Latest Updates
-
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க வாயை திறந்தாலே பிரச்சனையை சந்திப்பாங்க.. உஷார்! -
சாணக்கிய நீதி படி இந்த 5 குணங்கள் உள்ளவர்கள் சமூகத்தில் எல்லோராலும் மதிக்கப்படுவார்களாம் - உங்ககிட்ட இருக்கா? -
வெள்ளரிக்காய் தோசையும், கருப்பு உளுந்து சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு கேட்ட வரங்கள் கிடைக்கப்போகுதாம் -
வக்ரமாகும் சனிபகவான்: ஜூலை முதல் 138 நாட்களுக்கு இந்த 4 ராசிக்கு தொழில் வளரும், வருமானம் அதிகரிக்கும்! -
வெயில் காலத்தில் ஏன் அடிக்கடி சண்டை வருது? தம்பதிகளே, இந்த ஒரு விஷயத்தை கவனிங்க! -
திருமண சீசன்ல வெயில், மழையால் கவலையா? பட்ஜெட் வீணாகாம இருக்க இந்த 5 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க! -
வயசானாலும் இளமையா தெரியணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் பேக்குகளை போடுங்க..
கருச்சிதைவு ஏற்பட்டால் மார்பக புற்றுநோய் வருமா?
தற்போது பெண்கள் அனைவரும் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மார்ப புற்றுநோய். இத்தகைய மார்பக புற்றுநோயால் நிறைய பெண்கள் பாதிக்கப்படுவதால், அனைத்து பெண்களும் மார்பக புற்றுநோயைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அதற்காகத் தான் இந்த நோயைப் பற்றிய பல விழிப்புணர்வுகள் ஆங்காங்கு நடைபெறுகின்றன.
பொதுவாக மார்பக புற்றுநோய் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில் பரம்பரை, முறையற்ற மாதவிடாய் சுழற்சி, அதிகப்படியான ஆல்கஹாலை அருந்துதல் மற்றும் கருச்சிதைவு போன்றவை குறிப்பிடத்தக்கவை.

எப்படி கருச்சிதைவு மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்?
கருச்சிதைவு ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். ஏனெனில் பெண்கள் கர்ப்பமாகும் போது, அவரது உடலில் பெண் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜனின் உற்பத்தி அதிகமாக இருக்கும். அப்படி ஈஸ்ட்ரோஜனின் அளவு அதிகரிக்கும் போது, மார்பகத்தின் அளவு அதிகரிக்க ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, அதே சமயம் பால் சுரக்கவும் ஆரம்பிக்கும். அப்படி இருக்கும் போது, கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய்க்கு வழிவகுக்கும். அதுவே இரண்டு மூன்று மாதங்கள் கழித்து கருச்சிதைவு நடைபெற்றால், அது மார்பக புற்றுநோய் வரும் வாய்ப்பை இன்னும் அதிகரிக்கும்.
அதுமட்டுமல்லாமல், 1997 ஆம் ஆண்டு நியூ இங்கிலாந்து ஜெர்னல் ஆஃப் மெடிசன், மார்பக புற்றுநோய்க்கும், கருச்சிதைவிற்கு உள்ள தொடர்பினை கண்டறிவதற்கு சர்வே ஒன்றை நடத்தியது. இதில் கருச்சிதைவானது கருத்தரித்த ஆரம்ப காலத்தில் ஏற்பட்டால், மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்றும், அதுவே 2-3 மாதங்கள் கழித்து ஏற்பட்டால், அது மோசமாகும் வாய்ப்பை அதிகரிக்கும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
மார்பக புற்றுநோய் இருப்பதை எப்படி கண்டுப்பிடிப்பது?
மார்பக புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுப்பிடித்தால், அதனை குணப்படுத்திவிடலாம். அதற்கு அதனை எப்படி கண்டுப்பிடிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டும். அதிலும் வீட்டிலேயே சோதனையை செய்து எளிமையாக கண்டுப்பிடிக்கலாம். அதற்கு செய்ய வேண்டியதெல்லாம், இது தான்..
* முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, வலது கையை மேலே தூக்கி, கழுத்தின் பின்புறம் வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடது கையின் விரல்களால், மார்பகம் மற்றும் மார்பகத்தைச் சுற்றியுள்ள இடத்தை வட்ட சுழற்சியில் மென்மையாக மசாஜ் செய்வது போல் தேய்த்து பார்க்க வேண்டும். இதேப் போன்று இடது பக்கமும் செய்து பார்க்க வேண்டும். அப்போது ஏதேனும் கட்டி போன்று தென்பட்டால், அது மார்பக புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியாகும்.
* அதுமட்டுமல்லாமல், மார்பக காம்புகளில் இருந்து ஏதேனும் நீர்மம் அடிக்கடி வெளிவந்தாலோ அல்லது மார்பக காம்புகளின் நிறம் மாறுபட்டாலோ அல்லது மார்பகத்தின் வடிவம் வித்தியாசமாக இருந்தாலோ, உடனே மருத்துவரை அணுக வேண்டும்.



Click it and Unblock the Notifications