Latest Updates
-
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்.. -
ஐயங்கார் ஸ்டைல் அப்பளக் குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப மூளையில் கட்டி இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் டாக்டர்! -
இந்த 5 ராசி பெண்கள் காதலில் துரோகம் செய்பவர்களாக இருப்பார்களாம் - உங்க காதலி ராசி இதுல இருக்கா?
குழந்தைகள் எங்கு நன்கு தூங்கும் தெரியுமா?

ஏனெனில் குழந்தை கருவில் இருக்கும் போது தாயின் கருவரைக்குள் ஒரு அரவணைப்போடு இருந்திருக்கும். ஆனால் அந்த குழந்தை உலகைப் பார்த்ததும், அதற்கு ஏற்ற ஒரு நல்ல அரவணைப்பானது இல்லாமல் இருக்கும். ஆகவே குழந்தையானது எங்கு, எப்போது நன்கு தூங்கும் என்று குழந்தை நல மருத்துவர்கள் கூறுகின்றனர் என்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...
தாயானவள் குழந்தையுடன் நன்கு நெருங்கி படுத்தால், அந்த குழந்தை தாயுடன் நல்ல ஒரு பழக்கத்தைக் கொள்ளும். ஏனெனில் பிறந்த குழந்தைக்கு மிகவும் முக்கியமானது அரவணைப்பு ஆகும். அதிலும் தாயானவள் நெருங்கிப் படுத்தால், குழந்தை கருவில் இருப்பது போன்று உணரும்.
குழந்தையின் தேவையை எந்த நேரத்திலும் சரி செய்யுமாறு இருக்க வேண்டும். அதற்காக ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை குழந்தையை பார்த்தால் மட்டும் அதன் தேவையை உணர முடியாது. ஆகவே குழந்தை தாயின் பக்கத்தில் இருக்கும் போதே, அந்த குழந்தைக்கு தாளாட்டுப் பாடி பழக வேண்டும். ஏனெனில் குழந்தை தாய் பக்கத்தில் இல்லையென்றால் கூட சில சமயம் அழும். ஆகவே அவ்வாறு அழும் போது தாயானவள் தாளாட்டைப் பாடினால், குழந்தையும் தாய் பக்கத்தில் இருக்கிறாள் என்று அழுகையை நிறுத்தி தூங்கிவிடும்.
குழந்தையை தூங்கும் போது ஏதேனும் ஒடுக்கமான இடத்தில் தூங்க வைக்கலாம். அதுவும் குழந்தை கை மற்றும் கால்களை நீட்டுவதற்கு வசதியாக இருக்க வேண்டும். அதற்கு தொட்டில் தான் சிறந்தது. ஏனெனில் அதில் தான் குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். மேலும் குழந்தை தவள ஆரம்பித்துவிட்டால், உடனே தொட்டிலில் இருந்து கட்டிலில் போட வேண்டாம். பின் குழந்தைக்கு தான் பாதிப்பு.
வேண்டுமென்றால் தந்தையும் குழந்தையின் பக்கத்தில் தங்கள் கைகளின் இடுக்கங்களில் வைத்து தூங்க வைக்கலாம். அதனால் குழந்தை தந்தையிடமுங்ம நன்கு பழகும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் முக்கியமான ஒன்று, குழந்தை தூங்காமல் பக்கத்தில் இருக்கும் போது, பெற்றோர்கள் எந்த ஒரு சந்தோஷமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம்.
ஆகவே குழந்தை நன்கு தூங்கினால், பெற்றோர்கள் எந்த கவலையும் படாமல், சந்தோஷமாக இருப்பதோடு, குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். எனவே மேற்கூறியவாறு செய்தால் குழந்தை நன்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தூங்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



Click it and Unblock the Notifications