Latest Updates
-
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க
1 வருடத்திற்கு பின் மகரத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: பிப்ரவரி மாசம் இந்த 3 ராசிக்கு செமயா இருக்கும்...
Budhaditya Rajyoga In Capricorn 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களின் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அப்படி ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் ஒன்றிணையும் போது உருவாகும் யோகம் தான் புதாதித்ய ராஜயோகம். இந்த ராஜயோகம் மகர ராசியில் சுமார் 1 வருடத்திற்கு பின் உருவாகிறது.

ஏற்கனவே சூரியன் ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் பிப்ரவரி 01 ஆம் தேதி புதனும் மகர ராசியில் நுழையவுள்ளார். இப்படி புதன் நுழைவதால் பிப்ரவரி 01 ஆம் தேதி புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி உருவாகும் ராஜயோகத்தால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளையும் பெறவுள்ளார்கள். இப்போது புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலர் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரத்தை செலவிடுவார்கள். இக்காலத்தில் உங்கள் வாதுக்கைத் துணையும் முன்னேறலாம். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெற வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலைத் தேடிக் கொண்டிருந்தால், ஒரு புதிய வேலை இக்காலத்தில் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்க்ள். உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல சாதகமான பலன்களைப் பெறக்கூடும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலையில் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலை வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இக்காலத்தில் அதை செய்தால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications