Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
1 வருடத்திற்கு பின் மகரத்தில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: பிப்ரவரி மாசம் இந்த 3 ராசிக்கு செமயா இருக்கும்...
Budhaditya Rajyoga In Capricorn 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் நமது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களின் கிரகங்கள் மற்ற கிரகங்களுடன் இணைந்து பயணிக்கும். அப்படி ஒன்றிணையும் போது சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அந்த யோகங்களும் மனித வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனும், கிரகங்களின் இளவரசனாக கருதப்படும் புதனும் ஒன்றிணையும் போது உருவாகும் யோகம் தான் புதாதித்ய ராஜயோகம். இந்த ராஜயோகம் மகர ராசியில் சுமார் 1 வருடத்திற்கு பின் உருவாகிறது.

ஏற்கனவே சூரியன் ஜனவரி 14 ஆம் தேதி மகர ராசிக்குள் நுழைந்தார். இந்நிலையில் பிப்ரவரி 01 ஆம் தேதி புதனும் மகர ராசியில் நுழையவுள்ளார். இப்படி புதன் நுழைவதால் பிப்ரவரி 01 ஆம் தேதி புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இப்படி உருவாகும் ராஜயோகத்தால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 3 ராசிக்காரர்கள் இந்த ராஜயோகத்தால் நல்ல நிதி நன்மைகளையும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளையும் பெறவுள்ளார்கள். இப்போது புதாதித்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலர் இக்காலத்தில் நல்ல செய்திகளைப் பெறக்கூடும். திருமணமானவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையுடன் இனிமையான நேரத்தை செலவிடுவார்கள். இக்காலத்தில் உங்கள் வாதுக்கைத் துணையும் முன்னேறலாம். திருமணமாகாதவர்கள் நல்ல வரனைப் பெற வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 2 ஆவது வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் திடீர் நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக வேலைத் தேடிக் கொண்டிருந்தால், ஒரு புதிய வேலை இக்காலத்தில் கிடைக்கும். வேலை மற்றும் வணிகத்தில் சாதகமான முடிவுகளைப் பெறக்கூடும். திட்டமிட்ட வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். பேச்சால் பல காரியங்களை சாதிப்பீர்க்ள். உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
மேஷம்
மேஷ ராசியின் 10 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல சாதகமான பலன்களைப் பெறக்கூடும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். நிதி நிலை வலுவடையும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வேலையில் வெற்றி காண்பீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலை வெற்றிகரமாக முடிவடையும். புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், இக்காலத்தில் அதை செய்தால் நல்ல வளர்ச்சியைக் காணலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











