Latest Updates
-
சனி-சந்திர சேர்க்கை உருவாக்கும் விஷ யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
சனிபகவானின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களை துரதிர்ஷ்டம் விடாம துரத்தப்போகுதாம் - ஜாக்கிரதை -
2 குடைமிளகாயும், 2 வெங்காயமும் இருந்தா.. 10 நிமிஷத்துல இந்த கிரேவியை செய்யுங்க.. சப்பாத்திக்கு அள்ளும்.. -
தேங்காய் சட்னியை ஒருதடவை கேரளா ஸ்டைலில் இந்த மாதிரி அரைச்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது?
குழந்தைங்க ஸ்கூல்ல அதிகமா வெட்கப்படுறாங்களா? முதல்ல அதை குறைங்க...

* குழந்தைகளின் மனதில் தோன்றும் அனைத்தையும் வெளிப்படையாக சொல்லும் பழக்கத்தை பழக்க வேண்டும். எப்போதும் குழந்தைகளிடம் அதிமான ஸ்ட்ரிட்டோடு இருக்க வேண்டாம். இதனால் அவர்கள் எதையுமே வெளிப்படையாக பேசாமல், யாருடனும் பழகாமல் போய்விடுவார்கள். உதாரணமாக, இப்போது உறவினர் வீட்டிற்கு வென்றால், அங்கு அவர்கள் அங்கிருக்கும் குழந்தைகளோடு ஏதேனும் விளையாட நினைத்தால், விளையாடட்டும். அப்போது அவர்களிடம் விளையாட கூடாது என்று சொல்ல வேண்டாம். இதனால் அவர்கள் மனம் நிறைய பாதிக்கப்பட்டு, முக்கியமான இடத்தில் எவ்வாறு பேச வேண்டுமோ, அவ்வாறு பேச முடியாமல் போய்விடும். ஆகவே ஜாலியாக குழந்தைகளுடன் பழகுங்கள்.
* குழந்தைகளிடம் எப்போதும் வெளிப்படையாக நீங்கள் பேசுங்கள். ஏனெனில் நீங்கள் எவ்வாறு பேசுகிறீர்களோ, அவ்வாறே அவர்களும் பேசுவார்கள். மேலும் அவ்வாறு அவர்களோடு பேசும் போது, அவர்கள் எதற்கு வெட்கப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதனை அவர்களிடம் இருந்து மாற்றுங்கள். மேலும் பேசும் போது அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசிப் பழகுங்கள்.
* பள்ளிக்கு மட்டும் அனுப்பாமல், அவர்களுக்கு எந்த ஒரு விளையாட்டில் விருப்பமோ, அந்த விளையாட்டில் சேர்த்து விடுங்கள். இதனால் அவர்கள் நிறைய நேரம் மற்றவர்களுடன் இருப்பதால், வெட்கம் போய்விடும். அவர்களது டேலண்ட்டை தெரிந்து கொண்டு அதனை வெளிப்படுத்துங்கள். ஏனெனில் விளையாடும் போது, மற்றவர்களுடன் நல்ல ஒற்றுமை இருந்தால் தான் வெற்றியை அடைய முடியும். எனவே அவற்றை அவர்களே தெரிந்து புரிந்து அனைவரிடமும் நன்கு நடக்கப் பழகிக் கொள்வார்கள்.
* குழந்தைகளை எப்போதும் தனியாக விட்டு செல்ல வேண்டாம். ஏனெனில் வெட்கப்படும் குழந்தைகள் அனைத்தும், எப்போதும் தனிமையைத் தான் விரும்புவார்கள். ஆகவே அவர்களை எங்கேனும் வெளியே அழைத்துச் சென்று, அவர்களுக்கு பிடித்ததை வாங்கிக் கொடுங்கள்.
ஆகவே இவ்வாறெல்லாம் செய்து வந்தால், உங்கள் குழந்தை எப்போதும் வெட்கப்படாமல், எப்போதும் தைரியமாக இருப்பார்கள். மேலும் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும், அவர்களிடம் என்ன நடந்தது என்று கேட்டு பழகுங்கள். இவ்வாறு கேட்டு வந்தால், அவர்கள் தற்கோது எவ்வாறு நடக்கிறார்கள் என்பதை தெரிந்துக் கொள்ளலாம். சொல்லப்போனால், குழந்தைகளிடம் ஒரு நண்பன் போல பழகி வாருங்கள்.
வேறு என்னவெல்லாம் செய்யலாம் என்று உங்களுக்குத் தெரிந்தால், எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்....



Click it and Unblock the Notifications