Latest Updates
-
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்..
கைக்குழந்தை வயிற்று வலியால் அழுதால் என்ன செய்ய வேண்டும்?
சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.
பிறந்த குழந்தையை சமாளிப்பது என்பது லேசுபட்ட காரியமல்ல. அதற்கு நீங்கள் ரெம்ப பொறுமையாக இருக்க வேண்டும். அதிலும் சின்ன சின்ன உடல் உபாதைகள் வர ஆரம்பித்து விட்டால் குழந்தைகள் பயங்கரமாக அழ ஆரம்பித்து விடுவார்கள். பொதுவாக கைக்குழந்தைகள் அடிக்கடி வயிற்று வலி பிரச்சினையால் அவதிப்படுவது அதிகம்.

இதற்கு நீங்கள் அவர்களின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும். இப்படி குழந்தைகளுக்கு எந்த மாதிரியான செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை கீழ்க்கண்டவாறு நாம் காணலாம்.

செரிமான சிக்கல்
குழந்தைகளுக்கு செரிமான சிக்கல் வந்து விட்டால் உடனே அழத் தொடங்கி விடுவார்கள். மேலும் பிறந்த குழந்தைகளுக்கு அதன் ஜீரண மண்டலம் இன்னும் சரியாக வளர்ச்சி பெற்றிருக்காது. உணவை வயிற்றுக்கு அனுப்பும் உணவுக் குழாய் வால்வு இன்னும் வளர்ச்சியடைய வேண்டியிருக்கும். இதனால் தான் பிறந்த குழந்தைகளுக்கு அடிக்கடி வயிற்று வலி, வாந்தி, எதுக்களித்தல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

பொதுவான காரணங்கள்
* வைரல் அல்லது பாக்டீரியா தொற்று. பொதுவாக குழந்தைகள் எதாவது பொருளை வாயில் வைப்பதால், தூசிகளில் விளையாடி விட்டு கையை வாயில் வைப்பதால் நோய்த்தொற்றுகள் உண்டாகிறது.
* பிறந்த குழந்தைகள் ஆரம்ப காலத்தில் சாப்பிடும் போதோ அல்லது பால் குடிக்கும் போதோ காற்றை உறிஞ்சிக் கொள்ளும். இது குழந்தைகளுக்கு வயிற்றில் வாய்வுத் தொல்லையை ஏற்படுத்தும்.
* அதே மாதிரி குழந்தைகள் திட உணவுகளை உண்ண ஆரம்பிக்கும் போது அவர்கள் மலச்சிக்கலை அனுபவிக்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை
பால் போன்ற பொருட்களை உண்ணும் போது, அந்த உணவுப் பொருட்கள் சரிவர செரிமானமாகாவிட்டால், செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. அதன் அறிகுறிகளை கீழ்க்கண்டவாறு காணலாம்

அறிகுறிகள்:
* எதற்கெடுத்தாலும் குழந்தை அழத் தொடங்குவர்
* பாக்டீரியா தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
* வயிற்று போக்கு
* வாந்தி
* மலச்சிக்கல்
* வயிற்று வீக்கம்
மேற்கண்ட அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனே குழந்தைகள் நல மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும்?
* அதீத காய்ச்சல்
* தீவிர வயிற்று போக்கு
* பசியின்மை
* எடை இழப்பு
* தொடர்ச்சியான விக்கல்கள்
* மூச்சு விட சிரமம்
* பச்சை கலரில் வாந்தி எடுத்தல்
* வாந்தி எடுக்கும் போது இரத்தம் வருதல்
* நீர்ச்சத்துயின்மை
* மலத்தில் இரத்தம் வருதல்
* அதிகப்படியான சோம்பல்
* மலம் கழிக்க முடியாமல் போதல்
மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.



Click it and Unblock the Notifications