Latest Updates
-
இந்த தேதியில் பிறந்த பெண்கள் அவங்க கணவரை கோடீஸ்வரராக்கும் அதிர்ஷ்டத்துடன் பிறந்தவர்களாம் -
முட்டையை இந்த மாதிரி பட்டாணியுடன் சேர்த்து குருமா செஞ்சு பாருங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்!
குழந்தைகளது பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....

பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....
1. குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை ஊற்றி கொடுக்கும் முன், பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவி பின்னர் பாலை ஊற்றி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாட்டிலை சூடான தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் கொடுத்தால் பாட்டிலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். மேலும் பாட்டிலில் உள்ள மூடியை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அதுவே குழந்தையின் வாய்க்குள் செல்கிறது, அதன்மூலமே கிருமிகள் குழந்தையின் வாயில் செல்லும். ஆகவே அதனை நன்கு சூடான நீரில் கழுவிய பின்னர் கொடுக்க வேண்டும்.
2. எப்போது குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை கொடுக்கும் போதும், குழந்தைகளால் பால் முழுவதையும் குடிக்க முடியாது. ஏனெனில் அதன் வயிற்றானது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வளர்ச்சி அடையும். மேலும் குழந்தைகளால் எவ்வளவு பால் குடிக்க முடிகிறதோ, அவ்வளவு மட்டும் குடித்துவிடும். ஆகவே அந்த மீதிப் பாலை அப்படியே வைக்காமல், கொட்டிவிடவும். இல்லாவிட்டால் பாட்டிலில் பாக்டீரியா மற்றும் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும்.
3. பாட்டிலானது ஈரமாக இருந்தால் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தங்கிவிடும். ஆகவே முதலில் பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவியதும், குளிர்ந்த நீரிலும் சற்று கழுவ வேண்டும். பிறகு உடனடியாக ஒரு சுத்தமான துணியில் நன்கு துடைத்துவிட வேண்டும். அப்படி துடைக்காமல் கழுவி விட்டு, மூடி வைத்துவிட்டால் அந்த பாட்டிலில் தண்ணீர் அல்லது பால் நாற்றமானது அப்படியே இருக்கும்.
4. தினமும் பாட்டில் மூடியை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் சுடு தண்ணீரில் நன்கு பாட்டிலையும், பாட்டில் மூடியையும் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் பாட்டில் மூடியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேய்த்துக் கழுவலாம்.
ஆகவே குழந்தையின் பாட்டிலானது எப்போதும் சுத்தமாக, சரியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை குழந்தை பால் குடிக்கும் போது பாட்டிலை கீழே போட்டு விட்டால், சோம்பேறித்தனமாக இருக்காமல், பாட்டில் மூடியை மாற்றி கொடுங்கள்.



Click it and Unblock the Notifications