Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
பிள்ளைகளுக்கு நேர்மை - பொறுப்புணர்வைக் கற்றுக்கொடுங்கள்..

பொய் சொல்லக்கூடாது
பிள்ளைகளுக்கு பெற்றோர்கள்தான் சிறந்த முன் உதாரணம். எந்த சந்தர்ப்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களுக்கு நீங்கள்தான் கற்றுத்தரவேண்டும். பொய் சொல்வதனால் ஏற்படும் தீமைகளை பெற்றோர்கள்தான் கற்றுக்கொடுக்கவேண்டும். அதை விடுத்து யாரிடமாவது போனில் பேசும் போது வீட்டில் இருந்து கொண்டே வெளியூரில் இருப்பதாக கூறினால் அவசியத்திற்கு பொய் சொல்வது தப்பில்லை என்று நினைத்துக் கொள்வார்கள்.
நேர்மையாக இருப்பதனால் கிடைக்கும் நன்மைகள் குறித்து 'மரவெட்டியின் கதை' போன்ற நீதிக்கதைகளை கூறி பிள்ளைகளை மகிழ்வூட்டலாம்.
பொறுப்புணர்ச்சி அதிகரிக்க
வெளியிடங்களுக்கு குழந்தைகளை கூட்டிக்கொண்டு போவதானால் யாரிடமும் விட்டு விட்டு போகாதீர்கள். எங்கு போனாலும் கூட்டிக்கொண்டு போனால்தான் அவர்களுக்கும் எங்கு எப்படி நடந்து கொள்வது என்பது தெரியும்.
கோவிலுக்கு அழைத்துச் சென்றால் அங்கு விளையாடக்கூடாது என்று கூறி அழைத்துச் செல்லுங்கள். அப்பொழுதுதான் அங்கு அமைதியை கடைபிடிக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தெரியும். கண்ணை மூடி இறைவனை வழிபட்டால்மட்டுமே கோவிலின் அமைதி பாதுகாக்கப்படும் என்றும் அவர்களுக்குத் தெரியும்.
ஹோட்டலில் சில குழந்தைகள் ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். எதையாவது தட்டி உடைத்து விடுவார்கள். அதுமாதிரியான இடங்களுக்குச் சென்றால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக்கொடுங்களேன். அதேபோல் அடுத்தவர்கள் வீட்டிற்குப் போகும் போது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் பழக்கப் படுத்த வேண்டும்.
சூப்பர் மார்கெட் போன்ற இடங்களுக்கு பர்ச்சேஸ் செய்ய சென்றால் குழந்தைகளுக்கு ட்ராலி தள்ள கற்றுக்கொடுங்கள். அதுவே மிகப்பெரிய பொறுப்பை அவர்களுக்கு கொடுத்தது போல ஆகும். அதேசமயம் பார்க் போன்ற விளையாடும் இடங்களுக்குச் சென்றால் ஒடி ஆடி விளையாட விடுங்கள். அவர்களின் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.



Click it and Unblock the Notifications











