Latest Updates
-
புதன் பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
கிராமத்து ஸ்டைல் தட்டப்பயறு சுரைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
டெங்குவில் இருந்து சீக்கிரம் குணமாகணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க.. -
கோடை வெயிலை சமாளிக்க இந்த 5 செடிகள் போதும்… வீடே குளிர்ச்சியாகவும் செல்வமும் தானாக பெருகும்! -
நீட் மறுதேர்வு எப்போது? சிபிஐ அதிரடி கைதுக்கு பின் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு! -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இதெல்லாம் செய்யாதீங்க.. இல்ல சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தியான இன்று எந்த ராசிக்கு சூப்பராகவும், எந்த ராசிக்கு மோசமாகவும் இருக்கும்? -
ராகி சுரைக்காய் தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 16 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க உச்சத்தை தொடப்போறாங்களாம் -
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது!
நம்மை அறியாமல் கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் 8 செயல்கள்!!!
பெண்களுக்கு கருத்தரித்தல் என்பது ஒரு பெரிய பரிசு. எந்த ஒரு பெண்ணும் அந்த பரிசை வீணாக்குவதற்கு விரும்பமாட்டார்கள். ஆனால் கடவுள் தந்த அந்த பரிசானது பெண்கள் செய்யும் சிறு தவறுகளால் வீணாகிவிடுகிறது. இந்த உலகில் தவறு செய்யாதவர்கள் இருக்கமாட்டார்கள். ஆனால் கர்ப்பம் என்று வந்த பின்னர், எந்த ஒரு பெண்ணும் அஜாக்கிரதையுடன் செயல்படக்கூடாது. ஏனெனில் அவை வயிற்றில் வளரும் சிசுவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும்.
எனவே கர்ப்பமாக இருக்கும் போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். குறிப்பாக கருத்தரித்துவிட்டால், வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்கள் ஏற்படும். ஆனால் அவையே அளவுக்கு அதிகமாக போனால், அதுவே கருச்சிதைவிற்கு வழிவகுக்கும். யாரும் இந்த உலகில் கருச்சிதைவு ஏற்பட வேண்டுமென்று ஆசைப்படமாட்டார்கள். இருப்பினும் சிறு கவனக்குறைவினால், இத்தகைய கருச்சிதைவு ஏற்படுகிறது. அதிலும் கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் தான், இத்தகைய கருச்சிதைவு ஏற்படும். இப்போது கருச்சிதைவிற்கு வழிவகுக்கும் சில செயல்கள் என்னவென்று பார்ப்போம்.

உணவுப்பழக்கம்
உணவுகளை சாப்பிடும் போது பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களை அறவே தவிர்க்க வேண்டும். மேலும் நல்ல ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பழங்களை சாப்பிட வேண்டும். ஏனெனில் அழுகிய பழங்களையோ அல்லது அசுத்தமான பழங்களையோ சாப்பிட்டாலும், அவை கருச்சிதைவிற்கு வழிவகுக்கும்.

பயணம்
இந்தியாவில் உள்ள சாலைகள் மிகவும் மோசமானதாக உள்ளன. இந்த சாலைகளில் கர்ப்பிணிகள் பயணம் மேற்கொண்டால், அது கருவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது இரண்டு அல்லது மூன்று சக்கர வாகனங்களில் பயணம் செய்ய வேண்டாம். ஏனெனில் சிறிது தடுமாறினாலும், கீழே வழுக்கி விட நேர்ந்து, இறுதியில் கருச்சிதைவை ஏற்படுத்தும்.

போதிய ஓய்வு இல்லாமை
அனைத்து கர்ப்பிணிகளுக்கும் குறைந்தது 8 மணிநேர தூக்கமும், 2 மணிநேர ஓய்வும் மிகவும் இன்றியமையாதது. ஒருவேளை உடலுக்கு போதிய ஓய்வு இல்லாவிட்டால், அவை உடலுக்கு தேவையான பலத்தைக் கொடுக்காமல், தடுமாற்றத்தை உண்டாக்கிவிடும்.

ஆபத்தான விளையாட்டுக்கள்
கர்ப்பமாக இருக்கும் போது வேகமாக சைக்கிள் ஓட்டுவது, குதிரை பந்தயம், ஸ்கேட்டிங், தண்ணீர் பூங்காக்களில் உள்ள விளையாட்டுக்கள் போன்ற விளையாட்டுக்களை அறவே தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை குழந்தைக்கு மட்டுமின்றி தாய்க்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

மன அழுத்தம்
அமைதியாக இருந்து ஆளைக் கொல்வது தான் மன அழுத்தம். இத்தகைய மன அழுத்தத்தை உண்டாக்கும் ஹார்மோன்கள் கருப்பையில் இறுக்கத்தை உருவாக்கி கருச்சிதைவை ஏற்படுத்தும். எனவே கர்ப்பமாக இருக்கும் போது மனதை அமைதியாக வைத்துக் கொள்ளும் செயல்களில் ஈடுபட வேண்டும்.

புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால்
தொடர்ச்சியாக புகைப்பிடிப்பவராகவோ அல்லது ஆல்கஹால் பருகினாலோ, அந்த பழக்கத்தில் இருந்து மீள்வது என்பது மிகவும் கடினம். ஆனால் அதில் உள்ள நிக்கோட்டின் மற்றும் ஆல்கஹாலில் உள்ள பொருள் இரத்த ஓட்டத்தை தடுத்து நிறுத்தி, நஞ்சுக்கொடிக்கு ஆபத்தை ஏற்படுத்தி, கருச்சிதைவை எளிதாக்கிவிடும்.

மருந்து மாத்திரைகள்
மருந்து பொருட்களான ஆஸ்பிரின் போன்றவற்றை கர்ப்பத்தின் போது எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் எந்த வகையான ஸ்டெராய்டுகளையும் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. அதிலும் இதனை தேவையில்லாமல் அடிக்கடி எடுத்தால், அவை கருச்சிதைவை ஏற்படுத்தும்.

தவறான உடற்பயிற்சி
கர்ப்பமாக இருக்கும் போது செய்யும் உடற்பயிற்சியில் மிகவும் கவனம் தேவை. ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது அனைத்து உடற்பயிற்சிகளுமே பாதுகாப்பானது அல்ல. ஏனெனில் சில உடற்பயிற்சிகள், வயிற்றை இறுக்கமடையச் செய்யும். எனவே எந்த ஒரு உடற்பயிற்சி மேற்கொள்ளும் முன்பும், மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications