Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தைகளின் பற்களை முறையா கவனிங்க!!!

ஆகவே குழந்தையின் பல் வரிசை சரியில்லாமல் போனால் குழந்தையின் அழகு சிதைந்துவிடும். மேலும் 'பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்துவிட்டால் அவர்களால் சரியாக தெளிவாக பேச முடியாது. அதனால் அவர்கள் தன்னம்பிக்கையை கூட இழந்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்துவிட்டால், அவர்களால் எதையும் நன்றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.
பொதுவாக குழந்தைகளுக்கு 6-7 மாதத்தில் பல் முளைக்கத் தொடங்கும். அவ்வாறு பல்லானது குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது அவர்களுக்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது குழந்தைகள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைத்து கடிக்கும் போது தொற்றுக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படக்கூடும்.
அந்த நேரத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நோயானது குழந்தையை பிடித்துக் கொள்ளும். ஆகவே குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
முக்கியமாக குழந்தைகள் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடும் போது அதில் இருக்கும் இனிப்பானது குழந்தைகளின் வாயில் தங்கி, பற்களானது சொத்தையாகி விழுந்துவிடும். ஆகவே குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுப்பொருளை கொடுத்தாலும், அதைச் சாப்பிட்டப்பின் குழந்தையின் வாயை நன்கு கழுவ வேண்டும்.
மேலும் குழந்தைகள் உணவுகளை சாப்பிடுவதை விட நொறுக்கு தீனி சாப்பிடுவது தான் அதிகம். இதனாலே அதிக அளவில் குழந்தைகள் பற்களை இழக்கின்றனர் என்று புள்ளி விவரம் ஒன்றும் கூறியுள்ளது. எனவே குழந்தைகள் எதை சாப்பிட்டு முடித்தாலும், குழந்தையின் வாய்க்குள் தண்ணீரை விட்டு கழுவி விடுவது நல்லது. இதனால் பற்கள் சொத்தையாகி விழுவதை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications