Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் 2027 வரை துரதிர்ஷ்டத்தை அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சத்தான பீர்க்கங்காய் சாதம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
ஹைதராபாத் முட்டை மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - தோசை, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் உச்சமடைவதால் கோடி நன்மைகளை பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சன்டே ஸ்பெஷல் - சிக்கன் வாங்குனா இந்த மாதிரி குழிப் பணியாரம் செஞ்சு பாருங்க - வித்தியாசமா, சூப்பரா இருக்கும் -
பாகிஸ்தானில் இந்திய ரூபாயின் மதிப்பு எவ்ளோ தெரியுமா? இந்திய ரூபாய் பாகிஸ்தானை விட வலிமையாக இருக்க காரணம் என்ன? -
கேரளா ஸ்டைல் நாடன் சிக்கன் கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 09 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க அதிர்ஷ்ட படிக்கட்டில் வேகமாக ஏறப் போறாங்களாம் -
வார ராசிபலன் (09 August 2026- 15 August 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது!
செல்லங்களுக்கு அதிகமா பிடிக்கும் பழங்கள் எது தெரியுமா!!!

அன்னாசி : குழந்தைகளது உடலுக்கு இது மிகவும் சிறந்த பழம். ஏனெனில் அதில் அளவுக்கு அதிகமாக வைட்டமின் பி மற்றும் சி நிறைந்துள்ளது. மேலும் இந்த பழம் குழந்தைகளுக்கு செரிமானத்தை அதிகப்படுத்துதோடு, தொண்டைகளில் பிரச்சனை மற்றும் ஜலதோஷம் போன்றவற்றை சரிசெய்யும். குழந்தைக்கு ஒரு வேளை ஜலதோஷம் பிடித்திருந்தால், அப்போது அவர்களுக்கு ஒரு டம்ளர் அன்னாசிப்பழ ஜூஸ் அல்லது ஒரு துண்டு அன்னாசிப்பழத்தை மறக்காமல் கொடுங்கள். மேலும் இதில் நீர்ச்சத்து அதிகமாக உள்ளது, ஆகவே அதனை அதிகமாக கொடுத்தால் குழந்தைகளின் உடலில் தண்ணீர் குறைபாடு இல்லாமல் இருக்கும்.
மாம்பழம் : மாம்பழம் என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காமல் இருக்காது. அந்த மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகமாக உள்ளது. ஆகவே குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு ஒரு மாம்பழம் கொடுத்தால் போதுமானது. மேலும் வைட்டமின் ஏ இருப்பதால், பார்வைக் கோளாறுகள் ஏற்படாமல் பார்த்து கொள்ளும். ஆகவே இந்த பழத்தை குழந்தைகளுக்கு பசிக்கும் போதெல்லாம் கொடுக்கலாம். சொல்லப்போனால் இது குழந்தைகளுக்கு ஒரு சிறந்த தின்பண்டம்.
மாதுளை : வைட்டமின், சோடியம், கால்சியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ள மாதுளையை குழந்தைகள் சாப்பிட்டால் அவர்கள் நன்கு ஆரோக்கியத்துடன், உடலில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவு அதிகரித்து, அவர்களை எந்த ஒரு நோயும் எளிதில் தாக்காமல் இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் எந்த ஒரு கடுமையான நோயையும் எதிர்த்து, தடுத்து நிற்கும் ஆற்றலுடையது. இந்த பழத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குழந்தைகளது மூளையை எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளும்.
bகுழந்தைகளது இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் கிவி பழத்தில் பொட்டாசியம், வைட்டமின் சி, கனிமச்சத்துக்கள் போன்றவை நிறைந்துள்ளது. வேண்டுமென்றால் கிவி பழத்தில் குழந்தைகளுக்கு ஜூஸ் செய்து கொடுக்கலாம். அவ்வாறு ஜூஸ் போடும் போது, அந்த பழத்தின் தோலை சீவி பின்னர் போட வேண்டும். இல்லையென்றால் கசப்பான சுவை ஏற்படும், பின் குழந்தைகள் அதனை வெறுத்துவிடுவர்.
ஆரஞ்சு : குழந்தைகளுக்கு ஆரஞ்சு பழத்தினாலான ஜூஸை கொடுத்தால், குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த ஒரு தொற்றுநோயும் தாக்காமல் பார்த்துக் கொள்ளும். மேலும் இதனை குழந்தைகள் குடிப்பதால், அவர்கள் பதட்டத்தை குறைத்துவிடும். மேலும் இந்த பழத்தால் ஆன ஜூஸை குழந்தைகள் தேர்வு எழுதும் முன் கொடுத்தால், அவர்கள் எந்த ஒரு பதட்டமும் இல்லாமல் எழுதிவிட்டு வருவர்.
எனவே மேற்கூறிய பழங்களை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று குழந்தை நல மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.



Click it and Unblock the Notifications