு பிம்பிள் அதிகமா வருதா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளை அடிக்கடி போடுங்க.. -
எகிப்திய மகாராணிகள் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய எண்ணெய்கள் என்னென்ன தெரியுமா? நீங்களும் ட்ரை பண்ணுங்க...! -
ரம்ஜான் நோன்பு கஞ்சி: குக்கரில் 2 விசில்-ல சூப்பரா செய்யலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க... -
40 வயதுக்குள் கோடீஸ்வரராகும் அதிர்ஷ்டமுள்ள 4 நட்சத்திரங்கள்... நீங்க பிறந்த நட்சத்திரம் இதுல இருக்கா? -
சூரியன் சந்திரனால் உருவாகும் ஆபத்தான யோகம்: இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்...
தாய்பால் சுரப்பதை நிறுத்தணுமா? இதை முயற்சி செய்யுங்களேன்!

தாய்ப்பாலை நிறுத்துவது சாதாரண காரியமல்ல. வலி நிறைந்த நிகழ்வு அது. குழந்தை குடிக்காவிட்டால் மார்பில் தாய்ப்பால் கட்டிக்கொள்ளும். எனவே படிப்படியாகத்தான் வற்ற வைக்கவேண்டும். மருந்து மாத்திரை சாப்பிடுவதை விட வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு தாய்பாலை வற்றச் செய்யலாம் என்கின்றனர் நிபுணர்கள் படியுங்களேன்.
மல்லிகைப்பூ, வேப்பிலை
தாய்ப்பால் சுரப்பை நிறுத்த வேண்டுமானால், மார்பகங்களில் மல்லிகைப் பூவை அரைத்து பற்றுப் போட்டால் அதன் வாசனைக்கு மார்பில் பால் சுரப்பது கட்டுப்படும். அதேபோல் வேப்பிலைகளை மார்பில் வைத்துக்கட்டினால் பால் வரண்டு போகும். படிப்படியாக பால் சுரப்பது நிற்பதுடன் வலியம் குணமாகும். முட்டைக்கோஸை பொடிப்பொடியாக நறுக்கி மார்பகத்தில் வைத்துக் கட்டினால் பால் சுரப்பு நின்றுவிடும்.
துவரம்பருப்பு
குழந்தைக்கு கொடுக்கா விட்டால் பால் சுரந்து அதிகமாக மார்பில் கட்டிக்கொள்ளும். இதனால் வலி அதிகரித்து காய்ச்சலை ஏற்படுத்திவிடும். அந்த நேரத்தில் துவரம் பருப்பை ஊறவைத்து அதனை கெட்டியாக அரைத்து மார்பில் பற்றுப் போடவேண்டும். நன்றாக உலந்து இறுக ஆரம்பித்த உடன் கட்டியிருக்கும் பால் வடிய ஆரம்பித்துவிடும்.
அதேபோல் வாழைப்பிஞ்சை அரைத்து மார்பில் பற்றுப் போட பால் சுரப்பது நின்றுவிடும். மார்பில் பால் கட்டிக்கொண்டு வலியும். வீக்கமும் ஏற்பட்டால் வெறும் வாணலியில் வெற்றிலையைப் போட்டு லேசாக வதக்கி. பொறுக்கும் சூட்டில் மார்பில் கட்டினால் வலியும் வீக்கமும் கறையும். எள்ளை வெல்லத்துடன் கலந்து நிறைய சாப்பிட்டால் உடனே பால் கட்டாமல் வடிந்து விடும்.
ஐஸ் கியூப் ஒத்தடம்
டைட்டான பிரா போட்டால் மார்பில் பால் சுரக்காது எனவே மார்பகத்தை லூசாக விடாமல் காட்டன் ப்ரா போட்டு மார்பகத்தை டைட்டாக வைக்கலாம். பால் கட்டிக்கொண்டு மார்பில் வலி ஏற்பட்டால் ஐஸ் கியூப்களை பேக்கில் போட்டு ஒத்தடம் கொடுக்கலாம். இதனால் பால் கட்டியிருந்தால் படிப்படியாக கரையும் வலியும் குறையும்.



Click it and Unblock the Notifications











