விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் குரங்குக்கு என்ன நடந்தது? அதன்பின் எத்தனை குரங்குங்கள் அனுப்பப்பட்டது தெரியுமா

தற்போது நம் உலகம் அடைந்துள்ள மாபெரும் விஞஞான வளர்ச்சியால் விண்வெளிக்குச் செல்வது என்பது மிகவும் எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாறியுள்ளது, ஆனால் கடந்த காலங்களில் விண்வெளிப் பயணம் என்பது மிகவும் ஆபத்தானதாக இருந்தது.

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் முன் நாசா விண்வெளிக்கு அனுப்பிய முதல் குரங்குகள் மற்றும் சிம்பான்ஸிகள் பெரும்பாலும் அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் பயங்கரமான முடிவுகளை சந்தித்தன. மனிதகுலம் மாபெரும் முன்னேற்றத்தை அடைவதற்கு முன்பு, நமக்குத் தெரியாத பெரிய விஷயத்தை கற்றுக்கொள்வதற்காக குரங்குகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டது.

What Happened to The Monkey That Was Sent to Space in Tamil

அதிக உயரங்களுக்கு மனித உடல் எவ்வாறு செயல்படும் என்பது பற்றி அறிந்து கொள்ள, அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் விலங்கினங்களை சோதனைப் பொருட்களாக வானத்திற்கு அனுப்பினர். இந்த முடிவுகள் அந்த விலங்கினங்களுக்கு சாதகமாக இல்லை.

நாசாவினால் V2 ராக்கெட்டில் அனுப்பப்பட்ட விலங்குகளில் முதன்மையானது 1948 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆல்பர்ட் என்ற ரீசஸ் குரங்கு ஆகும். துரதிர்ஷ்டவசமாக, ஆல்பர்ட் மூச்சுத்திணறல் காரணமாக இறப்பதற்கு முன்பு தரையில் இருந்து 63 கி.மீ உயரத்திற்கு மட்டுமே சென்றது.

சரியாக ஒரு வருடம் கழித்து ஆல்பர்ட் என்ற பெயருடைய இரண்டாவது குரங்கு 134 கிலோமீட்டர் உயரத்திற்குச் சென்றது, உண்மையில் விண்வெளி உயரத்தை அடைந்த முதல் விலங்கினமாக இரண்டாம் ஆல்பர்ட் பெயர் பெற்றது. ஆனால் ஆல்பர்ட் II ராக்கெட் ஏவப்பட்டதில் இருந்து உயிர் பிழைத்தாலும், தரையிறங்கும் போது அதன் பாராசூட் திறக்காமல் போனதால் கீழே விழுந்த தாக்கத்தில் இறந்தது.

1959ல்- குரங்குகளின் விண்வெளி பயணத்தில் ஒரு மாபெரும் மைல்கல் எட்டப்பட்டது. மிஸ் பேக்கர் மற்றும் மிஸ் ஏபிள் என்ற ரீசஸ் குரங்கு ஜூபிடர் ராக்கெட்டில் 483 கிலோமீட்டர் உயரத்தை எட்டியது மட்டுமல்லாமல், அவை பத்திரமாக உயிருடன் திரும்பின.

துரதிர்ஷ்டவசமாக இந்த நல்ல செய்தி குறுகிய காலமே நீடித்தது, மிஸ் ஏபிள் ஒரு மின்முனையை(electrode) அகற்றுவதற்கான மருத்துவ அறுவை சிகிச்சையின் போது இறந்தது. அதேசமயம் மிஸ் பேக்கர் நீண்ட மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து, ஒரு தேசிய பொக்கிஷமாக மாறியது. அது இரண்டு முறை திருமணம் செய்து கொண்டது, இறுதியில் சிறுநீரக செயலிழப்பால் 1984 இல் 27 வயதில் இறந்தது. அலபாமாவின் ஹன்ட்ஸ்வில்லில் உள்ள அவரது கல்லறையில் மக்கள் இன்றும் வாழைப்பழங்களை வைக்கின்றனர்.

1959 ஆம் ஆண்டு டிசம்பரில் மெர்குரி கேப்ஸ்யூலில் லிட்டில் ஜோ ராக்கெட்டில் சாம் (School of Aviation Medicine) என்ற ரீசஸ் குரங்கு அனுப்பப்பட்டது. 82 கிமீ உயரத்தை அடைந்த பிறகு, விண்கலம் நிறுத்தப்பட்டது, ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது. சாம் தனது குறுகிய பயணத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார்.

விரைவில், ஜனவரி, 1960 இல், சாமின் துணையான மிஸ் சாமும் ஒரு மெர்குரி கேப்ஸ்யூலில் அனுப்பப்பட்டது. இந்த செயல் குறைவான பலனைத் தந்தது, ஏவுதளத்திற்கு அருகிலுள்ள அட்லாண்டிக் பெருங்கடலில் இறங்குவதற்கு முன்பு 15 கிமீ உயரத்தை மட்டுமே எட்டியது. இந்த இரண்டு முயற்சிகளிலுமே சாம் என்ற குரங்குகள் பாதிக்கப்படவில்லை.

ரஷ்யா நாய்களை வானத்திற்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்தபோதும், பிரான்ஸ் இண்டர்கலெக்டிக் பூனைகளை பரிசோதித்துக்கொண்டிருந்தபோது, ​​அமெரிக்காவின் குரங்குகளுடனான சோதனைகள் பெரிய முன்னேற்றத்திற்கு வழி வகுத்தன, இறுதியில் மனிதர்களை அமெரிக்கா விண்வெளிக்கு அனுப்பியது.

சிம்பன்சிகள், மனிதர்களுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையவை, எனவே அடுத்ததாக நாசா பரிசோதனை செய்வதற்கு ஒரு இயற்கையான தேர்வாகத் தோன்றியது.

ஜனவரி 1961 இல் ஹாம் என்ற பெயருடைய சிம்ப், 253 கிமீ உயரத்தை அடைந்து, ஒரு துணை விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டது. ஹாம் நீரிழப்பை அனுபவித்தபோது, ​​ஹாம் 16.5 நிமிடத்தில் விமானத்தில் இருந்து காயமின்றி வெளியே வந்தது, இது ஆராய்ச்சியாளர்களுக்கு விண்வெளி பயணத்தில் மற்றொரு வெற்றியைக் குறிக்கிறது.

சோவியத் யூனியனின் யூரி ககாரின் தனது வோஸ்டாக் விண்கலம் ஏப்ரல் 12, 1961 இல் பூமியின் சுற்றுப்பாதையை முடித்தபோது விண்வெளியை அடைந்த முதல் மனிதர் ஆனார். சிறிது காலத்திற்குப் பிறகு, மே 5, 1961 இல், அமெரிக்க விண்வெளி வீரர் ஆலன் ஷெப்பர்ட் இரண்டாவது நபராகவும் முதல் அமெரிக்கராகவும் ஆனார்.

மனித விண்வெளிப் பயணம் பாதுகாப்பானதாகவும், அதனால் மிகவும் பிரபலமாகவும் இருந்தபோதும், விண்வெளியில் முதன்மையான சோதனைகளை அது முழுமையாக நிறுத்தவில்லை. கோலியாத் என்று பெயரிடப்பட்ட ஒரு பெரிய அணில் குரங்கு, 1961 இன் பிற்பகுதியில் கேப் கனாவரலில் இருந்து ஏவப்பட்ட விமானப்படை அட்லஸ் இ ராக்கெட்டில் இறந்தது.

1969 ஆம் ஆண்டில், போனி என்ற பன்றி வால் குரங்கு நீரிழப்பு காரணமாக ஏற்பட்ட மாரடைப்பால் இறப்பதற்கு முன்னர் ஒன்பது நாட்கள் சுற்றுப்பாதையில் இருந்தது. இது விலங்குகள் மீதான விண்வெளி ஆராய்ச்சியில் மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்பட்டது.

Desktop Bottom Promotion