Latest Updates
-
ராகு-கேதுவிற்கு இடையில் வரும் சூரியன்: மே 15 முதல் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
கொளுத்தும் வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த 3 வாஸ்து மாற்றங்களைச் செஞ்சா வீடு ஜில்லென்று மாறும்! -
உங்களுக்கு குடல் புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 7 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க போதும்..! -
சனி ஜெயந்தி நாளில் 2 முறை நடக்கும் சந்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுது! -
வாரம் ஒருமுறை இந்த கம்பு அடை தோசையை செஞ்சு சாப்பிடுங்க.. எலும்பு பிரச்சனையே வராது... -
இன்றைய ராசிபலன் 13 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த நாளாக இருக்குமாம் -
சனிபகவான் ரேவதி நட்சத்திரத்திற்கு செல்வதால் துரதிர்ஷ்டத்தையும், ஆபத்துகளையும் சந்திக்கப்போகும் 3 ராசிகள் -
சௌ சௌ வாங்குனா இந்த மாதிரி வித்தியாசமா சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
ஹன்டா வைரஸ் Vs. கொரோனா வைரஸ்: இந்த இரண்டில் எது மிகவும் ஆபத்தானது? அவற்றின் அறிகுறிகள் என்னென்ன தெரியுமா?
குழந்தைகளின் பற்களை முறையா கவனிங்க!!!

ஆகவே குழந்தையின் பல் வரிசை சரியில்லாமல் போனால் குழந்தையின் அழகு சிதைந்துவிடும். மேலும் 'பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்துவிட்டால் அவர்களால் சரியாக தெளிவாக பேச முடியாது. அதனால் அவர்கள் தன்னம்பிக்கையை கூட இழந்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்துவிட்டால், அவர்களால் எதையும் நன்றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.
பொதுவாக குழந்தைகளுக்கு 6-7 மாதத்தில் பல் முளைக்கத் தொடங்கும். அவ்வாறு பல்லானது குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது அவர்களுக்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது குழந்தைகள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைத்து கடிக்கும் போது தொற்றுக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படக்கூடும்.
அந்த நேரத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நோயானது குழந்தையை பிடித்துக் கொள்ளும். ஆகவே குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
முக்கியமாக குழந்தைகள் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடும் போது அதில் இருக்கும் இனிப்பானது குழந்தைகளின் வாயில் தங்கி, பற்களானது சொத்தையாகி விழுந்துவிடும். ஆகவே குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுப்பொருளை கொடுத்தாலும், அதைச் சாப்பிட்டப்பின் குழந்தையின் வாயை நன்கு கழுவ வேண்டும்.
மேலும் குழந்தைகள் உணவுகளை சாப்பிடுவதை விட நொறுக்கு தீனி சாப்பிடுவது தான் அதிகம். இதனாலே அதிக அளவில் குழந்தைகள் பற்களை இழக்கின்றனர் என்று புள்ளி விவரம் ஒன்றும் கூறியுள்ளது. எனவே குழந்தைகள் எதை சாப்பிட்டு முடித்தாலும், குழந்தையின் வாய்க்குள் தண்ணீரை விட்டு கழுவி விடுவது நல்லது. இதனால் பற்கள் சொத்தையாகி விழுவதை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications