Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் லட்டு - இப்படி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
ஹரியாலி வெஜ் புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்தியில் நிகழும் அரிய கிரக நிலைகளால் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்! -
வாகனங்களின் டயர்கள் ஏன் எப்போதும் கருப்பு நிறத்தில் மட்டுமே இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
வாழைத்தண்டு பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
இந்த 4 ராசிகள் அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டுவரும் தூய ஆன்மாவாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ச்சலின் போது எந்த உணவுகளை சாப்பிடலாம்? எதை சாப்பிடக்கூடாது? - விளக்கும் டாக்டர்! -
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது? இது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க
இந்தியா மிகப்பெரிய பரப்பளவையும், மக்கள்தொகையையும் கொண்ட உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றாகும். 1947-ல் சுதந்திரம் பெற்ற போது இந்தியாவில் 17 மாநிலங்களும், 565 சமஸ்தானங்களும் இருந்தன. அதன்பின் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு அனைத்து சமஸ்தானங்களும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டு பல்வேறு மாநிலங்களாக பிரிக்கப்பட்டன.

நிர்வாக வசதிக்காக தற்போது இந்தியா 28 மாநிலங்களாகவும், 8 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் 5 மாநிலங்களும் 1 யூனியன் பிரதேசமும் தென்னிந்தியாவாகவும், மீதமுள்ள மாநிலங்கள் வட இந்தியாவாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவானது மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கடற்கரைச் சமவெளிகள் முதல் காடுகள் மற்றும் பீடபூமிகள் வரை பல்வேறுபட்ட நிலப்பரப்புகளைக் கொண்டதாக அறியப்படுகிறது.
இப்பிராந்தியத்தில் ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் அடங்கும். தென்னிந்தியாவில் நூற்றுக்கணக்கான மாவட்டங்கள் உள்ளது. இதில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், கொச்சின் போன்ற மாவட்டங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் பரப்பளவின் அடிப்படையில், தென்னிந்தியாவின் மிகபெரிய மாவட்டம் எதுவென்று உங்களுக்கு தெரியுமா? இந்த பதிவில் அதற்கான பதிலை தெரிந்து கொள்ளலாம்.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது?
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எனும்போது நம் மனதில் பல மாவட்டங்கள் தோன்றியிருக்கும். ஆனால் நாம் முற்றிலும் எதிர்பார்க்காத வகையில் பரப்பளவின் அடிப்படையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமாக ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த பிரகாசம் மாவட்டம் உள்ளது. இம்மாவட்டம் சுமார் 14,322 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இது கடலோர ஆந்திரப் பகுதியில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கு எல்லையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது.
பிரகாசம் மாவட்டம்
ஆந்திராவின் கடலோரப் பகுதியில் அமைந்துள்ள பிரகாசம் மாவட்டம் 14,322 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை கிட்டதட்ட 40 லட்சமாகும். இதன் மாவட்ட தலைநகரமாக ஓங்கோல் உள்ளது. இந்த மாவட்டத்தில் மட்டும் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.
தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டம் எது என்பது குறித்து ஏன் குழப்பம் நிலவுகிறது?
பழைய பொது அறிவு (GK) நூல்களில் அனந்தபூர் மாவட்டம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமாகக் குறிப்பிடப்பட்டிருந்ததே இதற்குக் காரணம். முன்பு பிரிக்கப்படாத நிலையில் இருந்த அனந்தபூர் மாவட்டம் சுமார் 19,130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது. பின்னர் ஆந்திரப் பிரதேசத்தில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரகாசம் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக உருவெடுத்தது.
மிகப்பெரிய மாவட்டம் எதுவென்பதில் ஏன் குழப்பம் நிலவுகிறது?
கடந்த காலங்களில் அனந்தபூர் மாவட்டம் தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமென்று அரசு பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்ததே இதற்குக் காரணம். மாவட்டங்கள் முன்பு பிரிக்கப்படாத நிலையில் இருந்த அனந்தபூர் மாவட்டம் சுமார் 19,130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தது. பின்னர் ஆந்திரப் பிரதேசத்தில் மாவட்டங்கள் மறுசீரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரகாசம் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக மாறியுள்ளது.
பெயர் காரணம் என்ன?
ஆந்திரா மட்டுமின்றி தென்னிந்தியாவின் மிகப்பெரிய மாவட்டமாக விளங்கும் பிரகாசம் மாவட்டத்திற்கு இந்த பெயர் வைக்கப்பட்டதற்குப் பின்னால் ஒரு சுவாரஸ்யமான காரணம் உள்ளது. சுதந்திரப் போராட்ட வீரரும் ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சருமான தங்கூரி பிரகாசம் பந்துலுவின் நினைவாக இம்மாவட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.



Click it and Unblock the Notifications