Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
30 ஆண்டுகளுக்கு பின் சனியும், சூரியனும் எதிரெதிரே இருப்பதால்.. இந்த 5 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..!
Sun, Saturn Will Be Face To Face After 30 Years: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் தற்போது தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
அதே சமயம் சனி பகவானும் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதாவது தற்போது சூரியனும், சனி பகவானம் எதிரெதிரே 180 டிகிரியில் அமைந்துள்ளனர்.

சூரியனும், சனி பகவானும் பகைமை உணர்வு கொண்டவர்கள். அதே வேளையில் குரு பகவானின் 5 ஆவது பார்வை சூரியனின் மீது விழுகிறது. இதுப்போன்ற நிகழ்வு சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.
இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 5 ராசிக்காரர்கள் இந்நிகழ்வால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதையும், எந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் காண்போம்.
ரிஷபம்
சனி மற்றும் சூரியனின் நிலையால் ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் உங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். உயர் அதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாகக்கூடும். இக்காலத்தில் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதில் தடைகள் ஏற்படலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் நிலையானது தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளைக் கொண்டு வரும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளது. வணிகர்கள் எந்த முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் நிலையால் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது மனநிலையை படுமோசமாக பாதித்துவிடும். தேவையில்லாமல் கோபப்படுவது ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அலுவலகத்தில் விஷயங்கள் சாதகமாக இருக்காது.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சனி மற்றும் சூரியனின் நிலையால் மிகவும் மோசமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். காதலிப்பவர்கள் காதல் முறிவை சந்திக்கலாம். பணிபுரிபவர்கள் இக்காலத்தில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அலுவலகத்தில் சூழ்நிலை சாதகமாக இருக்காது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சூரியன் மற்றும் சனியின் நிலையால் கூடுதல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நிதி பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும் மற்றும் குடும்பத்திலும் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உண்ணும் உணவுகளில் சிறப்பு கவனத்தை செலுத்த வேண்டும். ஏனெனில் உணவுகளால் உடல் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications