Latest Updates
-
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...!
பெற்றோர்களே! 'இந்த' பழக்கம் மட்டும் உங்ககிட்ட இருந்தா? உங்க குழந்தை வாழ்க்கையை நீங்களே பாழாக்கிடுவீங்களாம்!
சந்தேகத்திற்கு இடமின்றி, குழந்தை வளர்ப்பு என்பது எளிதான வேலை அல்ல. இது பல சிக்கல்களுடன் கடமைகளுடன் பொறுப்புகளுடன் வருகிறது. அந்த வகையில், ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை நல்ல ஆரோக்கியமான குழந்தையாக வளர்க்கத்தான் விரும்புகிறார்கள்.
குழந்தையின் ஒவ்வொரு வளர்ச்சியிலும் பெற்றோரின் பங்கு கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு குழந்தையை வளர்க்கும் போது, குழந்தையின் அறிவாற்றல் மற்றும் உணர்ச்சி குழந்தையின் வளர்ச்சியை எவ்வாறு பாதிக்கலாம் என்பதை ஒவ்வொரு பெற்றோரும் அறிந்திருக்க வேண்டும்.

சில நேரங்களில், பெற்றோர்கள் இந்த உண்மைகளைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். மேலும் அவர்கள் கவனக்குறைவாக தங்கள் குழந்தையை எதிர்மறையாக பாதிக்கும் பெற்றோரின் பண்புகளுடன் வழிநடத்த தேர்வு செய்கிறார்கள். பெற்றோர்கள் நண்பராக இருந்து எல்லாவற்றையும் சொல்லி கொடுக்க வேண்டும் என்று குழந்தைகள் எதிர்பாக்கிறார்கள்.
இதை பெரும்பலான பெற்றோர்கள் செய்ய தவறி விடுவதால், அது பெற்றோர்- குழந்தை உறவில் சிக்கல்களை உருவாக்குகிறது. எனவே, பெற்றோர்களாகிய நீங்கள் ஓர் மோசமான பெற்றோருக்குரிய பண்புகளை பின்பற்றமால் இருக்க வேண்டும். இந்த பண்பு குழந்தையின் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
புண்படுத்துவது மற்றும் உணர்ச்சி ரீதியாக அல்லது உடல் ரீதியாக துன்புறுத்துவது குழந்தையின் வளர்ச்சிக்கு பயனளிக்காது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் கூறுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
குழந்தையை ஒப்பிடுதல்
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கிறது. எல்லா குழந்தைகளும் இங்கே ஒரே மாதிரியானவர்கள் இல்லை. அதனால், எந்த குழந்தையையும் யாரோடும் ஒப்பிடாதீர்கள். ஒப்பீடு செய்து கற்பிப்பது என்பது மோசமான வழி. இதை ஒரு குழந்தையிடம் செய்வது இன்னும் தீங்கு விளைவிக்கும்.
இது அவர்களின் மனநிலை மற்றும் எதிர்கால வாழ்க்கையை பாதிக்கலாம். அதனால், விஷயங்களை பெற்றோர்கள் ஒருபோதும் ஒப்பிட்டுக் கூறக்கூடாது. உங்கள் குழந்தையை மற்றவர்களுடன் ஒப்பிடுவது, அது ஒரு உடன்பிறந்தவராகவோ, நண்பராகவோ அல்லது உறவினராகவோ இருந்தாலும், அவர்கள் மீது வெறுப்பு உணர்வை வரவழைக்கும். மேலும், இது மனக்கசப்பு உணர்வுகளை வளர்க்கலாம். உங்கள் குழந்தையின் தனிப்பட்ட குணங்களை ஆதரியுங்கள் மற்றும் அவர்களின் தனித்துவத்தை ஆதரிக்க வேண்டும்.
அவர்களைக் குறை கூறாதீர்கள்
உங்கள் பிள்ளை வேண்டுமென்றே செய்யாத ஒரு விஷயத்திற்காகக் குற்றம் சாட்டுவது அவர்கள் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். "நீங்கள் மிகவும் விகாரமானவர் அல்லது தவறானவர்" அல்லது "உங்களுக்கு எதுவும் சரியாக வராது" போன்ற விஷயங்களைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகள் செய்தது தவறு என்று சொல்ல ஒரு சரியான வழி இருக்கிறது.
எனவே உங்கள் பிள்ளையை தவறானவர் என்று முத்திரை குத்துவதை நிறுத்துங்கள் மற்றும் அவர்களின் தவறுகளை முன்னிலைப்படுத்தாதீர்கள். இது அவர்களின் சுயமரியாதையை பாதிக்கும். அதற்குப் பதிலாக, அவர்களின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்ள அவர்களை ஊக்குவிக்கவும். மேலும் தவறுகளைச் செய்வது வளரும் மற்றும் கற்றலின் ஒரு பகுதியாகும் என்பதை வலியுறுத்தவும்.
அவர்களை கட்டுப்படுத்துவதை நிறுத்துங்கள்
கட்டுப்படுத்துவதும் கையாளுவதும் உங்கள் குழந்தையை சிறந்த நபராக மாற்றாது. பெற்றோர்களாகிய நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும் அல்லது செய்ய வேண்டாம் என்று கேட்கக்கூடாது. மாறாக, உங்கள் கவலைகளை அவர்களுக்குப் புரியவைக்கும் வகையில் பணிவுடன் பேசுங்கள்.
அவர்களின் தோற்றத்தைப் பற்றி ஒருபோதும் எதிர்மறையாக கருத்து தெரிவிக்க வேண்டாம். இது அவர்களின் சுயமரியாதையைக் குறைத்து, அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களின் தோற்றத்தைப் பற்றி மோசமாக உணர வைக்கும். மேலும், இது அவர்கள் வயதாகும்போதும் அவர்களின் மனதை பாதிக்கும். எனவே உங்கள் குழந்தையை எதிர்மறையாக பாதிக்கும் இதுபோன்ற விஷயங்களைச் சொல்வதைத் தவிர்க்க வேண்டும்.
அவர்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்
"உங்களால் அதைச் செய்யவே முடியாது" அல்லது "உங்களால் எதையும் மாற்ற முடியாது" போன்ற விஷயங்களைச் சொல்லி உங்கள் குழந்தையின் ஊக்கத்தை குறைப்பது தவறானது. இந்த கடுமையான வார்த்தைகள் அவர்களின் படைப்பாற்றல் மற்றும் திறன்களைத் தடுக்கும்.
அவர்கள் எப்போதும் தங்கள் வாழ்க்கையில் ஓர் விஷயங்களை செய்வதற்கு முன்பு அல்லது கூடுதல் யோசனைகளை வழங்குவதற்கு முன்பு எதிர்மறையாக சிந்திப்பார்கள். ஆதலால், உங்கள் குழந்தைகளை எப்போதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். அவர்களின் ஆசைகளுக்கும் திறன்களுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்கள் ஏமாற்றத்தை எப்போதும் காட்டாதீர்கள்
"உன் மீது வைத்த நம்பிக்கையை இழக்கிறேன்", "உன்னால் ஏமாற்றம் அடைகிறேன்" என்று ஒருபோதும் சொல்லாதீர்கள். உங்கள் பிள்ளையின் செயல்களுக்கு எப்போதும் ஏமாற்றத்தை வெளிப்படுத்துவது அவர்களின் கனவுகளை சிதைக்கலாம். மாறாக, அவர்களின் நடத்தை மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி விவாதிக்க வேனுடம். அவர்களின் செயல்கள், அவர்கள் தனிநபர்களாக அல்ல, பிரச்சினை என்ன என்பதை பற்றி கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.
இறுதிக்குறிப்பு
நச்சு பெற்றோருக்குரிய நடத்தைகள் குழந்தையின் சுயமரியாதை, உணர்ச்சி நல்வாழ்வு மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பெற்றோராக, அவர்களைப் புரிந்துகொண்டு, தேவைப்படும்போது அவர்களுக்கு உதவுவது உங்கள் கடமையாக இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications












