1972 வரை இந்தியாவின் தேசிய விலங்காக இருந்தது வேற மிருகமாம்... இந்த மாற்றத்துக்கான காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவின் தேசிய விலங்கு எதுவென்று கேட்டால் நாம் அனைவரும் கண்ணை மூடிக்கொண்டு சொல்வோம் அது புலி என்று. காட்டின் ராஜா என்று பொதுவாக அழைக்கப்படுவது சிங்கம்தான். அதனால்தான் இந்தியாவின் தேசிய சின்னத்தில் சிங்கம் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி வீரத்தின் அடையாளமாகவும், கம்பீரத்தின் சின்னமாகவும் எப்போதும் மதிக்கப்படுவது சிங்கம்தான்.

சிங்கம் முகலாயர்களுடன், ஆணிலேயர்களுடனும் தொடர்புடையதாகவும் இருந்தது. இத்தனை பெருமைகள் இருந்தாலும் இந்தியாவின் தேசிய விலங்காக சிங்கம் இல்லாமல் புலி ஏன் உள்ளது என்று எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? அதற்கு பின்னால் பல காரணம் உள்ளது. அவை என்னவென்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Why Tiger Is National Animal Of India Instead of Lion in Tamil

முன்னாள் தேசிய விலங்கு

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, சாரநாத்தில் உள்ள அசோகத் தூண் தேசத்தின் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது, பின்னர் சிங்கம் இந்தியாவின் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது. 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த சிங்கத்திற்குப் பதிலாக 1972 ஆம் ஆண்டில் புலி இந்தியாவின் தேசிய விலங்காக மாறியது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சிங்கத்தை விட புலிகள் புத்திக்கூர்மை வாய்ந்தவை என்று அறிவித்தது இதற்கு காரணமாகி இருக்கலாம்.

புலி ஏன் தேசிய விலங்காக மாற்றப்பட்டது?

சிங்கம் குஜராத்தில் உள்ள கிர் காடுகளில் மட்டுமே உள்ளது, ஆனால் புலி இந்தியா முழுவதும் 16 மாநிலங்களில் சுற்றித் திரிகிறது. மற்ற நாடுகளில் சிங்கங்கள் காட்டின் ராஜாவாக இருந்தாலும் இந்தியாவைப் பொறுத்தவரை புலி கருணை, சுறுசுறுப்பு, வலிமை மற்றும் மகத்தான சக்தி கொண்ட காட்டின் உண்மையான ராஜாவாக பார்க்கப்படுகிறது.

புலிகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், உலக அளவில் இந்திய புலிகள் முக்கியத்துவம் பெற்றுள்ளது. உலகப் புலிகளின் எண்ணிக்கையில் பாதிக்கு மேல் இந்தியா உள்ளது. எனவே அவற்றை பாதுகாக்க வேண்டிய தேவை உள்ளது, இதனால் புலி இந்தியாவின் தேசிய விலங்காக 1972 இல் அறிவிக்கப்பட்டது .புலிகளைக் காப்பாற்ற புலிகள் திட்டம் 1973 இல் தொடங்கப்பட்டது. அதன் பின்னர் புலிகளின் எண்ணிக்கை 268ல் இருந்து 2023 ஆக உயர்ந்துள்ளது.

இந்து கலாச்சாரத்தில் புலியின் முக்கியத்துவம்

சிந்து சமவெளி நாகரிகத்திலிருந்தே புலி முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஒரு புலி வரம்பற்ற சக்தியைக் குறிக்கிறது. துர்கா தேவி புலியின் மீது சவாரி செய்வது, நல்லொழுக்கத்தைப் பாதுகாக்கவும் தீமையை அழிக்கவும் அவருக்கு வரம்பற்ற ஆற்றல் உள்ளது என்பதைக் குறிக்கிறது. சிவபெருமான் சில சமயங்களில் தான் இயற்கை உலகத்தின் எல்லைக்கு அப்பாற்பட்டவர் என்பதைக் குறிக்க புலித்தோலை அணிந்திருப்பார்.

புலிகள் ஏன் ஆபத்தில் உள்ளன?

இந்தியாவில் புலியின் அழிவுக்கு இரண்டு முக்கிய காரணங்கள் உள்ளன. ஒன்று வாழ்விட இழப்பு மற்றும் மனிதர்களும் வனவிலங்குகளும் நெருக்கமாக வாழ நிர்பந்திக்கப்படும் போது ஏற்படும் மோதல். உள்ளூர் கிராமவாசிகளுக்கு உயிர்வாழ்வதற்கு மேய்ச்சல் மற்றும் விறகுகள் தேவைப்படுகின்றன, அதே நேரத்தில் புலிக்கு அதன் உயிர்வாழ்வதற்கு பரந்த மக்கள் வசிக்காத பகுதிகள் தேவைப்படுகின்றன. இரண்டாவதாக, சீனா போன்ற நாடுகளில் புலிகளின் தோல்கள் மற்றும் உடல் உறுப்புகள் பெரும் தொகையைப் பெறுகின்றனக்கு விற்கப்படுகின்றன, ஏனெனில் அவை நாட்டு மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.

புலி வேட்டை வீரத்தின் அடையாளமாக இருந்தது

இந்தியாவின் மகாராஜாக்கள் வேட்டையாடுதலை பொழுதுபோக்காக வைத்திருந்தனர், குறிப்பாக புலிகள் மற்றும் சிங்கங்கள் இளவரசர் குடும்பங்களில் வயதுக்கு வருவதன் ஒரு பகுதியாக நினைக்கப்பட்டது. ஜெய்ப்பூரின் காயத்ரி தேவி மகாராணி கூட புலியைக் கொன்றதாகக் கூறப்படுகிறது. அதேபோல இந்தியாவின் ஏழாவது பிரதமரான அரச குடும்பத்தை சேர்ந்த வி.பி.சிங் அவரது இளம் வயதில் புலியைக் வேட்டையாடியதாக கூறப்படுகிறது.

Story first published: Wednesday, March 27, 2024, 16:20 [IST]
Desktop Bottom Promotion