Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
நியூட்டன் உலகம் அழியும் வருடத்தை முன்கூட்டியே கணித்துவிட்டார்..இன்னும் எத்தனை வருஷம் மிச்சம் இருக்கு தெரியுமா?
புவி ஈர்ப்பு விசையின் தந்தை என்று அழைக்கப்படும் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர் ஐசக் நியூட்டன். இன்றைய நவீன உலகத்தின் பல தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தொடக்கப்புள்ளியாக இருந்த விஞ்ஞானிகளில் ஐசக் நியூட்டன் மிகவும் முக்கியமான ஒருவராவார். சொல்லப்போனால் நாம் படிக்கும் இயற்பியல் இவ்வளவு கடினமாக இருப்பதற்கும் அவர் ஒரு காரணமென்றே சொல்லலாம்.
ஐசக் நியூட்டனின் பல கண்டுபிடிப்புகள் ஆரம்பத்தில் புறக்கணிக்கப்பட்டாலும் பின்னாளில் அது அறிவியல் துறையில் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. உலோகங்களை தங்கமாக மாற்ற முடியும் என்ற இடைக்கால நம்பிக்கையான ரசவாதத்தின் படிப்பிற்காக தனது ஓய்வு நேரத்தை நிறைய அர்ப்பணித்ததோடு, நியூட்டனுக்கு அமானுஷ்யம் மற்றும் பைபிள் அபோகாலிப்ஸில் அதிக ஆர்வம் இருந்தது.

ஒரு சில தனிப்பட்ட யூகங்களின் அடிப்படையில், நியூட்டன் பைபிளைப் பற்றிய புராட்டஸ்டன்ட் புரிதல் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் உலகின் முடிவைக் கணிக்க முயன்றார். இதுபற்றிய ஒரு முயற்சியில், கணிதக் கணக்கீடுகளுக்கு அடுத்ததாக ஒரு கடிதச் சீட்டில் அபோகாலிப்ஸ் அல்லாத உலகின் அழிவு பற்றி அவர் குறிப்பிட்டார், அதில் நியூட்டன் வெளிப்படையாக உலக அழிவின் ஆண்டாக 2060 ஆம் ஆண்டைக் குறிப்பிட்டார்.
நியூட்டன் பைபிளில் உள்ள அபோகாலிப்டிக் தரிசனங்களை நம்பினார், அதில் உலகின் இறுதி நாட்களில் "கோக் மற்றும் மாகோக்" இடையே Armageddon போர் நடக்கும். "ஆட்டின் சிறிய கொம்பின் எழுச்சி(rise of the little horn of the He Goat)" பற்றி சிந்தித்து அதனை எழுதியது மட்டுமின்றி அதனை அலட்சியமாக மற்றவர்களின் கைகளில் கிடைக்கும்படி விட்டுள்ளார், ஆனால் 2060 இல் உலகின் முடிவு ஏற்படும் என்று அவர் கணிக்கவில்லை, ஒரு மிகப்பெரிய சகாப்தம் முடிவடையும் என்றே அவர் கணித்துள்ளார்.
"இந்த காலகட்டத்தில் கிறிஸ்து திரும்பி வந்து ஒரு உலகளாவிய சமாதான இராஜ்ஜியத்தை நிறுவுவார் என்று நியூட்டன் உறுதியாக நம்பினார்" என்று கூறப்படுகிறது. "'பாபிலோன்' (ஊழல் நிறைந்த திரித்துவ தேவாலயம்) வீழ்ச்சியடையும் மற்றும் உண்மையான சுவிசேஷம் வெளிப்படையாகப் பிரசங்கிக்கப்படும்." என்று அவர் நம்பினார்.

இந்த தீர்க்கதரிசனத்தின் படி, நியூட்டன் இந்த ராஜ்ஜியம் அமைதி மற்றும் செழிப்புக்கான ஒரு காலத்தை கொண்டு வரும் என்று நம்பினார், மக்கள் 'தங்கள் வாள்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை கத்தரித்து கொக்கிகளாகவும் அடிப்பார்கள்' மற்றும் 'நாடுகள் எதிராக வாள் தூக்காததால், இனி அவர்கள் போரைக் கற்க மாட்டார்கள்' என்று அவர் விளக்கினார்.
நியூட்டன், தனக்குத்தானே இப்படி ஒரு கணிப்பு செய்திருந்தாலும், பேரழிவு நடக்காதபோது ஏற்பட்ட மத தீர்க்கதரிசனங்களுக்கு சேதம் ஏற்படுத்தியதால், உலகின் முடிவைக் கணிக்கும் நடைமுறையை அவர் விரும்பவில்லை.
2060 ஆம் ஆண்டு வரை 'போர்களும் பேரழிவுகளும்' இருக்கும் என்று நியூட்டன் எச்சரித்தாலும், நியூட்டன், 2060 A.D ஒரு புதிய தொடக்கமாக இருக்கும். இது முதுமையின் முடிவாகவும், ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் இருக்கும் என்று கணித்துள்ளார்.
அவர் தனது கணிப்பில் கூறியுள்ளபடி "இறுதி காலம் எப்போது வரும் என்பதை வலியுறுத்துவதற்காக அல்ல, மாறாக, இறுதிக்காலத்தை அடிக்கடி கணித்து, புனிதமான தீர்க்கதரிசனங்களை அடிக்கடி இழிவுபடுத்தும் வினோதமான மனிதர்களின் மோசமான ஊகங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications