பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? பூமியின் எல்லைக்கு அப்பால் என்ன உள்ளது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க

நாம் வாழும் பூமி என்பது நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத அளவிற்கு மிகப்பெரியது. பூமியின் ஒட்டுமொத்த பரப்பளவு கிட்டதட்ட 510 மில்லியன் சதுர கிலோமீட்டராகும். எந்தவொரு பரப்பளவாக இருந்தாலும் அதற்கு ஒரு தொடக்கமும், முடிவும் இருக்கும். அந்தவகையில் பூமியின் எல்லை எதுவாக இருக்கும் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து இருக்கிறீர்களா?

Which Place Is Called As the End of the Earth

195 நாடுகள் உள்ள இந்த பூமிக்கு உண்மையில் எல்லை என்று எதுவும் இல்லையென்றாலும், நார்வேயில் உள்ள நார்த் கேப் அதன் குறியீட்டு எல்லையாகக் கருதப்படுகிறது. இந்தியாவிலிருந்து சுமார் 6,900 கி.மீ தொலைவில் உள்ள இந்த இடத்திற்கும் E-69 நெடுஞ்சாலை வழியாக செல்லலாம். இந்த இடம் மிகவும் கடுமையான வானிலையையும், கண்கவர் காட்சிகளையும் வழங்குகிறது.

"பூமியின் எல்லை" எங்கே உள்ளது?

பூமி உருண்டையாக இருப்பதால், அதற்கு உண்மையில் ஒரு "முடிவு" என்று எதுவும் இல்லை. இருப்பினும், "பூமியின் கடைசி இடம்" என்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் ஒரு இடம் உலகில் உள்ளது. வட ஐரோப்பாவில் அமைந்துள்ள இந்தத் தனித்துவமான இடம், பார்ப்பதற்கு உலகின் விளிம்பில் இருப்பது போன்ற உணர்வை அளிக்கிறது. இது அமைந்துள்ள இடம், இங்கு நிலவும் கடுமையான வானிலை மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகள் ஆகியவை இதனைப் பயணிகளுக்குக் கற்பனைக்கும் எட்டாத ஒரு இடமாக மாற்றியுள்ளது.

உலகின் கடைசி சாலை

நார்வேயில் 'E-69 நெடுஞ்சாலை' என்ற புகழ்பெற்ற சாலை ஒன்று உள்ளது. இது பெரும்பாலும் "உலகின் கடைசிச் சாலை" என்று அழைக்கப்படுகிறது. இந்த நெடுஞ்சாலை ஐரோப்பாவின் வடகோடி முனையான 'நார்த் கேப்' பகுதிக்குச் செல்கிறது. இந்த சாலையில் பயணம் செய்வது, பூமியின் எல்லையை நோக்கிச் செல்வது போன்ற உணர்வை அளிக்கும்.

இந்தியாவிலிருந்து எப்படி செல்வது?

இந்த அற்புதமான இடம் இந்தியாவிலிருந்து சுமார் 6,900 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 12 மணி நேர விமானப் பயணத்தின் மூலம் இந்த இடத்திற்குச் செல்லலாம். அதன்பிறகு, சுமார் 14 கிலோமீட்டர் நீளமுள்ள E-69 நெடுஞ்சாலையில் பயணம் செய்ய வேண்டும்.

இந்த சாலையின் முடிவில் என்ன என்ன உள்ளது?

E-69 நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, ​​சில நிமிடங்களில் முடிவுக்கு வருகிறது. அதற்கு அப்பால் பரந்த கடல்களையும், பனி போர்த்திய நிலப்பரப்புகளையும், பனிப்பாறைகளையும் காணலாம். அங்கே நிற்கும்போது, பூமியின் ​​நிலப்பகுதி அங்கேயே நின்றுவிடுவதாகவும், உலகம் முடிவில்லாத இயற்கையோடு கலந்து மறைவது போன்ற உணர்வை ஏற்படுத்தும்.

ஆறு மாத பகலும் இரவும்

இங்குள்ள வானிலை மிகவும் கடினமானதாகவும் தனித்துவமானதாகவும் உள்ளது. கோடைக்காலத்தில் வெப்பநிலை 0°C-ல் இருக்கும், ஆனால் குளிர்காலத்தில் அது -45°C வரை குறையக்கூடும். ஆர்க்டிக் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளதால், இங்கு மற்ற இடங்களில் காண முடியாத ஒரு அதிசயம் உள்ளது. அதாவது, கோடையில் ஆறு மாதங்களுக்குத் தொடர்ச்சியான பகல் பொழுதும், குளிர்காலத்தில் ஆறு மாதங்களுக்கு இருளும் நிலவுகிறது.

இந்த இடம் ஏன் மிகவும் ஸ்பெஷலானது?

ஒரு காலத்தில் அணுகுவதற்குச் சிரமமாக இருந்த இப்பகுதி, 1930-களுக்குப் பிறகு வளர்ச்சியடையத் தொடங்கியது; இன்று இது உலகம் முழுவதிலுமிருந்து வரும் சாகசப் பயணிகள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் விரும்பும் ஒரு பிரபலமான இடமாகத் திகழ்கிறது.

Story first published: Friday, September 4, 2026, 11:16 [IST]
Desktop Bottom Promotion