Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
புற்றுநோய் போன பிறகு கர்ப்பமாவது சாத்தியமா?
பொதுவாக உடலில் நோய் இருக்கும் போது, அவை நீங்கி ஒரு புது வாழ்க்கை அமைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதே கடினமாக இருக்கும் போது, பெண்ணாக பிறந்த ஒவ்வொரு பெண்ணும் பெற வேண்டிய குழந்தை பாக்கியத்தை பெற நினைப்பது, அதுவும் கொடிய நோயான புற்றுநோய் வந்து சரியான பின்னர் எதிர்பார்ப்பது என்பது எவ்வளவு கடினமானதாக இருக்கும். அதிலும் தற்போது புற்றுநோயால் அதிக இளம் தலைமுறையினர் மற்றும் நடுத்தர வயது பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் ஒரு சில உயர்தர சிகிச்சையால் நிறைய பெண்கள் அந்த நோயிலிருந்து நீங்கி, ஆரோக்கியமாக இருக்கின்றனர்.
ஆகவே அத்தகைய பெண்கள் தங்கள் வாழ்க்கை காப்பாற்றப்பட்ட பிறகு என்ன நினைப்பார்கள்? வேறு என்ன, கர்ப்பம் ஆகி குழந்தை பெறுவது தான். இது சாத்தியம் தானா? இதனால் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா? சரி, அதைப் பற்றி பார்ப்போமா!!!

குழந்தை பெறுவது சாத்தியமா?
சாதாரணமான புற்றுநோய் வந்து சரியானப் பின்பு, எதற்கு குழந்தைப் பெறுவது பற்றி கவலைப்பட வேண்டும். வேண்டுமென்றால் கருப்பை அல்லது கருவகப் புற்றுநோய் வந்தால், அவற்றால் இனப்பெருக்க மண்டலம் பாதிக்கப்படும். இத்தகைய புற்றுநோய் வந்தால், இயற்கையான முறையில் கர்ப்பமானால் தான் உண்டு. அதிலும் சிகிச்சைக்குப் பிறகு உடல்நிலை நன்கு ஆரோக்கியமடையும் வரை கொஞ்ச நாட்கள் காத்திருந்தால், நிச்சயம் கர்ப்பம் ஆகும் வாய்ப்பு உள்ளது.
எத்தனை நாட்கள் காத்திருக்க வேண்டும்?
பொதுவாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, ஹீமோதெராபி சிகிச்சை மூலம் சரியானால், குறைந்தது 6 மாதம் காத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவர். ஏனெனில் இந்த சிகிச்சையின் போது அளிக்கப்படும் ஒருசில கதிர்கள், கருப்பையில் உள்ள கருமுட்டையை பாதிக்கும். இதனால் அந்த நேரம் கருத்தரித்தால் குழந்தைக்கு மரபணு குறைபாட்டினால் கருவுற்றிருக்கும். ஆகவே இந்த கருப்பை சரியாவதற்கு குறைந்தது 6 மாதம் வேண்டுமென்று சொல்கின்றனர்.
சிலநேரங்களில் 2-5 வருடங்கள் கூட காத்திருக்க வேண்டுமென்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஏனெனில் இந்த நேரத்தில் கருவுற்றால் மறுபடியும் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. இது எந்த ஒரு விஞ்ஞான முறையிலும் நிரூபிக்கவில்லை தான். எனினும் கருவுறாமல் இருப்பது நல்லது.
எதனால் கர்ப்பமாக முடியாத நிலை ஏற்படலாம்?
புற்றுநோய் ஒரு உயிர் கொல்லி நோய். இதனை சரிசெய்ய மேற்கொள்ளும் சிகிச்சையின் போது உடலில் நிறைய காயங்கள் ஏற்படும். இதனால் உடல் மிகவும் வலுவிழந்து காணப்படும். ஆனால் இந்த நோய் வந்து சரிசெய்த பின்னர், இரத்தப் பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இதய துடிப்பு போன்றவை சாதாரணமாக இருந்தால், நிச்சயம் கர்ப்பமாகலாம். தற்போது உடலில் எந்த நோயுமின்றி, சாதாரண நிலையில் இல்லாமல் இருக்கும் பெண்களாலேயே கர்ப்பமாவது என்பது பிரச்சனையாக உள்ளது. அவர்களுக்கே பிரச்சனை இருக்கும் போது, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சரியானவர்களுக்கும், இந்த நிலை ஏற்படும் வாய்ப்புள்ளது. எனினும் நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், நிச்சயம் உங்களாலும் கர்ப்பமாக முடியும்.
பிறக்கும் குழந்தை சாதாரணமாக இருக்குமா?
புற்றுநோய் இருந்து, சிகிச்சையின் மூலம் குணமாக்கியிருந்தால், மரபணுக்குறைபாடுள்ள குழந்தை பிறக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அது 2 முதல் 3 சதவீதம் தான். அதுவே பரம்பரை நோயான மார்பகப் புற்றுநோய் போன்றவை இருந்து சரியானால், அது நிச்சயம் குழந்தைக்கும் வரும்.
கர்ப்பமாவது என்பது ஒரு அழகான அனுபவம். இது ஒவ்வொரு பெண்ணிற்கும் கிடைக்க வேண்டிய ஒன்று. ஆகவே எப்போதும் குழந்தைப் பெறுவதைத் தள்ளிப் போடாமல், சிறந்த அந்த அனுபவத்தை பெற்று மகிழுங்கள்.



Click it and Unblock the Notifications











