Just In
- 1 hr ago இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- 1 hr ago உங்களுக்கான அதிர்ஷ்ட மோதிரம் எது தெரியுமா? தங்கமா, வெள்ளியா?
- 2 hrs ago ஜோதிடத்தில் திசை என்றால் என்ன? உங்களுக்கு என்ன திசை நடக்கிறது? அதனால் கிடைக்கும் பலன்கள்..!
- 3 hrs ago 11 வயது சிறுமியை அம்மாவும்-மகனும் சேர்ந்து கடத்திய வினோதம்... எதுக்காக கடத்துனாங்க தெரியுமா?
Don't Miss
- Technology 75 நாளுக்கு ஒரே ரீசார்ஜ்.. தினசரி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ் கால் நன்மை.. ரூ.500 விலைக்குள் எந்த திட்டம்?
- Movies கில்லி படத்தில் வரும் விஜய்யின் வீடு எங்க இருக்கு தெரியுமா? செய்யாறு பாலு சொன்ன சுவாரசியத் தகவல்!
- News கரன்ட் இல்லாத நேரங்களிலும் இயங்குவதுதான் இன்வெர்ட்டர் ஏசியா?
- Sports வன்மத்தை கக்கிட்டாரு.. தோனியை வம்புக்கு இழுத்த கவுதம் கம்பீர்.. கொந்தளிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Finance டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ-வுக்கு நேரம் சரியில்லை.. ஐடி ஊழியர்களே உஷார்..!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
குழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை! குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன!
குழந்தைகள் பசிக்காக மட்டும் அழுவதில்லை! குழந்தைகள் அழ 16 காரணங்கள் இருக்கின்றன!
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலையாகும்.. அதுவும் கைக்குழந்தையை கையாழ்வது என்பது ஒவ்வொரு தாய்க்கும் சற்றும் சவாலான ஒரு விஷயம் தான்.. குழந்தையை பார்த்து பார்த்து வளர்க்க வேண்டியது அவசியமான ஒன்றாகும். குறிப்பாக குழந்தையை பெரியவர்களின் துணையில்லாமல் வளர்க்க வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் பெண்கள், குழந்தையை வளர்த்து பெரிய ஆளாக்க படாதபாடு படுவார்கள்...!
அப்படிப்பட்ட தாய்மார்களுக்கு குழந்தை இரவில் ஏன் அதிகமாக அழுகிறது.. என்ன காரணமாக இருக்கும்? என்பது போன்றவை குழப்பத்தை உண்டாக்கும்... என்ன தான் இருந்தாலும் வீட்டில் இப்போது பெரியவர்கள் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் இருக்க தான் செய்யும்.. அந்த குறையை போக்குவதற்கு தான் இந்த பகுதி..
குழந்தையின் ஒரு தகவல் தொடர்பு மொழி தான் இந்த அழுகை.. குழந்தை பசிக்கு அழுகும், தூக்கம் வருகிறது என்றால் அழுகும்.. ஏதேனும் அடிபட்டுவிட்டாலோ, அல்லது பூச்சிகள் கடித்து விட்டாலோ அழுகும்.. பொதுவாக குழந்தைகள் ஒருநாளைக்கு ஒரு மணி நேரம் வரையில் அழுகும்.. இந்த பகுதியில் குழந்தை அதிகமாக அழுதால் அதற்கு என்னவெல்லாம் காரணமாக இருக்கும் என்பதை பற்றி காணலாம்...!
பசிக்கு அழுதல்
ஒரு குழந்தை அழுகிறது என்றால் அது பசிக்காக தான் அழுகிறது என்று பல தாய்மார்கள் நினைத்துக் கொள்வார்கள்.. குழந்தை பசிக்காகத்தான் அழுகிறதா என்பதை உறுதிசெய்ய, தாயானவர் தன் விரலை நன்றாகச் சுத்தப்படுத்திக் கொண்டு, குழந்தையின் வாய்க்குள் வைத்தால், உடனே குழந்தை விரலைச் சப்பத் தொடங்கிவிடும். இதன் மூலம் குழந்தை பசியால் அழுகிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
தாகம்?
பொதுவாக, குழந்தை போதிய அளவு பால் குடித்த பின்னர், இரண்டு மணி நேரத்துக்குள் அழுதால், அது நிச்சயம் பசிக்காக இருக்காது. வேறு காரணத்தால் அது அழக்கூடும். பசிக்கு அடுத்தபடியாகத் தாகம் எடுத்தால் குழந்தை அழும்.
உதாரணமாக, திட உணவு சாப்பிடும் குழந்தைக்குச் சில தாய்மார் உணவைக் கெட்டியாகப் பிசைந்து கொடுத்துவிடுவார்கள். இதனால் உணவு விக்கிக்கொள்ளும். குழந்தைக்குத் தாகம் எடுக்கும். இதனால் சாப்பிட்ட பிறகு குழந்தை அழும். அப்போது கொஞ்சம் தண்ணீரைக் கொடுத்தால், குழந்தையின் அழுகை நின்றுவிடும்.
ஈரமான துணி இருந்தால்...!
பால் குடித்த பிறகு சிறுநீர் கழிப்பது, மலம் கழிப்பது போன்றவற்றால் உள்ளாடை, படுக்கை போன்றவை ஈரமாகி விடும்போது, அதைத் தெரியப்படுத்தவும் குழந்தை அழும். குழந்தை இரவில் அழுவதற்குப் பெரும்பாலும், இதுதான் காரணமாக இருக்கும். ஈரமான துணியை மாற்றிவிட்டால் அழுகை நிற்கும்.
குழந்தையின் துணி மிகவும் ஈரமாக இருந்தால், அது ரெசஸஸ் உருவாக காரணமாகிவிடும். எனவே நீங்கள் நீண்ட நேரம் நிலைக்கும் 12 மணிநேர டயப்பரை குழந்தைக்கு இரவு நேரத்தில் உபயோகப்படுத்துவது என்பது குழந்தை இரவில் நன்றாக தூங்குவதற்கு உதவி செய்யும்.
ஆடைகள் பிரச்சனையா?
குழந்தைகள் யாரும் எனக்கு இது போன்று கனமான ஆடைகள் வேண்டும், பிரமாண்டமான ஆடைகள் வேண்டும் என்று கேட்பது கிடையாது.. நாம் தான் நமது தேவைக்காகவும், குழந்தையை அழகாக வைத்து பார்க்க வேண்டும் என்பதற்காகவும், கனமான மற்றும் உறுத்தலாக இருக்க கூடிய ஆடைகளை குழந்தைக்கு அணிவித்து பார்க்கிறோம்..
குழந்தைகளின் ஆடைகள் இறுக்கமானதாகவும், கனமானதாகவும் இருந்தால் குழந்தை அழுக தான் செய்யும்.. எனவே குழந்தைகளுக்கு மிருதுவான இழைகளால் ஆன ஆடைகளை அணிவித்து விட வேண்டியது அவசியமாகும். டயப்பர் என்பது அவசர தேவைகளுக்காக பயன்படுத்த கூடியதாகும். எனவே இதனை எந்த நேரமும் குழந்தைக்கு அணிவித்து விடுவது என்பது கூடாது.. இதனால் குழந்தைகளுக்கு அலர்ஜிகள் உண்டாகலாம்.
பூச்சி கடித்தால்?
தன்னுடைய உடலில் ஏதேனும் புதிதாக ஊர்வது போல் உணர்ந்தால், அப்போது குழந்தை அழலாம். எறும்பு, கொசு, பூச்சி, பேன் கடித்தாலோ, சருமம் அரித்தாலோ குழந்தை அழும். புட்டிப்பாலில் சர்க்கரை கலந்து குழந்தைக்குக் கொடுக்கும்போது, அதில் சில சொட்டுகள் வாய் ஓரத்தில் ஒழுகியிருக்கும். சர்க்கரை வாசனைக்கு வரும் எறும்பு கடித்துவிடும். அப்போது குழந்தையின் சருமத்தில் ஒவ்வாமை ஏற்பட்டுச் சிவந்த தடிப்புகள் ஏற்படலாம்.
சில நேரம், ஒவ்வாமை குழந்தையின் குரல் நாணையும் தாக்கியிருந்தால், சருமத் தடிப்புகளோடு சரியாக மூச்சுவிட முடியாமல் குழந்தை அழும். அப்போது குழந்தையின் குரலும் மாறுபட்டிருக்கும்.
வயிற்று வலி
குழந்தைக்கு வயிற்று வலியும் காது வலியும் ஏற்படுவது மிகவும் சகஜம். குழந்தை தன்னுடைய தொடையை வயிற்றில் மடித்து வைத்துக்கொண்டு அழுதால், அதற்கு வயிற்றில் வலி இருக்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
குழந்தைக்கு அளவுக்கு அதிகமாகப் பால் அல்லது திட உணவைக் கொடுத்துவிட்டால், வயிறு உப்பி அழ ஆரம்பிக்கும். இதுபோல் உணவுடன் அதிகக் காற்று வயிற்றுக்குள் சென்றுவிட்டாலும், குழந்தை அழும். தாய்ப்பால் கொடுத்து முடித்தவுடன், ஒவ்வொரு முறையும் குழந்தையைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு அதன் முதுகைத் தட்டிக் கொடுக்க வேண்டும். இதனால் குழந்தையின் வயிறு தாயின் தோளில் அழுந்திக் காற்று வெளியேறிவிடும். குழந்தையும் அழுவதை நிறுத்திவிடும்.
உணவு ஒவ்வாமை
சில வேளை குழந்தைக்குக் குடல் சொருகிக்கொள்ளும். இதனால் குழந்தைக்கு வயிறு வீங்கி, வலி தாங்க முடியாமல் தொடர்ந்து அழும். அப்போது மலத்தில் ரத்தம் போகும். கூடவே வாந்தியும் வரும். உணவு ஒவ்வாமை காரணமாகவும் வயிற்றில் வலி வந்து குழந்தை அழும்.
காது வலி
காதின் உட்பகுதியில் செவிப்பறைக்குப் பின்னால் சீழ் இருக்கும்போது குழந்தைக்குக் காது வலிக்கும். அப்போது காதுப் பகுதியைத் தொட்டால், அதிகமாக அழும். செவிப்பறையில் சீழின் அழுத்தம் அதிகமாகி அதில் துளை விழுந்து, வெளிக்காதின் வழியாகச் சீழ் வடிந்துவிட்டது என்றால், காது வலி குறைந்துவிடும். இதன் பிறகு குழந்தை அழாது.
சளி
சளி, மூக்கு ஒழுகல், மூக்கு அடைப்பு, காய்ச்சல், தலைவலி, உடல் வலி, இளைப்பு, நெஞ்சில் வலி, சிறுநீர்க் கடுப்பு, மலச் சிக்கல், வாந்தி போன்ற காரணங்களாலும் குழந்தை அழக்கூடும். இந்த மாதிரி நேரங்களில் குழந்தை பால் குடிக்காது; தொடர்ந்து அழுவது, வீறிட்டு அழுவது, உடலை முறுக்கி அழுவது என்று அழுகைச் சத்தம் வேறுபடும்.
உப்பு சர்க்கரை கரைசல்
வயிற்றுப்போக்கு காரணமாகக் குழந்தைக்கு வயிற்றில் வலி வந்து அழும் அல்லது உடலில் நீர்ச்சத்து அதிகமாக வெளியேறி, தாகம் அதிகரித்து நாக்கு வறண்டு அழுவது வழக்கம். மருத்துவரைப் பார்ப்பதற்குள் சிறிது உப்புச் சர்க்கரைக் கரைசலைத் தண்ணீரில் கலந்து குழந்தைக்குக் கொடுத்தால், அழுகை நின்றுவிடும்.
குளிர் அல்லது வியர்வை
குழந்தைக்குக் குளிர் அடித்தாலும் அழும். புழுக்கமாக இருந்து உடல் வியர்த்தாலும் அழும். வாஷிங் மெஷின், வாக்குவம் கிளீனர், ஹேர் டிரையர் போன்றவற்றின் சத்தம் பிடிக்காமல் குழந்தை அழலாம். இந்தப் பிரச்சினைகளைச் சரி செய்தால் மட்டுமே குழந்தையின் அழுகை நிற்கும்.
பால் பற்கள் ஒவ்வொன்றாக முளைக்கத் தொடங்கும்போது குழந்தை அழும். சில மருந்துகளின் பக்க விளைவால் வயிற்றைப் புரட்டும்; வாந்தி வருவது போலிருக்கும். இதனாலும் குழந்தை அழலாம்.
களைப்பு
குழந்தையை பார்க்க பார்க்க கொஞ்சி விளையாட ஆசையாக தான் இருக்கும். அதற்காக குழந்தையை கொஞ்சிக் கொண்டே இருப்பது, தொட்டிலில் போட்டு ஆட்டுவது போன்றவை குழந்தைக்கு களைப்பையும் சோர்வையும் உண்டாக்கும். இதனால் குழந்தை அழுது கொண்டே இருக்கும்.
தூக்கும்போது கவனம்!
ஆறு மாதங்கள் வரையிலும் குழந்தையின் தலை நிற்காதபோது, கழுத்துப் பகுதியை நல்ல பிடிமானம் கொடுத்துத்தான் தூக்க வேண்டும். இல்லையென்றால், குழந்தைக்குக் கழுத்து சுளுக்கி வலி ஏற்படும். அப்போது தொடர்ச்சியாக அழும். இதற்குச் சுளுக்கு எடுக்கிறேன் என்று சுய மருத்துவம் செய்யக் கூடாது. உரிய மருத்துவரை அணுகித் தகுந்த சிகிச்சையைப் பெற்றுக்கொண்டால் மட்டுமே சரியான தீர்வு கிடைக்கும்.
தூக்கம்
குழந்தைக்கு தூக்கம் வந்து அழுகும் போது மெல்லிய தாலாட்டு பாடலை பாட வேண்டியது அவசியமாகும். இப்போது உள்ள இளம் தாய்மார்களுக்கு தாலாட்டு பாடல் தெரிவதில்லை.. எனவே உங்களது மொபைலில் தாலாட்டு பாடல்களை டவுண்லோடு செய்து குழந்தைக்கு போட்டு விடுங்கள்.. பெற்றோர்கள் பெரும்பாலும் குழந்தைகளுக்கான தாலாட்டு பாடல்களை கற்று வைத்துக் கொள்ள வேண்டியது என்பது அவசியமாகும்.
கவனத்தை ஈர்க்க..
குழந்தைகள் தங்களை யாரும் கவனிக்கவில்லை என்று நினைக்கும் போது அழும். அப்போது நீங்கள் குழந்தைக்கு விளையாட்டு காட்டுவது, பொம்மைகளை தருவது, அல்லது மடியில் எடுத்து படுக்க வைத்துக் கொண்டாலே போதும் குழந்தைகள் அழுகையை நிறுத்திவிடும்..