Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
சனியால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Saturn Made Kendra Trikona Rajyoga: வேத ஜோதிடத்தில் சனி பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் சனி பகவான் ராசியை மாற்ற இரண்டரை ஆண்டுகள் ஆகும். இதனால் சனி பகவானின் தாக்கம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் அதிகமாகவே இருக்கும்.
மேலும் கிரகங்கள் ராசியை மாற்றும் போது, சில சமயங்களில் சுப அல்லது அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களும் அனைத்து ராசிகளிலுமே தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சனி பகவான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.

கும்ப ராசியில் சனி பகவான் நுழைந்ததால், கேந்திர திரிகோண ராஜயோகத்தை உருவாக்கினார். இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகத்தால் சிம்ம ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவைப் பெறுவார்கள். பணியிடத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுவார்கள். கூட்டு தொழில் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். குழந்தைகளால் சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் விளைவாக இந்த ராசிக்காரர்கள் தொழிலில் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வுகளும் கிடைக்கலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்புக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் பல ஆசைகளை நிறைவேறும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி பகவான் உள்ளார். இதனால் இந்த வீட்டில் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களை ஈர்ப்பதில் வல்லவராக இருப்பார்கள். குடும்ப சூழல் சிறப்பாக இருக்கும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் நல்ல சிறப்பான பலனைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications