Latest Updates
-
திரிகிரக யோகம் கும்ப ராசியில் உருவாவதால் இந்த 3 ராசிக்காரர்களை தோல்வியும், துரதிர்ஷ்டமும் துரத்தப்போகுதாம்...! -
1 கப் கோதுமை ரவா இருந்தா இந்த மாதிரி அடை செஞ்சு பாருங்க... சூப்பரான காலை உணவா இருக்கும்... ட்ரை பண்ணுங்க...! -
இந்தியாவின் முதல் பெண்களுக்கான பள்ளி எப்போது திறக்கப்பட்டது? எந்த ஊரில் திறக்கப்பட்டது தெரியுமா? -
உருளைக்கிழங்கை ஒருதடவை இந்த மாதிரி கொங்குநாடு ஸ்டைலில் குருமா வைச்சு பாருங்க...டக்கரான சைடிஷா இருக்கும்...! -
அமெரிக்க-ஈரான் போரால் துபாயில் சரசரவென குறையும் தங்கம் விலை...இந்தியாவிலும் தங்கம் விலை குறையுமா? உண்மை என்ன? -
இந்த 4 ராசிக்காரங்க உயிரை கொடுத்தாவது குடும்பத்தை பாதுகாக்கும் ரியல் ஹீரோவாக இருப்பார்களாம்...உங்க ராசி என்ன? -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. தொப்பையும், உடல் எடையும் இருமடங்கு வேகத்துல குறையும்.. -
இன்றைய ராசிபலன் 07 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம்...! -
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்...
20 முதல் 650 கொலைகள் வரை செய்த உலகின் டாப் 10 பெண் கொலையாளிகள்... இதயம் பலவீனமானவங்க படிக்காதீங்க...!
பொதுவாகவே கொலை என்று பேசும் போது முதலில் நமக்கு முதலில் நினைவிற்கு வருவது முகத்தில் முகமூடி அணிந்து கையில் பளபளக்கும் கத்தியுடன் ஒரு மனிதனின் உருவம் தான். இந்த ஸ்டீரியோடைபிற்கு நாம் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை பார்த்த க்ரைம் த்ரில்லர் திரைப்படங்கள் காரணமாக இருக்கலாம்.
ஆனால் உண்மையில் ஆண்களை விட கொடூரமாக கொலை செய்த பெண்கள் வரலாற்று முழுவதும் நிறைந்துள்ளனர். இவர்களின் கொலை வெறி பற்றி படிக்கும்போதே நமது இரத்தம் உறைய வாய்ப்புள்ளது.
இந்த பதிவில் கனவில் கூட நினைக்க முடியாத வகையில் கொலை செய்து வரலாற்றில் இடம்பிடித்துள்ள பெண்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
வால்ட்ராட் வாக்னர்
கொலைகளின் எண்ணிக்கை - 15
வாக்னர் கொலை குழுவின் தலைவராக இருந்தார், ஆனால் நான்கு செவிலியர்களில் ஒருவர் மட்டுமே போதைப்பொருளின் அளவுக்கதிகமான அளவுகள் மற்றும் பிற வழிகளால் ஏராளமான இறப்புகளை ஏற்படுத்தியதற்காக தண்டிக்கப்பட்டார். 1980களின் பிற்பகுதியில் வியன்னாவில் உள்ள லைன்ஸ் மருத்துவமனையில் பல கொலைகள் நடந்தன.
லைன்ஸ் ஆங்கிள்ஸ் ஆஃப் டெத் என்றும் அழைக்கப்படும் வாக்னரின் கொலையாளிகளின் குழுவால் 42 முதல் இருநூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் கொல்லப்பட்டனர். வால்ட்ராட் வாக்னருக்கு 15 கொலைகள் மற்றும் 17 கொலை முயற்சிகளை உள்ளடக்கிய குற்றச்சாட்டிற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
மேரி ஆன் காட்டன்
கொலைகளின் எண்ணிக்கை - 20+
1832 இல் பிறந்த மேரி ஆன் ஒரு முன்னாள் செவிலியர் மற்றும் பிரிட்டனின் மிக மோசமான பெண் கொலையாளிகளில் ஒருவராக கருதப்படுகிறார். 20 வருட காலப்பகுதியில் அவர் 3 கணவர்கள், குழந்தைகள் மற்றும் வளர்ப்பு பிள்ளைகள் உட்பட 14-20 பேரை கொலை செய்திருக்கலாம் என தெரிகிறது. அவருடைய ஆர்சனிக் போதை அதற்கு காரணமாக இருந்தது. அவர் 1873 மார்ச் 24 அன்று டர்ஹாம் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
ஜெனீன் ஜோன்ஸ்
கொலைகளின் எண்ணிக்கை - 21
1984 ஆம் ஆண்டில், டெக்சாஸில் உள்ள சான் அன்டோனியோ மருத்துவமனையில், செவிலியராகப் பணிபுரிந்த செல்சியா மெக்லெலன் என்ற குழந்தையைக் கொன்றதற்காக ஜோன்ஸ் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்டார். succinylcholine என்ற ஆபத்தான மருந்துகள் அவரது கட்டுப்பாட்டில் இருந்ததால் அதனை குழந்தையைக் கொல்ல பயன்படுத்தினார்.
ஜோன்ஸின் பராமரிப்பில் இருந்த 20 குழந்தைகள் வரை சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்ததை அடுத்து அவர் பணிபுரிந்த முந்தைய மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார். ஜோன்ஸ் 99 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மொத்தம் 42 குழந்தைகளை கொலை செய்தார் என்று குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டது.

ஹெலன் ஜெகடோ
கொலைகளின் எண்ணிக்கை - 23
ஹெலன் ஜெகடோ ஒரு பிரெஞ்சு வீட்டுப் பணிப்பெண்ணாக இருந்தார், அவர் 18 ஆண்டுகளில் ஆர்சனிக் மூலம் சுமார் 23 பேரைக் கொன்றதாக அறியப்படுகிறது. இந்த கொலைகள் 1833 மற்றும் 1841 க்கு இடையில் செய்யப்பட்டன, அதன் பிறகு அவர் பத்தாண்டுகள் கொலை செய்வதை நிறுத்தி வைத்திருந்தார்.
1851 இல் ரென்னெஸில் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார், அவரது காட்டுமிராண்டித்தனமான செயலுக்காக 1852 இல் மரண தண்டனை அளிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டார்.
ஜேன் டோப்பன்
கொலைகளின் எண்ணிக்கை - 30
பாஸ்டனில் பிறந்த நோரா கெல்லி, ஜேன் டோப்பன் (1854-1938) என்றும் அழைக்கப்படுகிறார், அவர் செவிலியராக பணிபுரிந்தார். அவரது பராமரிப்பில் இருந்த பல நோயாளிகள் இறந்த பிறகு, அவர் மீது சந்தேகம் எழுந்தது மற்றும் மீண்டும் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
பிணங்களில் மார்பைன் மற்றும் அட்ரோபின் போதைப்பொருளின் தடயங்கள் இருந்தது. அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் அவர் 30 பேரைக் கொன்றது உறுதிப்படுத்தப்பட்டது. 1938 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி அவர் தனது 84 வயதில் சிறைச்சாலையில் இறந்தார்.
கெசினா மார்கெரெட்டா
கொலைகளின் எண்ணிக்கை - 30
1815 இல் தனது முதல் கணவருக்கும் இரண்டு குழந்தைகளுக்கும் ஆர்சனிக் விஷம் கொடுத்த பிறகு, ஜெர்மன் கொலையாளி கெசினா தனது கொலைகளை நிறுத்தவில்லை. அவர் பெற்றோரை ஒரே மாதிரியான முறையில் கொன்றார், பின்னர் மரணப்படுக்கையில் இருந்த அவருடைய இரண்டாவது கணவனையும் கொன்றார்.
அவரது செல்வம் குறையத் தொடங்கியபோது, அவர் தனது சகோதரர், வங்கிக் கடனாளி மற்றும் ரம்ஃப் என அறியப்பட்ட ப்ரெமன் வீல்ரைட் குடும்பத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் உட்பட நீண்ட தொடர் கொலைகளைச் செய்தார். ரம்ஃப் குடும்பத்தில் ஒரு வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்தார்.
ரம்ஃப் சந்தேகத்திற்கு இடமான முறையில் மறைந்த பிறகு, கெசினா 1828 இல் கைது செய்யப்பட்டார். விசாரணையின் போது அவர் 30 பேரைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார், பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார்.
பெல்லா பால்ஸ்டாட்டர் சோரன்சென் கன்னஸ்
கொலைகளின் எண்ணிக்கை - 42
வரலாற்றின் மிக அதிகமான கொலைகாரர்களில் ஒருவரான பெல்லா அல்லது பெல்லி கன்னெஸ், அமெரிக்காவில் பிறந்த நார்வே நாட்டைச் சேர்ந்தவர். அவர் தனது கணவர் பீட்டர் கன்னஸை அவரது ஆயுள் காப்பீட்டிற்காக கொலை செய்ததாக நம்பப்படுகிறது. ஒரு அலமாரியில் இருந்து ஒரு கோடாரி அவரது தலையில் விழுந்ததாக அவர் கூறினாலும். இதற்குப் பிறகு, அவர் 'லோன்லி ஹார்ட்ஸ்' விளம்பரம் மூலம் 26 பேர் வரை கவர்ந்து கொலை செய்தார்.
28 ஏப்ரல் 1908 அன்று அவரது பணியிடம் தீப்பிடித்து தலையில்லாத சடலம் கண்டெடுக்கப்பட்டது. அந்த உடல் கன்னஸுக்கு சொந்தமானது, அவர் தனது 3 குழந்தைகளுடன் கொலை செய்யப்பட்டார்.
அவரது முந்தைய குற்றத்துக்கான கூட்டாளியான ரே லம்பேரால் அவர் கொல்லப்பட்டார். ஆனால் சிலர் கன்னஸ் இறக்கவில்லை, அவர் தனது சொந்த மரணத்தை போலியாக உருவாக்கி மறைந்துவிட்டார் என்று இன்றுவரை நம்புகிறார்கள்.
டெல்ஃபினா மற்றும் மரியா டி ஜீசஸ் கோன்சலேஸ்
கொலைகளின் எண்ணிக்கை - 80
1964 ஆம் ஆண்டில், 80 பெண்கள் மற்றும் 11 ஆண்களின் எச்சங்கள் மெக்சிகனனில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கோன்சலேஸ் சகோதரிகளுக்கு 40 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அவர்கள் விபச்சாரிகளாக இருந்தார்கள், மேலும் அவர்கள் ஜோடி உலகின் கொடூரமான கொலையாளிகளில் ஒருவராக அறியப்படுகிறார்கள், கூடுதலாக "மிகவும் வெற்றிகரமான கொலை ஜோடி" என்ற கின்னஸ் சாதனையையும் பெற்றுள்ளனர்.
சூசன்னா ஓலா
கொலைகளின் எண்ணிக்கை - 100
40 வயதான செவிலிரான Susi Otah, ஹங்கேரிய கிராமமான Nagorev-க்கு வந்தார். அடுத்த சில ஆண்டுகளில், ஆர்சனிக் போதையின் விளைவாக, அவரைச் சந்தித்த பிறகு, 100 பேர் வரை மரணமடைவார்கள் என்று அவர் வெற்றிகரமாக கணித்தார்.
பலர் ஏஞ்சல் என்று செல்லப்பெயர் பெற்ற பெண்ணை கொலைகாரன் என்று கருதினர். அவர் புதிதாக பிறந்த குழந்தைகள் மற்றும் ஊனமுற்ற குழந்தைகள் முதல் முதியவர்கள் மற்றும் பல உள்ளூர் பெண்களின் கணவர்கள் வரை அனைத்து வயது மற்றும் அனைத்து வகையான மக்களையும் கொன்றார். 1929 இல் அவர் கைது செய்யப்பட்டபோது தற்கொலை செய்துகொண்டார்.
கவுண்டஸ் எலிசபெத் பாத்தோரி
கொலைகளின் எண்ணிக்கை - 650
எலிசபெத் பாத்தோரி (1560-1614), 300 முதல் 650 சிறுமிகளைக் கொன்றதாக நம்பப்படுகிறது. மேலும் 610 பேரின் இரத்தத்தை குடித்தால் வயதாகாமல் இருக்கும் என்ற நம்பிக்கையில் கொலை செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் இறுதியில் 1611 இல் கைது செய்யப்பட்டார். எலிசபெத் பாத்தோரி ஆகஸ்ட் 21, 1614 இல் இறந்தார். பின்னர் 1970 ஆம் ஆண்டு 'கவுண்டஸ் டிராகுலா' என்ற திகில் திரைப்படம் அவரது வாழ்க்கை மற்றும் குற்றங்களைப் பற்றி எடுக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications











