Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..!
வாஸ்துப்படி, பர்ஸில் 21 அரிசியை இந்த மாதிரி வெச்சா.. பணம் அதிகம் சேருமாம்...
Vastu Tips In Tamil: உங்கள் பர்ஸில் பணம் சேர்வதில்லையா? எப்போதும் உங்கள் பர்ஸ் காலியாகவே உள்ளதா? அப்படியானால் உங்கள் பர்ஸில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் விஷயங்கள் இருக்க வாய்ப்புள்ளது.
வாஸ்துப்படி எந்த ஒரு இடத்தில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருள் உள்ளதோ, அங்கு பிரச்சனைகள் நிறைந்திருக்கும் மற்றும் பணம் எதுவும் சேராது. ஒருவர் தங்கள் பர்ஸில் வெறும் பணத்தை மட்டும் வைத்திருப்பதில்லை. அதைத் தவிர பல விஷயங்களையும் வைத்திருப்போம்.

இப்படி கண்டதை வைத்தால், அந்த பர்ஸில் பணம் எப்போதும் நிலைத்திருக்காது. வாஸ்துப்படி, பயன்படாதவற்றை பர்ஸில் வைத்திருந்தால், அவற்றை உடனே வெளியேற்றுங்கள். ஏனெனில் பயன்படாதவைகள் எதிர்மறை ஆற்றலை கொண்டிருக்கும்.
அதோடு, பர்ஸில் ஒருசிலவற்றை வைப்பதன் மூலம், எப்போதும் பணம் நிலைத்திருக்கும். இப்போது வாஸ்துப்படி எவற்றை பர்ஸில் வைத்திருக்க வேண்டும் மற்றும் எவற்றை அப்புறப்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
கிழிந்த நோட்டுகள்
கிழிந்த நோட்டுகள் அல்லது செல்லாத நோட்டுகளை பர்ஸில் எப்போதும் வைத்திருக்காதீர்கள். ஏனெனில் இந்த வகை நோட்டுகள் பர்ஸில் பணத்தை சேர்ப்பதற்கு பதிலாக, அதிக செலவுகளை செய்யத் தூண்டும். இதன் மூலம் பணம் எப்போதும் பர்ஸில் நிலைத்திருக்காமல் காலியாகவே இருக்கும். ஆகவே பர்ஸ் எவ்வளவு சுத்தமாக உள்ளதோ, அவ்வளவு பணம் பர்ஸில் சேரும்.
லட்சுமி தேவியின் போட்டோ
பர்ஸில் பணம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமானால், லட்சுமி தேவியின் போட்டோவை அவசியம் வைத்திருக்க வேண்டும். இப்படி வைத்திருப்பதன் மூலம் பணம் எப்போதும் பர்ஸில் நிரம்பியிருக்கும். ஆனால் லட்சுமி தேவியின் போட்டோவை அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அதோடு ஸ்ரீயந்திரத்ரத்தையும் பர்ஸில் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இதுவும் லட்சுமி தேவியின் வடிவமாக கருதப்படுகிறது.
சாவியை வைத்திருக்காதீர்கள்
வாஸ்துப்படி, சாவியை எப்போதும் பர்ஸில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இப்படி வைத்தால், அந்நபரின் பர்ஸில் பணம் எப்போதும் நிலைத்திருக்காது மற்றும் பண பிரச்சனையால் அதிகம் சிரமப்பட நேரிடும்.
அரிசியை வைக்கவும்
உங்கள் பர்ஸில் பணம் எப்போதும் நிரம்பியிருக்க வேண்டுமா? அப்படியானால் 21 உடையாத அரிசியை ஒரு மஞ்சள் துணியில் வைத்து கட்டி, அதை பர்ஸில் வைத்திருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படி செய்வதன் மூலம் பண வரவு சிறப்பாக இருக்கும். பணத்திற்கு பஞ்சமே இருக்காது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











