Latest Updates
-
ஜூன் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமழை கொட்டப்போகுது! -
முருங்கைக்கீரை கடையலும், வாழைக்காய் வறுவலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
எகிறும் முட்டை விலை.. இந்த முட்டைக்கு இணையான புரோட்டீன் நிறைந்த சைவ உணவுகள் இதோ! -
குரு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
தள்ளுவண்டி கடை புதினா கொத்தமல்லி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 18 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு ஆரோக்கியம் மோசமாகப் போகுதாம் - ஜாக்கிரதை -
ஜூன் 22-ல் புதன் கடக ராசிக்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெற்று ஜெயிக்கப்போகும் 3 ராசிகள் -
கோவக்காய் வாங்குனா இந்த ஆந்திரா ஸ்டைல் சட்னி செய்யுங்க - இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
100 ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் விமான நிலையம் எது தெரியுமா? -
செவ்வாய் ரிஷப ராசிக்கு செல்வதால் அதிர்ஷ்டத்தால் ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 4 ராசிகள்
அம்பானி வீட்டு மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் யார் தெரியுமா?
இந்தியாவின் முன்னணி தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட்டை திருமணம் செய்யவுள்ளார். இவர் ஆங்கர் ஹெல்த்கேர் தலைமை செயல் அதிகாரி விரேன் மெர்ச்சன்ட் மற்றும் ஷைலா மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் அவார்.
ராதிகா மெர்ச்சன்ட் குஜராத் மாநிலம் கட்ச் நகரை பூர்வீகமாக கொண்டவர். பிறந்து வளர்ந்தது எல்லாம் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் தான். இந்த நகரில்தான் பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். மேற்படிப்பிற்காக நியூயார்க் சென்றார். நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவருக்கு அஞ்சலி மெர்ச்சன்ட் என்ற சகோதரியும் உள்ளார்.

தனது பட்டப்படிப்பை முடித்த பிறகு ராதிகா ஹாலிடே ஹோம் டெவலப்பர் நிறுவனமான இஸ்ப்ரவா குழுவிலில் (Isprava Groupல்) 2017ல் சேர்ந்தார். ராதிகா தற்போது என்கோர் ஹெல்த்கேர் வாரியத்தில் இயக்குநராக பணியாற்றுகிறார். மேலும் தனது குடும்பத்தின் தொழில் தொடர்பான விஷயங்களிலும் பங்களிப்பை செலுத்தி வருகிறார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் இணைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
பரத நாட்டியத்தின் மீது தீராத ஆர்வம் கொண்ட ராதிகா கடந்த 8 ஆண்டுகளாக குரு பாவனா என்பவரிடம் பயிற்சி எடுத்தார். நடன பயிற்சி முடிந்தவுடன் ராதிகாவின் அரங்கேற்றம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் வெகு விமர்சையாக நடைப்பெற்றது.
ராதிகாவின் அரங்கேற்றமானது மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் உள்ள ஜியோ வேல்டு சென்டரில் நடைப்பெற்றது. ராதிகாவின் பெற்றோர், முகேஷ் அம்பானி அவரது மனைவி நீத்தா அம்பானி ஆகியோர் சேர்ந்து இதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
சமூக மாற்றத்திற்கான பணிகள் மீது ஆர்வம் கொண்டவர். தொழில் துறையில் பல்வேறு சாதனைகள் படைக்க வேண்டும் என்ற விருப்பம் உடையவர். உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்வதில் தீவிரம் காட்டுபவர். இவர் மும்பையில் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். ராதிகா மெர்ச்சன்ட்டிற்கு சொந்தமாக விலை உயர்ந்த கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் பரதநாட்டியம் மட்டுமின்றி, மலையேற்றம், நீச்சல் போன்றவற்றிலும் ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் முகேஷ் அம்பானியுடன் ராதிகா மெர்சண்ட் ஆன்மீக சுற்றுலா சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நேற்று அம்பானியின் 2வது மகன் ஆனந்த் அம்பானி தனது குழந்தைப் பருவ காதலியான ராதிகா மெமெர்ச்சன்ட்- ஐ திருமணம் செய்து கொண்டார்.. ஆனந்த் அம்பானியை திருமணம் செய்ததினால் மிகவும் பிரபலமான மற்றும் பொது கொண்டாட்டத்தின் நட்சத்திரமாக ராதிகா இருக்கிறார்..
அம்பானி குடும்பத்திற்கு நடந்து முடிந்த திருமணங்கள்..
டிசம்பர் 2018 இல், ஆனந்தின் சகோதரி இஷா கோடீஸ்வரரான அஜய் பிரமலின் மகன் ஆனந்த் பிரமாலை மணந்தார், மேலும் அவர்களது திருமணத்தில் பாப் ஐகான் பியோன்ஸின் நிகழ்ச்சி இடம்பெற்றது. ஒரு வருடம் கழித்து, அனந்தின் சகோதரர் ஆகாஷ் ஷ்லோகா மேத்தாவை திருமணம் செய்து கொண்டார், பிரிட்டிஷ் இசைக்குழு கோல்ட்ப்ளே மூலம் தலைப்பு பொழுதுபோக்கையும் வழங்கினார். அம்பானி வீட்டு விஷேசங்கள் அனைத்தும் வெள்ளிக்கிழமைகளில்தான் நடைபெறுகிறது...



Click it and Unblock the Notifications
