Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
வரலாறு முழுவதும் இந்தியா பல்வேறு வம்சத்தினரால் ஆளப்பட்டுள்ளது. இந்தியாவை ஆண்ட மாபெரும் சாம்ராஜ்ஜியத்தனர் முதல் சின்ன சின்ன அரசக் குடும்பங்கள் கூட ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தார்கள், இன்றும் வாழ்கிறார்கள். ஜூலை 1971 இல், இந்திய அரசியலமைப்பின் 26 வது திருத்தம் நாட்டில் முடியாட்சியை ஒழிப்பதாக அறிவித்தது மற்றும் நவீன உலகில் அடியெடுத்து வைத்தது.

இந்த நேரத்தில் பல அரச குடும்பங்கள் தங்கள் அந்தஸ்து, புகழ் மற்றும் அதிர்ஷ்டத்தை இழந்தாலும், சில அரச குடும்பத்தினர் தங்கள் எதிர்காலத்திற்காக பெரும் செல்வத்தை பாதுகாத்து வைத்தனர், அவர்கள் தங்கள் மூதாதையர் சொத்துக்களையும் செல்வத்தையும் தங்கள் மூலதனமாக மாற்றி, ஆடம்பர வாழ்க்கையைத் தொடர்கின்றனர். சாதாரண மக்களால் கற்பனை செய்ய முடியாத செல்வங்களைக் கொண்ட இந்தியாவின் பணக்கார அரச குடும்பங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேவார் வம்சம்
மேவார் வம்சம் இந்தியாவின் பழமையான மற்றும் மிகவும் பிரபலமான அரச பரம்பரைகளில் ஒன்றாகும். மஹாராணா பிரதாப் போன்ற இந்தியாவின் புகழ்பெற்ற அரசர்கள் இந்த வம்சத்தை சேர்ந்தவர்தான், இது இந்தியாவில் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட அரச குடும்பங்கள் ஒன்றாக இருந்தது.
தற்போது வம்சத்தின் 76வது பாதுகாவலரான ராணா ஸ்ரீஜி அரவிந்த் சிங் மேவார் தலைமையிலான குடும்பம், ராஜஸ்தானின் உதய்பூரில் வசிக்கிறார்கள். தற்போது அவர்கள் ராஜஸ்தான் முழுவதும் பாரம்பரிய ஹோட்டல்கள், ஓய்வு விடுதிகள் மற்றும் தொண்டு நிறுவனங்களை வைத்திருக்கிறது. HRH குரூப் ஆஃப் ஹோட்டல்கள் உட்பட, அவர்கள் 10 மிகப்பெரிய ஹோட்டல்களை வைத்துள்ளனர்.
ஜெய்ப்பூரின் அரச குடும்பம்
ஜெய்ப்பூரின் அரச குடும்பம் கச்வாஹாஸ் என்று அழைக்கப்படும் ராஜபுத்திர குலத்தின் வழித்தோன்றல்கள் என்று கூறப்படுகிறது, அவர்கள் ராமரின் மகன் குசா அவர்களின் வம்சாவளியை உரிமை கொண்டாடுகிறார்கள். பவானி சிங் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் கடைசி ஆண் வாரிசாவார்.
அவருக்கு மகன்கள் இல்லாததால், அவர் தனது மகளின் மகனான பத்மநாப் சிங்கை, ஜெய்ப்பூர் மகாராஜாவாக அறிவித்தார். அறிக்கையின்படி, அரச குடும்பத்தின் தற்போதைய மதிப்பு கூட்டுச் செல்வங்களின் மதிப்பு சுமார் 2.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் இந்திய மதிப்பு கிட்டதட்ட 20,000 கோடியாகும்.
வாடியார் அரச குடும்பம்
யதுவீர கிருஷ்ணதத்த சாமராஜ வாடியார் தற்போது மைசூர் மகாராஜாவாகவும் வாடியார் வம்சத்தின் தலைவராகவும் உள்ளார். ராஜாவின் மாமா ஸ்ரீகண்டதத்தாவால் தொடங்கப்பட்ட தி ராயல் சில்க் ஆஃப் மைசூர் என்று அழைக்கப்படும் மிகவும் பிரபலமான பட்டு பிராண்ட் இந்த குடும்பத்திற்கு சொந்தமானது. அதுமட்டுமின்றி, இந்த அரச குடும்பத்துக்கு 10,000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், நிலங்கள் மற்றும் இடங்கள் உள்ளன.
ராஜ்கோட்டின் அரச குடும்பம்
தற்போது யுவராஜ் மந்ததாசின் ஜடேஜா தலைமையில், ராஜ்கோட்டின் அரச குடும்பம் மட்டுமே, தங்கள் மூதாதையர் சொத்துக்களை ஹோட்டல்களாகவும், சொகுசு அரண்மனைகளாகவும் மாற்றும் எண்ணத்திலிருந்து விலகி, நீர்மின் நிலையங்கள் மற்றும் உயிரி எரிபொருள் மேம்பாடு என முதலீடு செய்து இந்தியாவின் பணக்கார அரச குடும்பங்களில் ஒன்றாகி இருக்கிறது.
பட்டோடி நவாப் குடும்பம்
பட்டோடி குடும்பம், இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியின் கடைசி தலைவரும் முன்னாள் கேப்டனுமான மன்சூர் அலி கான் பட்டோடி தலைமையில் இருந்தது. தற்போது பாலிவுட் நடிகரான சைஃப் அலி கான் தலைமையில் உள்ளது.
நவாப் தனது நடிப்பு வாழ்க்கையிலிருந்து சம்பாதிப்பதைத் தவிர, படோடி குடும்பத்தின் மூதாதையர் அரண்மனையான இப்ராஹிம் அரண்மனையையும் சொந்தமாகக் கொண்டுள்ளார், இது தற்போது சுற்றுலாப் பயணிகளுக்காக நீம்ரானா ஹோட்டல்களாக நடத்தப்படுகிறது. அவரது சொத்து மதிப்பு ரூ. 2,83,10,80,000 ஆகும், அதே நேரத்தில் அவரது பட்டோடி சொத்தின் ரியல் எஸ்டேட் மதிப்பு ₹750 கோடிக்கு மேல் இருக்கும் என்று கருதப்படுகிறது.
பரோடாவின் கெய்க்வாட்ஸ்
சமர்ஜித்சிங் கெய்க்வாட் தற்போது பரோடாவின் அரச குடும்பத்தின் தலைவராக உள்ளார். புனேவிலிருந்து தோன்றிய மூதாதையர் குடும்பம் 18 ஆம் நூற்றாண்டில் பரோடாவில் குடியேறியது. 20,000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், பக்கிங்ஹாம் அரண்மனையை விட நான்கு மடங்கு பெரியதாகக் கூறப்படும் லக்ஷ்மி விலாஸ் அரண்மனையையும் இந்த அரச குடும்பம் வைத்துள்ளது.
ஜோத்பூரின் அரச குடும்பம்
ஜோத்பூரின் அரச குடும்பம் இந்தியாவின் மிகப்பெரிய அரசக் குடும்பங்களில் ஒன்றாகும் மற்றும் இந்தியாவின் சிறந்த சொகுசு ஹோட்டல்கள் மற்றும் அரண்மனைகளின் உரிமையாளர்கள் அவர்கள்தான். தற்போது, மகாராஜா கஜ் சிங் II அரசக்குடும்பத்தின் தலைவராக உள்ளார், மேலும் இந்த குடும்பம் உலகின் மிகப்பெரிய கோட்டைகளில் ஒன்றாக ஜோத்பூரில் உள்ள உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமான உமைத் பவனையும், மெஹ்ரான்கர் கோட்டையையும் கொண்டுள்ளது.



Click it and Unblock the Notifications
