Latest Updates
-
சன்டே ஸ்பெஷல் ஹனி கார்லிக் சிக்கன் - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
அடுத்த 6 மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழில் மற்றும் பண விஷயத்தில் கவனமா இருக்கணும்.. -
Actor Bhagyaraj Death: வாக்கிங் சென்ற பின் காலமான நடிகர் பாக்யராஜ்! உண்மையில் வாக்கிங் மாரடைப்பை ஏற்படுத்துமா? -
சத்தான.. எலுமிச்சை இஞ்சி ரசம் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
வெறும் தோசையை விட முட்டை தோசை ஏன் சிறந்தது? - விளக்கும் டாக்டர்.பிரகாஷ்மூர்த்தி! -
ஜூன் இறுதியில் உருவாகும் அங்காரக யோகம்: டிசம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்! -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இப்படி சட்னி அரைங்க.. வீட்டுல எல்லாரும் எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 27 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
புதன் வக்ர பெயர்ச்சியால் ஜூன் இறுதியில் இந்த 3 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
சுக்கிரன்-கேதுவின் இணைப்பால் ஜூலை மாதம் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தைகளின் பற்களை முறையா கவனிங்க!!!

ஆகவே குழந்தையின் பல் வரிசை சரியில்லாமல் போனால் குழந்தையின் அழகு சிதைந்துவிடும். மேலும் 'பல் போனால் சொல் போச்சு' என்பது பழமொழி. இதற்கேற்ப குழந்தைகளின் பல் சொத்தையாகி விழுந்துவிட்டால் அவர்களால் சரியாக தெளிவாக பேச முடியாது. அதனால் அவர்கள் தன்னம்பிக்கையை கூட இழந்துவிடுவார்கள்.
குழந்தைகளுக்கு ஒரு சில பற்கள் விழுந்துவிட்டால், அவர்களால் எதையும் நன்றாக மென்று சாப்பிட முடியாது. இதனால் அவர்களுக்கு அஜீரணக் கோளாறு ஏற்படும்.
பொதுவாக குழந்தைகளுக்கு 6-7 மாதத்தில் பல் முளைக்கத் தொடங்கும். அவ்வாறு பல்லானது குழந்தைகளுக்கு பற்கள் முளைக்க தொடங்கும் போது அவர்களுக்கு எதையாவது கடிக்க வேண்டும் என்று தோன்றும். அப்போது குழந்தைகள் கண்ட கண்ட பொருட்களை வாயில் வைத்து கடிக்கும் போது தொற்றுக் காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்றவை ஏற்படக்கூடும்.
அந்த நேரத்தில் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் நோயானது குழந்தையை பிடித்துக் கொள்ளும். ஆகவே குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியது பெற்றோரின் முக்கிய கடமையாகும்.
முக்கியமாக குழந்தைகள் சாக்லேட் அல்லது ஐஸ்கிரீம் போன்றவற்றை சாப்பிடும் போது அதில் இருக்கும் இனிப்பானது குழந்தைகளின் வாயில் தங்கி, பற்களானது சொத்தையாகி விழுந்துவிடும். ஆகவே குழந்தைகளுக்கு எந்த ஒரு உணவுப்பொருளை கொடுத்தாலும், அதைச் சாப்பிட்டப்பின் குழந்தையின் வாயை நன்கு கழுவ வேண்டும்.
மேலும் குழந்தைகள் உணவுகளை சாப்பிடுவதை விட நொறுக்கு தீனி சாப்பிடுவது தான் அதிகம். இதனாலே அதிக அளவில் குழந்தைகள் பற்களை இழக்கின்றனர் என்று புள்ளி விவரம் ஒன்றும் கூறியுள்ளது. எனவே குழந்தைகள் எதை சாப்பிட்டு முடித்தாலும், குழந்தையின் வாய்க்குள் தண்ணீரை விட்டு கழுவி விடுவது நல்லது. இதனால் பற்கள் சொத்தையாகி விழுவதை தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications