Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
வக்ர சுக்கிரன் உருவாக்கிய விபரீத ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு திடீர் பண வரவும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படும்..
Retrograde Venus Made Vipreet Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்களின் போது சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகக்கூடும். பொதுவாக ராஜயோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருக்கும் போது உருவாகும்.
அந்த வகையில் கடக ராசியில் வக்ரமாக இருக்கும் சுக்கிரன் அஸ்தமன நிலையில் உள்ளார். இப்படி சுக்கிரன் கடக ராசியில் வக்ரமாக இருப்பதால், விபரீத ராஜயோகம் உருவாகியுள்ளது.

விபரீத ராஜயோகம் என்பது எதிர்பாராத நற்பலன்களை வாரி வழங்கக்கூடிய ராஜயோகம். அதாவது இந்த ராஜயோகமானது ஆண்டியையும் அரசனாக்கும் சக்தி கொண்டது. இப்படிப்பட்ட ராஜயோகம் தான் தற்போது உருவாகியுள்ளது.
இந்த ராஜயோகத்தினால் 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. அதுவும் இந்த ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பண வரவும், தொழிலில் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது அற்புதமான பலன்களை வழங்கவுள்ளது. இந்த யோகத்தின் போது சுக்கிரன் 3 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத பண வரவைப் பெறுவார்கள். புதிய சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் தேடி வரும். பங்கு சந்தையில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைக்கும்.
மார்கெட்டிங் துறையில் இருப்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆனால் ஆரோக்கியம் சற்று மோசமாகும். விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
சிம்மம்
சிம்ம ராசிக்கார்களுக்கு விபரீத ராஜயோகமானது அபரிமிதமான நற்பலன்களை வழங்கவுள்ளது. சுக்கிரன் 12 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் தொழில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேலும் நீதிமன்ற வழக்குகள் நீண்ட காலமாக நடந்து வந்தால், இக்காலத்தில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு இந்த யோக காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு விபரீத ராஜயோகமானது சிறப்பான பலன்களை வழங்கும். ஏனெனில் சுக்கிரன் 8 ஆவது வீட்டில் உள்ளார். இதனால் இக்காலத்தில் சிக்கிய பணம் கைக்கு திரும்ப கிடைக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும்.
வருமானத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான துறையில் வேலை செய்பவர்களுக்கு இக்காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் விபத்து ஏற்படும் ஆபத்துள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











