Latest Updates
-
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்!
பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்..

பொய் சொல்லக்கூடாது
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த முன் உதாரணம். எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நீங்கள்தான் கற்றுத்தரவேண்டும். பொய் சொல்வதனால் ஏற்படும் தீமைகளை பெற்றோர்கள்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். அதை விடுத்து யாரிடமாவது போனில் பேசும் போது வீட்டில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பதாக கூறினால் அவசியத்திற்கு பொய் சொல்வது தப்பில்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.
நேர்மையாக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து 'மரவெட்டியின் கதை' போன்ற நீதிக்கதைகளை கூறி பிள்ளைகளை மகிழ்வூட்டலாம்.
பொறுப்புணர்ச்சி அதிகரிக்க
வெளியிடங்களுக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவதானால் யாரிடமும் விட்டு விட்டு போகாதீர்கள். எங்கு போனாலும் கூட்டிக்கொண்டு போனால்தான் அவர்களுக்கும் எங்கு எப்படி நடந்து கொள்வது என்பது தெரியும்.
கோவிலுக்கு அழைத்துச் சென்றால் அங்கு விளையாடக்கூடாது என்று கூறி அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் அங்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். கண்ணை மூடி இறைவனை வழிபட்டால்மட்டுமே கோவிலின் அமைதி பாதுகாக்கப்படும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.
ஹோட்டலில் சில குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எதையாவது தட்டி உடைத்து விடுவார்கள். அதுமாதிரியான இடங்களுக்குச் சென்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுங்களேன். அதேபோல் அடுத்தவர்கள் வீட்டிற்குப் போகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் பழக்கப் படுத்த வேண்டும்.
சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு பர்ச்சேஸ் செய்ய சென்றால் குழந்தைகளுக்கு ட்ராலி தள்ள கற்றுக்கொடுங்கள். அதுவே மிகப்பெரிய பொறுப்பை அவர்களுக்கு கொடுத்தது போல ஆகும். அதேசமயம் பார்க் போன்ற விளையாடும் இடங்களுக்குச் சென்றால் ஒடி ஆடி விளையாட விடுங்கள். அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.



Click it and Unblock the Notifications