Latest Updates
-
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்..
கைக்குழந்தை வயிற்று வலியால் அழுதால் என்ன செய்ய வேண்டும்?
சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.
பிறந்த குழந்தையை சமாளிப்பது என்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு நீங்கள் ரெம்ப பொறுமையாக இருக்க வேண்டும். அதிலும் சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.

இதற்கு நீங்கள் அவர்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இப்படி குழந்தைகளுக்கு எந்த மாதிரியான செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.

செரிமான சிக்கல்
குழந்தைகளுக்கு செரிமான சிக்கல் வந்து விட்டால் உடனே அழத் தொடங்கி விடுவார்கள். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அதன் ஜீரண மண்டலம் இன்னும் சரியாக வளர்ச்சி பெற்றிருக்காது. உணவை வயிற்றுக்கு அனுப்பும் உணவுக் குழாய் வால்வு இன்னும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கும். இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி, வாந்தி, எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

பொதுவான காரணங்கள்
* வைரல் அல்லது பாக்டீரியா தொற்று. பொதுவாக குழந்தைகள் எதாவது பொருளை வாயில் வைப்பதால், தூசிகளில் விளையாடி விட்டு கையை வாயில் வைப்பதால் நோய்த்தொற்றுகள் உண்டாகிறது.
* பிறந்த குழந்தைகள் ஆரம்ப காலத்தில் சாப்பிடும் போதோ அல்லது பால் குடிக்கும் போதோ காற்றை உறிஞ்சிக் கொள்ளும். இது குழந்தைகளுக்கு வயிற்றில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
* அதே மாதிரி குழந்தைகள் திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கும் போது அவர்கள் மலச்சிக்கலை அனுபவிக்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை
பால் போன்ற பொருட்களை உண்ணும் போது, அந்த உணவுப் பொருட்கள் சரிவர செரிமானமாகாவிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதன் அறிகுறிகளை கீழ்க்கண்டவாறு காணலாம்

அறிகுறிகள்:
* எதற்கெடுத்தாலும் குழந்தை அழத் தொடங்குவர்
* பாக்டீரியா தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
* வயிற்று போக்கு
* வாந்தி
* மலச்சிக்கல்
* வயிற்று வீக்கம்
மேற்கண்ட அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?
* அதீத காய்ச்சல்
* தீவிர வயிற்று போக்கு
* பசியின்மை
* எடை இழப்பு
* தொடர்ச்சியான விக்கல்கள்
* மூச்சு விட சிரமம்
* பச்சை கலரில் வாந்தி எடுத்தல்
* வாந்தி எடுக்கும் போது இரத்தம் வருதல்
* நீர்ச்சத்துயின்மை
* மலத்தில் இரத்தம் வருதல்
* அதிகப்படியான சோம்பல்
* மலம் கழிக்க முடியாமல் போதல்
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications











