Latest Updates
-
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
கருக்கலைப்பு மாத்திரை எப்போது எடுத்துக் கொள்ள வேண்டும்? எப்படி சாப்பிடக்கூடாது?
கருக்கலைப்பு செய்வதற்காகவோ கருத்தடைக்காகவோ மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்களாக இருந்தால் அதை எப்போது எடுக்க வேண்டும் என்று இற்த கட்டுரையில் விவாதிக்க்பட்டுள்ளது. அது பற்றிய விளக்கமான பதிவு தான் இது.
கருவுற்ற பெண்கள், கருவை கலைக்க விரும்பினால் பெரும்பாலும் தேர்ந்தெடுக்கும் முறை கருக்கலைப்பு மாத்திரைகள்தாம். ரணசிகிச்சைக்கு மாற்றாக மாத்திரைகளையே அநேகர் நாடுகின்றனர்.

கருக்கலைப்பு மாத்திரைகள் எதிர்மறை பக்கவிளைவுகளை அளிக்கக்கூடியவை. ஆகவே, மருத்துவ கண்காணிப்பில் அவற்றை பயன்படுத்துவது நல்லது. கருக்கலைப்பு மாத்திரைகளை எப்போது சாப்பிடலாம் என்பது குறித்து பெண்களிடையே பல சந்தேகங்கள் உள்ளன.

கருக்கலைப்பு மாத்திரை
கருவை கலைத்திட வேண்டும் என்று நூறு சதவீதம் உறுதியாக முடிவெடுத்தால் மட்டுமே மாத்திரைகளை சாப்பிட ஆரம்பிக்க வேண்டும்.
கருக்கலைப்பு மாத்திரைகளை சாப்பிடுவதற்கு முன்பு அல்ட்ரா சவுண்ட் என்னும் ஸ்கேன் பரிசோதனையை செய்வது நல்லது.

பரிசோதனை
இந்தப் பரிசோதனை மூலம் கரு, கருப்பைக்குள் சரியாக உருவாகி உள்ளதா அல்லது கருப்பைக்கு வெளியே உருவாகியுள்ளதா என்று உறுதியாக அறிந்து கொள்ள முடியும். கருப்பைக்கு வெளியே கரு உருவாகியிருந்தால் கண்டிப்பாக கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
அது ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும். கருப்பைக்கு வெளியில் கரு உண்டாகியிருக்கும் நிலையில் கருக்கலைப்புக்கான மாத்திரைகளை சாப்பிட்டால், சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வரும் ஃபாலோபியன் குழல் வெடித்து உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படலாம்.

எத்தனை நாள்?
அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை, எத்தனை நாள் கர்ப்பம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும்.
கருவுற்று ஒன்பது வாரங்களுக்கு மேலாக கடந்திருந்தால் கருக்கலைப்பு மாத்திரைகளை உண்ணக்கூடாது.
கர்ப்பந்தரித்து 49 நாள்கள் கடந்திருந்தால் மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் மாத்திரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

அட்ரீனல் செயலிழப்பு
கருத்தரித்த முதல் இரண்டு வாரங்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அக்காலத்தில் மாத்திரையின் மூலம் கருக்கலைந்திட 95 முதல் 97 சதவீதம் வாய்ப்பு உண்டு. நாட்பட்ட அட்ரீனல் செயலிழப்பு, இரத்தசோகை, இருதய நோய் மற்றும் கட்டுப்படுத்தாத வலிப்பு குறைபாடு போன்ற உடல்நல பாதிப்பு இருப்போருக்கு இவ்விஷயத்தில் முறையான மருத்துவ கண்காணிப்பு அவசியம்.

கடைசி மாதவிடாய்
கடைசியாக மாதவிடாய் நின்று 49 நாள்களுக்குள் கருக்கலைப்பு மாத்திரையை சாப்பிட்டு விட வேண்டும். தவறினால், கருக்கலைப்புக்கு பின்னர் அதீத மற்றும் ஒழுங்கற்ற இரத்தப்போக்கு போன்ற வேண்டாத பின்விளைவுகள் உருவாகும்.



Click it and Unblock the Notifications