Latest Updates
-
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க!
இந்த ஒரு கிரகத்தில் மட்டும் எந்த நாட்டினாலும் நுழைய முடியவில்லையாம் - அது ஏன் தெரியுமா?
மனிதன் அறியாத பல விஷயங்களை கண்டுபிடித்து, அதைப் பற்றி ஆராய்ந்து காரணத்தை அறியும் காலகட்டத்தில் தற்போது இருக்கிறோம். அதுவும் சூரிய மண்டலத்தில் பூமியில் மட்டும் மனிதனால் உயிர் வாழத் தேவையான அனைத்து வளங்களும் உள்ளன. ஆனால் சூரிய மண்டலத்தில் உள்ள மற்ற கிரகங்களைப் பற்றிய ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு தான் நமது இஸ்ரோ ஆராய்ச்சியாளர்கள் சந்திரனில் இதுவரை யாராலும் தரையிறக்க முடியாத பகுதியில் வெற்றிகரமாக ஒரு விண்கலத்தை தரையிறக்கி ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார்கள். இது தவிர சூரியனுக்கும் நமது விஞ்ஞானிகள் விண்கலத்தை அனுப்பியுள்ளனர்.

ஆனால் இதுவரை எந்த நாடும் விண்கலத்தை அனுப்ப முடியாத அளவில் ஒரு கிரகம் சூரிய மண்டலத்தில் உள்ளது என்பது தெரியுமா? அது தான் சனி. சரி, எதனால் சனி கிரகத்தில் மட்டும் யாராலும் தரையிறங்க முடியவில்லை என்று தெரியுமா? இதுக்குறித்து இப்போது விரிவாக காண்போம்.
சனி கிரகம்
நாம் எவ்வளவு ஆண்டுகள் பிரபஞ்சத்தில் வாழ்ந்து, பலவிதமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், இன்னமும் மிகப்பெரிய புதிர் நிறைந்த ஒன்றாகவே உள்ளது. என்ன தான் சூரிய மண்டலத்தில் பூமிக்கு அருகில் இருக்கும் பல கிரகங்களுக்கும் விண்கலத்தை அனுப்பி, அங்கு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தாலும், சூரிய மண்டலத்தில் 6 ஆவது கிரகமாக இருக்கும் சனியில் மட்டும் யாராலும் தரையிறங்க முடியவில்லை.
கிரகங்களில் செவ்வாய் ஒரு மிகப்பெரிய சிவப்பு நிற கிரகம். ஆனால் அப்படிப்பட்ட செவ்வாயில் நுழைய முடிந்த நம்மால், சனி கிரகத்தில் மட்டும் நுழைய முடியவில்லை. அது எதனால் என்று தெரியுமா?
காரணங்கள்
சனி கிரகமானது முற்றிலும் ஹீலியம் மற்றும் ஹைட்ரஜன் போன்ற வாயுக்களால் ஆனது. மேலும் இது அம்மோனியா, நீர், மீத்தேன் போன்றவற்றின் கலவையும் கூட. இந்த கிரகத்திற்குள் நாம் நுழைந்தால், அங்குள்ள வாயுக்கள் அழுத்தம் காரணமாக திரவமாகின்றன. மற்றொரு காரணம் அதன் அழுத்தம் மற்றும் வெப்பநிலையும் ஆகும்.
பொதுவாக பூமியின் வளிமண்டல அழுத்தம் 1 பார் என கணக்கிடப்படுகிறது. ஆனால் சனியின் வளிமண்டல அழுத்தம் 1 மில்லியன் பார். எனவே இங்கு மனிதன் சென்றால், கொதித்துப் போவான் என அறிக்கைகள் கூறுகின்றன.
சனி கிரகத்தின் ஆரம் 58,232 கிமீ ஆகும். இது பூமியை விட 9 மடங்கு அகலம் கொண்டது. இந்த கிரகத்தில் ஒரு நாளானது 10.7 மணிநேரம் மட்டுமே நீடிக்கும். இது சூரிய குடும்பத்தில் உள்ள அனைத்து கிரகங்களிலும் இரண்டாவது குறுகிய நாளைக் கொண்ட கிரகமாகும். சனி சூரியனை ஒருமுறை சுற்றி வர 29.4 பூமி ஆண்டுகள் ஆகும்.
மேலும் சூரிய குடும்பத்திலேயே மற்ற கிரகங்களை விட சனி தான் அதிக நிலவுகளை கொண்டுள்ளது. முக்கியமாக சனி கிரகத்தின் தனித்துவமான விஷம், அதன் வளையங்கள் தான். இந்த வளையங்கள் வால்மீன்கள், சிறு கோள்கள் மற்றும் சிதைந்த நிலவுகளால் ஆனதாக கூறுப்படுகிறது.



Click it and Unblock the Notifications











