இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆபத்தான டாப் 10 நகரங்கள்..சென்னை எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா?

Top 10 Unsafe Cities in India: இந்தியா பொருளாதாரரீதியாக எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறதோ அதேயளவிற்கு குற்ற விகிதமும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. நகரமயமாக்கலும், சமூகத்தில் நிலவும் பொருளாதார இடைவெளியும் குற்றங்களை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சில நகரங்கள் மாநிலங்களின் தலைநகரமாக இருந்தாலும் அங்கே மக்கள் பாதுகாப்பாக வாழ முடியாத சூழல் நிலவுகிறது.

வன்முறையுடன் சேர்ந்து இப்போது வளர்ந்த நகரங்களில் சைபர் குற்றங்களும் வேகமாக அதிகரித்து வருகிறது. இது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. NCRB அறிக்கையின் படி குற்ற விகிதம் அதிகமுள்ள நகரங்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. இந்த பதிவில் இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பில்லாத டாப் 10 நகரங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

Top 10 Unsafe Cities in India Check Where Chennai Stands

டெல்லி

டெல்லி இந்தியாவின் மிகவும் பாதுகாப்பற்ற நகரத்தில் முதல் இடத்தில் உள்ளது. இங்கு அதிகளவு குற்ற விகிதங்கள் உள்ளது. கொலை, கொள்ளை சம்பவங்கள் முதல் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வரை அனைத்திலும் டெல்லி முதலிடத்தில் உள்ளது, மக்கள் தொகை அடர்த்தி இருப்பதால் தான் குற்றச் சம்பவம் அதிகமாகக் கூறப்படுகிறது. காவல் துறை கண்காணிப்பு மற்றும் சிவில் அமைப்புகளின் பங்கேற்பை அதிகரிப்பதற்கான முயற்சிகள், பெண்கள் பாதுகாப்பு முயற்சிகள் என குற்ற விகிதத்தை குறைக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், குற்றங்களை குறைப்பது இன்னும் கடினமாகவே உள்ளது.

மும்பை

நிதி மோசடி முதல் திட்டமிடப்பட்ட குற்றம் வரை அனைத்து வகையான குற்றங்களுக்கும் மும்பை மக்கள் ஆளாகிறார்கள். இந்தியாவின் பொருளாதார மையத்தில் நிலவும் வணிக இடைவெளி மற்றும் பரந்த நகர்ப்புற வளர்ச்சி சமூகத்தில் ஏற்ற இறக்கங்களை அதிகரித்துள்ளது, இதன் விளைவாக சமூகத்தின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

பெங்களூர்

இந்தியாவின் தொழில்நுட்ப நகரமான பெங்களூர் தற்போது குற்றங்களின் தலைநகரமாக மாறிவருகிறது. பெங்களூரில் தொடர்ந்து சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இப்போது இது போன்ற தொழில்நுட்பரீதியாக குற்றம் செய்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, இதன் விளைவாக ஃபிஷிங், ஹேக்கிங் மற்றும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. அதுமட்டுமின்றி போதைப்பொருள் குற்றங்கள் மற்றும் திருட்டுகளும் அதிகம் நடைபெறுகிறது.

Top 10 Unsafe Cities in India Check Where Chennai Stands

சென்னை

அதிகரித்து வரும் சங்கிலி பறிப்பு, மனித கடத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சென்னையை மோசமாக பாதித்துள்ளன. நகரத்தில் நிலவும் புவியியல் சமூக-பொருளாதார இடைவெளிகள், காவல்துறையினரின் வேலைப்பளு மற்றும் மனஅழுத்தம் குற்றங்களைத் தடுப்பதை கடினமாக்குகின்றன. இருப்பினும், பெண்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள், சமூக காவல் மற்றும் உயர் தொழில்நுட்ப கண்காணிப்பு போன்றவை குற்றங்களை குறைக்க சிறப்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொல்கத்தா

நீண்ட வரலாறு கொண்ட கொல்கத்தாவில் தற்போது குற்ற விகிதங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சமீபத்தில் இங்கு நடந்த வன்கொடுமை வழக்குகள் இந்தியாவையே உலுக்கியது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இங்கு பரவலாக உள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளும், நீதித்துறையின் மந்தநிலையும் குற்றங்கள் அதிகரிக்க முதன்மை காரணங்களாக உள்ளது.

ஜெய்ப்பூர்

இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தனமான ஜெய்ப்பூரில் பிக்பாக்கெட் திருட்டு, மோசடி மற்றும் வன்முறை தொடர்பான குற்றங்கள் போன்ற உயர் குறியீட்டு குற்றங்களில் அதிகரித்து வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள் மீது பல மோசடிகள் நடத்தப்படுவது வழக்கமாக வருகிறது. சுற்றுலாப் பயணிகளை பாதுகாப்பதற்கே இங்கு தனி காவல்துறை தேவைப்படுகிறது.

ஹைதராபாத்

ஹைதராபாத்தில் வேகமான பொருளாதார வளர்ச்சி மட்டும் நிகழவில்லை, சொத்து தகராறுகள், திருட்டுகள் மற்றும் சைபர் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. பாரம்பரிய நகரமாகவும், புகழ்பெற்ற தகவல் தொழில்நுட்ப மையமாகவும் விளங்கும் நகரம் பல்வேறு குற்றங்களுக்கு ஆளாகிறது. இந்த குற்றங்களைத் தடுக்க காவல்துறை தொடர்ந்து கடுமையாக முயற்சித்து வருகிறது.

அகமதாபாத்

அகமதாபாத்தின் பொருளாதார வளர்ச்சி நிதி மோசடி மற்றும் திருட்டு பிரச்சினையை அதிகரித்துள்ளது. மோசடிகளால் பெரும்பாலும் பாதிக்கப்படுபவர்கள் இந்த நகரத்தின் நடுத்தர வர்க்கத்தினர்தான். இது தவிர, மோசமான கண்காணிப்பு பாதுகாப்பும் இந்த குற்றங்களை அதிகப்படுத்தியுள்ளது. இத்தகைய போக்குகளைக் கட்டுப்படுத்த பொருளாதார குற்றப்பிரிவு துரிதமாக செயல்பட்டு வருகிறது.

புனே

புனே மாணவர்களுக்கான நகரமாக அறியப்படுகிறது, ஆனால் தற்போது, பாலியல துன்புறுத்தல், திருட்டு மற்றும் போதைப்பொருள் துஷ்பிரயோகம் போன்ற குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் மற்றும் நகரத்திற்கு புதிதாக வருகை தருபவர்கள் இந்த குற்றங்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குகிறார்கள்.

பாட்னா

அரசியல் சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்பு இல்லாமை போன்ற பிரச்சினைகளால் போராடும் பாட்னா, அதிக குற்ற விகிதங்களைக் கொண்டுள்ளது. கடத்தல்கள், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் திருட்டுகள் ஆகியவை இங்கு நிலவும் மூன்று முக்கிய குற்றங்களாகும், இந்தியாவில் நிர்வகிக்க மிகவும் கடினமான நகரமாக பாட்னா இருப்பதில் ஆச்சரியம் எதுவும் இல்லை. அரசாங்கம் குற்றங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளுடன் ஒரு சமூக காவல் மாதிரியை உருவாக்கி வருகிறது.

Desktop Bottom Promotion