Latest Updates
-
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் தூக்கிலிடப்படும் முதல் பெண் இவர்தான்...இவர் செய்த அந்த கொடும் குற்றம் என்ன?
சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக ஒரு பெண்ணை தூக்கிலிட்டது உத்திர பிரதேசத்தின் மதுரா மாவட்ட சிறைதான். 38 வயதான ஷப்னம் அலி, அவரது தாய், தந்தை, இரண்டு சகோதரர்கள், மைத்துனர், உறவினர் மற்றும் 10 மாத மருமகன் ஆகிய ஏழு பேரைக் கொல்வதற்காக அவர்களுக்கு மயக்க மருந்து கலந்த பாலை பரிமாறி பின்னர் அவர்களின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

ஷப்னம் அலி யார்?
உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் பிரிவில் உள்ள அம்ரோஹாவிலிருந்து 20 கிமீ தொலைவில் உள்ள பவான்கேரி என்ற கிராமத்தைச் சேர்ந்த ஷப்னம் ஆங்கிலம் மற்றும் புவியியலில் இரட்டை எம்.ஏ பெற்ற பட்டதாரி ஆவார். இவ்வளவு படித்த பெண் ஏன் இத்தனை கொலைகள் செய்தார்?
அவர் தனது குடும்ப உறுப்பினர்களைக் கொலை செய்வதற்கு முன்பு, ஒரு பள்ளி ஆசிரியராகப் பணிபுரிந்தார், அவர் கிராமப் பள்ளியில் கற்பித்தார் மற்றும் அந்த பள்ளி மாணவர்களுக்கு மிகவும் பிடித்தவராக இருந்தார்.
ஷப்னத்தின் மாமா, சத்தார் அலி, அவரை ஒரு தைரியமான பெண் என்று விவரிக்கிறார், மேலும் இவ்வளவு பணிவான ஒரு பெண் தன் காதலனுக்காக தனது குடும்பத்தையே கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்று கூறினார்.
போதைப்பொருள் கொடுத்து கொலை
ஏப்ரல் 14 மற்றும் 15, 2008 நள்ளிரவில், ஷப்னம் தனது குடும்பத்தினருக்கு போதைப்பொருள் கொடுத்து தூங்க வைத்து விட்டு அவர்களின் கழுத்தை அறுத்து படுகொலை செய்தார். இந்த கொடூர சம்பவத்தின் போது அவரது காதலர் சலீமால் 7 வார கர்ப்பிணியாக இருந்தார். சலீமுடனான உறவுக்கு ஷப்னத்தின் குடும்ப உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும் வெவ்வேறு சமூக-பொருளாதார பின்னணி மற்றும் சாதியிலிருந்து வந்தவர்கள்.
ஷப்னம் அலியின் குடும்பம், சைஃபி முஸ்லீம்கள், அவர்கள் பெரும் நில உரிமையாளர்களாக இருந்தனர், அதே சமயம் சலீம் வேறொரு பிரிவைச் சேர்ந்தவர், மேலும் ஆறாம் வகுப்போடு படிப்பை நிறுத்திவிட்டு, தினசரி கூலியாக வேலை செய்தார்.
ஷப்னமின் குடும்பத்திற்கு சுமார் 30 பிகா நிலம் இருந்தது. அவரது தந்தை உள்ளூர் கல்லூரியில் கலை ஆசிரியராக இருந்தார். சலீமுடனான காதல் ஷப்னத்தின் காதலால் குடும்பத்தில் பதட்டமான சூழல் நிலவியது.
உத்திரபிரதேசத்தில் உள்ள அம்ரோஹாவில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 2010-ல் ஷப்னம் மற்றும் சலீம் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. அடுத்த 11 ஆண்டுகளில், ஷப்னம் அலகாபாத் உயர் நீதிமன்றம், ஜனாதிபதி மற்றும் இரண்டு முறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவரது மறுஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இருப்பினும், அவர் இன்னும் அனைத்து நீதித்துறை தீர்வுகளையும் முயற்சி செய்து பார்த்தார்.
ராம்பூர் சிறையில் அடைக்கப்பட்ட ஷப்னம், 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மதுரா சிறையில் தூக்கிலிடப்படுவார். இதன் மூலம், சுதந்திர இந்தியாவில் தூக்கிலிடப்படும் முதல் பெண் கைதி என்ற பெயரை அவர் பெறுவார் என்று அறிவிக்கப்பட்டது.
அம்ரோஹாவின் பவான்கெடி படுகொலை நடந்து 13 வருடங்கள் கழித்து அவர்கள் தூக்கிலிடப்படும் ஆணை வந்தது. ஷப்னமும் சலீமும் தூக்கிலிடப்படும் நாளுக்காக ஷப்னத்தின் மாமா சத்தார் அலியும் அத்தை பாத்திமாவும் ஆவலுடன் காத்திருந்தனர். தங்களுடைய மருமகள் மீது அவர்களுக்கு துளியும் அனுதாபம் இல்லை. அவர்களின் கூற்றுப்படி, தூக்கிலிடப்பட்டால் மட்டுமே கொல்லப்பட்ட உறவினர்களுக்கு நீதி கிடைக்கும்.
படுகொலை செய்யப்பட்டதில் இருந்து சகோதரர் ஷௌகத் அலி வீட்டில் சத்தார் வசித்து வருகிறார். ஒவ்வொரு வருடமும் வீட்டின் ஒரு ஓரத்தில் கட்டப்பட்டுள்ள ஏழு கல்லறைகளை சுத்தம் செய்து தங்கள் குடும்பத்தை அவர்கள் நினைவு கூறுவார்கள். உண்மையில், ஷப்னத்தின் செயல்களால் ஏற்பட்ட வடுக்களால், பவான்கெடியில் உள்ள எந்தக் குடும்பமும் தங்கள் மகளுக்கு ஷப்னம் என்று பெயரிடவில்லை. புலந்த்ஷாஹரைச் சேர்ந்த தம்பதிகளான பத்திரிகையாளர் உஸ்மான் சைஃபி மற்றும் அவரது மனைவி வந்தனா ஆகியோரால் ஷப்னம் அலியின் மகன் தத்தெடுக்கப்பட்டார். இத்தனை வெறுப்புகளுக்கும் ஷப்னம் தகுதியானவர்தான். அவரின் மரணம் தற்போது வரை தள்ளி போயிருக்கிறது ஆனால் உறுதியானது.
மற்ற பெண் மரண தண்டனை கைதிகள்
- வளர்ப்பு சகோதரிகள் ரேணுகா ஷிண்டே மற்றும் சீமா கவிட் ஆகியோர் 13 குழந்தைகளை கடத்தி அவர்களில் குறைந்தது ஐந்து பேரைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர்.
- லக்னோவைச் சேர்ந்த ராம்ஸ்ரீ என்ற பெண்ணுக்கு 1998 இல் மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் அவர் சிறையில் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு அது ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.



Click it and Unblock the Notifications
