Latest Updates
-
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க..
15000 கோடி மதிப்புள்ள முகேஷ் அம்பானி மாளிகைக்கு பக்கத்தில் உள்ள வீடுகளின் விலை என்ன தெரியுமா? ஷாக் ஆகாதீங்க...
மும்பையின் மையத்தில், நகரின் மிகவும் மதிப்புமிக்க பகுதிகளில் ஒன்றில் அமைந்துள்ளது, முகேஷ் அம்பானியின் 27-அடுக்குக் கட்டிடமான ஆண்டிலியா உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வீடாகவும், உலகில் இரண்டாவது மிகப்பெரிய வீடாகவும் இருப்பது முகேஷ் அம்பானி வசிக்கும் மாளிகையான ஆண்டிலியாதான். இதன் மதிப்பு 15000 கோடிக்கும் மேலாகும்.
இந்தியாவின் ஆடம்பரத்தின் உயர்ந்த சின்னமாக உலகம் முழுவதும் அறியப்பட்டாலும், இந்த ஆடம்பர மாளிகையில் மறைக்கப்படுவது என்னவென்றால், அதன் அருகே சொத்துக்களை வைத்திருப்பதற்கான செலவு ஆகும்.

2010 இல் கட்டி முடிக்கப்பட்ட ஆன்டிலியா, செல்வம் மற்றும் ஆடம்பரத்தின் அடையாளமான தெருவாக கூறப்படும் அல்டாமவுண்ட் சாலையில் அமைந்திருக்கிறது. இந்த கட்டிடக்கலை அதிசயத்திற்கான நிலம் 2010 ஆம் ஆண்டு 21.5 கோடி ரூபாய்க்கு கையகப்படுத்தப்பட்டது, இது வக்பு வாரியத்துடன் தொடர்புள்ளதால் சர்ச்சையை கிளப்பியது. ஆனால் இன்று மும்பையை சுற்றியுள்ள பகுதியில் மிகவும் விரும்பப்படும் முகவரிகளில் ஒன்றாக மாறியுள்ளது. உலகின் இரண்டாவது பெரிய மாளிகைக்கு அருகில் இருக்கும் சொத்துக்களின் விலை வானளவு இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.
ஆண்டிலியா இப்போது இருக்கும் இடத்தில் ஒரு காலத்தில் வக்ஃப் வாரியத்தின் கீழ் உள்ள தொண்டு நிறுவனத்தால் நிர்வகிக்கப்பட்ட அனாதை இல்லமான குரிம்போய் இப்ராஹிம் கோஜா யதீம்கானா இருந்தது. 2002 ஆம் ஆண்டில், அனாதை இல்லத்தை நிர்வகிக்கும் அறக்கட்டளை நிலத்தை விற்க அனுமதி கோரியது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியின்படி, அந்த நேரத்தில் சுமார் $30 மில்லியன் சந்தை மதிப்பு இருந்த நிலம், முகேஷ் அம்பானியின் Antilia Commercial Private Limited நிறுவனத்திற்கு வெறும் $2.5 மில்லியனுக்கு விற்கப்பட்டது.
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர் அருகில் வாழ வேண்டும் என்று கனவு காண்பவர்கள் அதற்காக பெரும் தொகையை செலவழிக்க வேண்டியிருக்கும். இப்பகுதியில் ஒரு சாதாரண 2 BHK பிளாட்டின் விலை ₹6 முதல் ₹8 கோடியில் தொடங்குகிறது. ஆனால் அது வெறும் தொடக்கம் மட்டுமே, அக்கம்பக்கத்தில் உள்ள பெரிய 4, 5 மற்றும் 6 BHK பிளாட்களின் விலை ₹40 முதல் ₹50 கோடி வரை இருக்கலாம். இந்த சொத்துக்கள், பெரும்பாலும் பழைய கட்டமைப்புகளை மாற்றியமைக்கப்பட்ட கட்டிடங்களாகும். இது இந்த மேல்தட்டு மக்கள் வசிக்கும் குடியிருப்பில் உள்ள இடத்தின் பற்றாக்குறை மற்றும் பிரீமியம் மதிப்பை பிரதிபலிக்கிறது.
ஆண்டிலியாவின் பிரம்மாண்டமும், வசீகரமும் சந்தேகத்திற்கு இடமின்றி அல்டாமவுண்ட் சாலையின் நிலையை உயர்த்தியுள்ளது, இது ஆர்வத்தை மட்டுமல்ல, இந்த ஆடம்பரமான சுற்றுப்புறத்தில் தங்கள் வீட்டை விரும்பும் செல்வந்தர்களையும் ஈர்க்கிறது. இந்த ஏரியாவில் விலை குறைவதற்கான அறிகுறிகள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் தெரியாத நிலையில், முகேஷ் அம்பானியின் வாழ்விடத்தின் செலவு தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது, மும்பையின் இந்தப் பகுதியில் சொத்து வைத்திருப்பது ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் பாக்கியம் என்பதை இது தெளிவுபடுத்துகிறது.
ஆன்டிலியா இங்கு வருவதற்கு முன்பும் இந்த ஏரியாவில் கட்டுமானங்களின் விலை சாதாரண மக்களால் வாங்க முடியதாக இருந்தது. ஆன்டிலியாவின் கட்டுமானம் 2006 இல் தொடங்கி 2010 இல் நிறைவடைந்தது. இந்த கட்டிடம் 27 தளங்களைக் கொண்டுள்ளது மற்றும் 1.120 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. உடற்பயிற்சி கூடம், ஸ்பா, தியேட்டர், மாடித் தோட்டம், நீச்சல் குளம், கோவில், சுகாதார வசதிகள் மற்றும் 168 கார்களுக்கான பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு ஆடம்பரமான வசதிகளை இது கொண்டுள்ளது. ஆண்டிலியா ரிக்டர் அளவுகோலில் 8 அளவு நிலநடுக்கத்தைக் கூட தாங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடம் இங்கு வந்த பிறகு மும்பை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவின் பார்வையும் இங்கு வந்ததால் ரியல் எஸ்டேட் மதிப்பு பலமடங்கு உயர்ந்து விட்டது.



Click it and Unblock the Notifications












