Latest Updates
-
இன்றைய ராசிபலன் 21 மார்ச் 2026: இன்று இந்த 5 ராசிக்காரங்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
குரு-சந்திரன் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் தேடிவரப்போகுது...! -
தமிழ்நாட்டின் ஸ்டார் அரசியல்வாதிகள் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட போகிறார்கள் தெரியுமா? -
தேர்தல் பிரச்சாரங்களின் போது ஏன் இளநீர் அரசியல் தலைவர்களின் விருப்பமான பானமாக உள்ளது தெரியுமா? -
கோடை வெயிலால் முகம் டல்லா, கருப்பா இருக்கா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
பாய் வீட்டு சிக்கன் பிரியாணி ரெசிபி... இந்த ரம்ஜானுக்கு இப்படி பிரியாணி செஞ்சு பாருங்க... தாறுமாறா இருக்கும்! -
வெண்டைக்காய் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி மொறுமொறுன்னு சிப்ஸ் செஞ்சு சாப்பிடுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க புரியாத புதிராக இருப்பார்களாம்... இவங்கள யாராலும் புரிஞ்சிக்க முடியாதாம்...! -
மீன ராசியில் அரிய சனி-செவ்வாய் சேர்க்கை: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. -
4 முட்டையும், ஒரு உருளைக்கிழங்கும் இருந்தா இப்படி முட்டை அவியலை செய்யுங்க...டேஸ்ட் வேற லெவலில் இருக்கும்...!
தாத்தா ரஜினியை விட வளர்ந்த பேரன்.. பாட்டியை எப்படி கட்டிப் பிடிச்சிருக்காரு பாருங்க.. சோ க்யூட்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்னும் 9 நாளில் அவரது 75 வது பிறந்த நாளை டிசம்பர் 12ஆம் தேதி கொண்டாட உள்ளார். அவரது ரசிகர்கள் அவரது இந்த பிறந்தநாளை வெகு சிறப்பாக கொண்டாட தயாராகி வருகிறார்கள். தற்போது அவர் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது மொத்த குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில் அவரது பேரன்கள், அவருக்கு மேல் வளர்ந்து நிற்கிறார்கள். அது இப்போது ரஜினி ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்திற்கு சமீபத்தில் வாழ்நாள் சாதனையாளர் விருது 56வது கோவா திரைப்பட திருவிழாவின் சார்பில் வழங்கப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா உலகில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. 50 ஆண்டுகளாக அவர் திரை உலகில் தொடர்ந்து செயல்பட்டதைப் பாராட்டி இந்த வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வாங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மொத்த குடும்பத்துடனும் கோவாவிற்கு சென்றிருந்தார்.

அதாவது, அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் என அவரது மகள்கள், சௌந்தர்யாவின் கணவர் மற்றும் மகன், அதேபோல் ஐஸ்வர்யாவின் இரண்டு மகன்களான லிங்கா மற்றும் யாத்ரா ஆகியோருடன் சென்று விருதை வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் ஏற்கனவே வெளியானது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவான லால் சலாம் படம் கோவா திரைப்பட திருவிழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்தில் ரஜினிகாந்த் எக்ஸ்டெண்டெட் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சூப்பர் ஸ்டார் விருந்து வாங்கியதும், லால் சலாம் படம் திரையிடப்பட்டதும், ஒரே நாளில் நடைபெற்றதால் மொத்த குடும்பத்தினரும் திரைப்படத் திருவிழாவிற்குச் சென்றிருந்தனர்.
சூப்பர் ஸ்டார் விருது வாங்கச் சென்ற போது கோவாவில் தனது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதைப் பார்த்த பலரும் சூப்பர் ஸ்டாரின் பேரன்கள் அவரது தோளுக்கு மேல் வளர்ந்து நிற்கிறார்கள். இதைப் பார்த்த பலரும் பேரன்கள் சூப்பர் ஸ்டாரை விட வளர்ந்து நிற்கிறார்களே என்றும், அதிலும் சௌந்தர்யாவின் இளைய மகன் லிங்கா, லதாவை கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்கிறார். மொத்தமாக இந்த குடும்ப புகைப்படம் பார்ப்பதற்கே அழகாக இருக்கிறது. ரசிகர்களும் ரஜினி குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Credit: Filmibeat



Click it and Unblock the Notifications












