Latest Updates
-
Solar Eclipse 2026: ஆண்டின் கடைசி சூரிய கிரகணம்: 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
சுக்கிரன் சொந்த ராசிக்குள் நுழைவதால் வெற்றிகளையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை ஸ்பெஷல் பரங்கிக்காய் பாயாசம் ரெசிபி - செஞ்சு பாருங்க - செமையா இருக்கும் -
எப்பவும் ஒரே மாதிரி பாஸ்தா செய்யாம, இப்படி முட்டை பொடிமாஸ் பெப்பர் பாஸ்தா செய்யுங்க.. அள்ளும்.. -
Aadi Amavasai 2026: ஆடி அமாவாசை நாளில் மறந்தும் இந்த 7 விஷயங்களை செஞ்சுடாதீங்க.. -
இந்த 4 ராசி ஆண்கள் ரொம்ப கவர்ச்சியானவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் இறுதியில் இந்த 4 ராசிக்கு செல்வம் குவியப்போகுது! -
Aadi Amavasai 2026: தர்ப்பணம் என்றால் என்ன? ஆடி அமாவாசை அன்று ஏன் அவசியம் தர்ப்பணம் கொடுக்க வேண்டும் -
மூட்டு வலி நீங்க, இரத்தம் ஊற உதவும் முருங்கைக்கீரை கொள்ளு சூப் - எப்படி செய்யணும் தெரியுமா? -
சனிபெயர்ச்சியால் 2027-ல் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
குழந்தைகளது பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....

பால்பாட்டிலை சுத்தமாக வைக்க சில டிப்ஸ்....
1. குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை ஊற்றி கொடுக்கும் முன், பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவி பின்னர் பாலை ஊற்றி கொடுக்க வேண்டும். இல்லையென்றால் பாட்டிலை சூடான தண்ணீரில் சிறிது நேரம் ஊற வைத்து, பின்னர் கொடுத்தால் பாட்டிலில் உள்ள கிருமிகள் அழிந்துவிடும். மேலும் பாட்டிலில் உள்ள மூடியை நன்கு கழுவ வேண்டும். ஏனெனில் அதுவே குழந்தையின் வாய்க்குள் செல்கிறது, அதன்மூலமே கிருமிகள் குழந்தையின் வாயில் செல்லும். ஆகவே அதனை நன்கு சூடான நீரில் கழுவிய பின்னர் கொடுக்க வேண்டும்.
2. எப்போது குழந்தைகளுக்கு பாட்டிலில் பாலை கொடுக்கும் போதும், குழந்தைகளால் பால் முழுவதையும் குடிக்க முடியாது. ஏனெனில் அதன் வயிற்றானது கொஞ்சம் கொஞ்சமாகத் தான் வளர்ச்சி அடையும். மேலும் குழந்தைகளால் எவ்வளவு பால் குடிக்க முடிகிறதோ, அவ்வளவு மட்டும் குடித்துவிடும். ஆகவே அந்த மீதிப் பாலை அப்படியே வைக்காமல், கொட்டிவிடவும். இல்லாவிட்டால் பாட்டிலில் பாக்டீரியா மற்றும் நாற்றம் அடிக்க ஆரம்பித்துவிடும்.
3. பாட்டிலானது ஈரமாக இருந்தால் பாக்டீரியா மற்றும் கிருமிகள் தங்கிவிடும். ஆகவே முதலில் பாட்டிலை சுடு தண்ணீரில் கழுவியதும், குளிர்ந்த நீரிலும் சற்று கழுவ வேண்டும். பிறகு உடனடியாக ஒரு சுத்தமான துணியில் நன்கு துடைத்துவிட வேண்டும். அப்படி துடைக்காமல் கழுவி விட்டு, மூடி வைத்துவிட்டால் அந்த பாட்டிலில் தண்ணீர் அல்லது பால் நாற்றமானது அப்படியே இருக்கும்.
4. தினமும் பாட்டில் மூடியை நன்கு தேய்த்துக் கழுவ வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால் சுடு தண்ணீரில் நன்கு பாட்டிலையும், பாட்டில் மூடியையும் கழுவ வேண்டும். வேண்டுமென்றால் பாட்டில் மூடியை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தேய்த்துக் கழுவலாம்.
ஆகவே குழந்தையின் பாட்டிலானது எப்போதும் சுத்தமாக, சரியான இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். ஒரு வேலை குழந்தை பால் குடிக்கும் போது பாட்டிலை கீழே போட்டு விட்டால், சோம்பேறித்தனமாக இருக்காமல், பாட்டில் மூடியை மாற்றி கொடுங்கள்.



Click it and Unblock the Notifications