Latest Updates
-
கேது-சந்திரன் உருவாக்கும் கிரகண யோகம் 2026: இந்த 3 ராசிக்காரங்க கோடிகளை குவிக்கப்போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
இந்த ஒரு மூலிகை டீயை தொடர்ந்து 14 நாட்கள் குடித்தால் சிறுநீரக கல் கரையுமாம் - கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
பாபா வாங்கா-நோஸ்ட்ரடாமஸ் கணிப்பு படி மூன்றாம் உலகப்போருக்கு பின் எந்த நாடு சக்திவாய்ந்ததாக இருக்கும் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடைந்த குரு பகவான்: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாரெல்லாம் கவனமா இருக்கணும் தெரியுமா? -
வெயில் காலத்தில் இந்த கஞ்சியை அடிக்கடி செஞ்சு குடிங்க.. கொழுப்பும் குறையும், உடலும் குளிர்ச்சியா இருக்கும்... -
இன்றைய ராசிபலன் 12 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு நினைத்தது நடக்கும் நாளாக இருக்குமாம்...! -
30 ஆண்டுக்கு பின் சனியும்-செவ்வாயும் மீனத்தில் இணைவதால் இந்த 3 ராசிக்காரங்க டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
No Oil Noi Boil Recipe: அடுப்பே தேவைப்படாத ஆரோக்கியமான, சுவையான இட்லி மற்றும் சட்னி ரெசிபி...ட்ரை பண்ணுங்க...! -
1 வருடத்துக்கு பின் மேஷம் செல்லும் சுக்கிரன்: இந்த 3 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம்...! -
336 ஆண்டுகளுக்கு முன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜாக்கு 11 மார்ச் 'இதே' நாளில் என்ன நடந்தது தெரியுமா?
குழந்தைகளின் பற்களை முறையா கவனிங்க!!!

ஆகவே குழந்தையின் பல் வரிசை சரியில்லாமல் போனால் குழந்தையின் அழகு சிதைந்துவிடும். மேலும் 'பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்துவிட்டால் அவர்களால் சரியாக தெளிவாக பேச முடியாது. அதனால் அவர்கள் தன்னம்பிக்கையை கூட இழந்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்துவிட்டால், அவர்களால் எதையும் நன்றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.
பொதுவாக குழந்தைகளுக்கு 6-7 மாதத்தில் பல் முளைக்கத் தொடங்கும். அவ்வாறு பல்லானது குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது அவர்களுக்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது குழந்தைகள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைத்து கடிக்கும் போது தொற்றுக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படக்கூடும்.
அந்த நேரத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நோயானது குழந்தையை பிடித்துக் கொள்ளும். ஆகவே குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
முக்கியமாக குழந்தைகள் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடும் போது அதில் இருக்கும் இனிப்பானது குழந்தைகளின் வாயில் தங்கி, பற்களானது சொத்தையாகி விழுந்துவிடும். ஆகவே குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுப்பொருளை கொடுத்தாலும், அதைச் சாப்பிட்டப்பின் குழந்தையின் வாயை நன்கு கழுவ வேண்டும்.
மேலும் குழந்தைகள் உணவுகளை சாப்பிடுவதை விட நொறுக்கு தீனி சாப்பிடுவது தான் அதிகம். இதனாலே அதிக அளவில் குழந்தைகள் பற்களை இழக்கின்றனர் என்று புள்ளி விவரம் ஒன்றும் கூறியுள்ளது. எனவே குழந்தைகள் எதை சாப்பிட்டு முடித்தாலும், குழந்தையின் வாய்க்குள் தண்ணீரை விட்டு கழுவி விடுவது நல்லது. இதனால் பற்கள் சொத்தையாகி விழுவதை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications











